இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயம் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள், பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு,: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் பலி: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டு மூன்று நாட்களாகியும் இதுவரையில் கர்நாடகா அரசின் சார்பில் உரிய நீதி விசாரணையோ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் கர்நாடக அரசின் போக்குவரத்துக் கழக பேருந்தை சிறைபிடித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் உயிரிழந்த தமிழர்களுக்கு நீதி கேட்டு போராட்டம். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் (அனூர்) தாலுகாவில் அமைந்துள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தப் பகுதியில் வசித்து வந்த ஆண்டனி சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42) மற்றும் குமார் (35) ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்தனர். மேலும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இராணுவ முகாம், மற்றும் விகாரை க்குள். தமிழ்மக்கள் படுகொலை செய்து புதைக்கப் பட்டு ள்ளனர்;

வட, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், விகாரைகளுக்குள்ளும் தமிழ்மக்கள் படுகொலைசெய்து புதைக்கப்பட்டுள்ளனர்; அகழ்வாய்வுகளுக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எனவே தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளை பாதுகாக்கும் அரணாக வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவமுகாம்களையும், விகாரைகளையும் பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இராணுவ முகாம்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றிவிட்டு சர்வதேச மேற்பார்வையில் இராணுவ முகாம்களையும், விகாரைகளையும் அகழ்வாய்விற்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீதான இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு பன்னாட்டு நீதிகோரி தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 17.08.2026இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட நீதியின் ஓலம் – 02′…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அபிவிருத்தி உத்தி யோகத்தர் களின் பிரச்சினையை விசாரிக்க சுயாதீன விசாரணைக் குழு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். வடக்கு மாகாணசபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்று (17.08.2026) காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை இவர்களில் ஐந்து பிரதிநிதிகளுக்கு ஆளுநரை நேரில் சந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்க சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் செம்மணியில் அகழ்ந்து எடுக்கப் படும் மனித எச்சங்களுக்கு சர்வதேச நீதி கோரி பேரணி

  யாழ்ப்பாணம் – 17.08.2026 செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித எச்சங்களுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணரவும், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகளுக்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தரவும் கோரி இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வாசிகசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, கோயில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அகழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடனும் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நயினாதீவு படகு விபத்து. மீட்கப்பட்ட 10 பேர். யாழ் போதனா வைத்தியசாலையில்.

நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிகட்டுவான் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி இரண்டு படகு இயக்குநர்கள் உட்பட 10 பேருடன் பயணித்த குறித்த படகு நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை கடலில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்தது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்பட்ட போதிலும், காணாமல் போன படகையும் அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டனர். இதன்போது, கடல் சீற்றத்துக்கு மத்தியிலும் காணாமல் போயிருந்த படகையும் அதில் பயணித்த 10 பேரையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதனையடுத்து, மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்தனர். அத்துடன் அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். இந்த நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவும் நிகழ்ச்சித் திட்டம்

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட துறைசார் மன்றத்துடன் இணைந்து, ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவுதல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் கொழும்பில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சித்திட்டம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அரச சேவை மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் சாந்தி வீரசிங்க உள்ளிட்ட அப்பிரிவின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. துறைசார் மன்றங்கள் அமைக்கப்படும் விதங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அரச அதிகாரிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த வீரசிங்க, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தீபா லியனகே, தபால் மாஅதிபர் ருவன் சத்குமார, அரச…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.  ஈழத்தமிழர் வரலாற்றுப் பக்கங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய ‘செஞ்சோலை படுகொலை’ நடந்து இன்றோடு (2006 ஆகஸ்ட் 14 – 2026 ஆகஸ்ட் 14) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில், முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை விமானப்படை நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 16 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவிகள், முதலுதவி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வல்லிபுனத்திலுள்ள செஞ்சோலை வளாகத்தில் தங்கியிருந்தனர். ஆகஸ்ட் 14 காலை 7:00 மணியளவில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிஃபிர் (Kfir) போர் விமானங்கள்,…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர் வெழுச்சியுடன் முன்னெடுப்பு;

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சி.குகநேசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வானது, படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான சி.குகநேசன், இ.கிரிதரன், அ.சற்குணதாஸ், த.தர்மலவன், ஜீ.ராதிகா, சு.வளர்மதி, மு.கஜேந்தினி, முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ச.ஜீவராசா, சமூகசெயற்பாட்டாளர் த.யோகேஷ்வரன், பொதுகமக்கள் எனம் பலரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் படிக்க