அண்மை செய்தி உலக செய்திகள் 

‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் போர்க் குற்றத்திற்கு இணையான ஒரு செயல்”எஸ்மாயில் பாகேய்

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தினை “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்” என ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் வர்ணித்துள்ளார். இந்திய கடற்படையுடனான கூட்டு கடற்படை பயிற்சி மற்றும் துறைமுக விஜயத்திற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கடந்த புதன்கிழமை இந்தியா மற்றும் இலங்கை கடற்கரையோரங்களுக்கு அருகில் இக்கப்பல் தாக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,இத்தாக்குதலை “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்” என வர்ணித்துள்ளதுடன், “கடற்படையினரை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா திட்டமிட்டே தடுத்தது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தில் 104 கடற்படையினர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்களில் 84 பேரின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஈரானுக்கு விரைவில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார ஆறுதல் செய்தி.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு முக்கியமான ஆறுதல் செய்தியை வழங்கியுள்ளார். கொழும்பில் நேற்று  நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவினாலும், இலங்கை அரசு முன்நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மத்திய கிழக்கு மோதல்களால் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான கையிருப்பு இலங்கையிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், தட்டுப்பாடின்றி விநியோகத்தைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும், தற்போதைய சர்வதேச பதற்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.”நாட்டின் வளங்களை நாம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார ஊழியர் களுக்குக் கடும் எச்சரிக்கை பணிக்கு வராதோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சில ஊழியர்கள் பணிக்குச் சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை முதன்மை நிறைவேற்று அதிகாரிகளான பொறியியலாளர் எஸ்.ஐ. குமார மற்றும் பொறியியலாளர் என்.எஸ். வெத்தசிங்க ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய நிறுவனங்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற போதிலும், அதன் மூலம் ஊழியர்கள் தமது உடனடிக் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என முகாமைத்துவம் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் புறக்கணிப்பவர்களுக்கு எதிராக, அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் கடும் ஒழுக்காற்று மற்றும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்.பல்கலைக் கழகத்தில் குற்றத் தடுப்பு காவல்துறை யினரால் விசாரணை!

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், பல்கலைக்கழகப் பதிவாளரும் குற்றத் தடுப்பு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து வந்த விசேட உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவின் குற்றத்தடுப்பு பணியக அதிகாரிகளே நேற்று(11) இந்த விசாரணை மேற்கொண்டதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.பல்கலைக்கழகத்தில் இருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள், ஆதாரங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலே விசாரணை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது காவல்துறை குற்றத்தடுப்பு பணியக வாகனம் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்துக்குள் வந்து, அதிகாரிகள் பதிவாளர் அலுவலகத்தில் நீண்டநேரமாக வாக்குமூலம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஊவா பரணகம பாரிய சட்டவிரோத மது உற்பத்தி, விற்பனை நிலையம் முற்றுகை

ஊவா பரணகம பிரதேச தோட்ட மக்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக சட்ட விரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வந்த 08 நபர்களை கைதுசெய்த பொலிஸார் அவர்களிடமிருந்து 750 லீற்றர் கோடா,190 லீற்றர் கரும்புப் பாணி ஆகிய உற்பத்தி மூலப்பொருட்கள் மற்றும் 25 லீற்றர் கசிப்பையும் மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஊவா பரணகம பொலிஸாருக்குக் பொது மக்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பிரதேசத்திற்குட்பட்ட வோல்டிமார், கீரியகொல்ல மற்றும் தும்பவத்தை பகுதிகளில் உள்ள தோட்ட மக்களை குறிவைத்து நீண்ட காலமாக செயல்பட்டு வந்த பாரிய அளவிலான சட்ட விரோத மதுபான (கசிப்பு) நிலையமொன்றை நேற்று முன்தினம் (09) சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இதன்போது ஊவா பரணகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம். அபேசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இந்நடவடிக்கையின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

டிப்பர் வாகனத்தை இடைமறித்து சாரதி மீது தாக்குதல்

மாங்குளத்திற்கும், முறிகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தை இடைமறித்து சாரதி மீது மது போதையில் வந்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று(10) இடம் பெற்றுள்ளது.சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுவரும் இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சட்டவிரோத மணல் அகழ்வில் தாங்கள் ஈடுபடும் தகவலை பொலிஸாருக்கு வழங்கினார் எனத் தெரிவித்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ். மருத்துவ பீடத்தில் நவீன நரம்புத் தூண்டல் முறை குறித்து கலந்துரையாடல்

நவீன நரம்புத் தூண்டல் முறையான Transcranial Magnetic Stimulation (TMS) தொடர்பான கலந்துரையாடல், யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட CTRB மண்டபத்தில் இன்று  இடம்பெற்றது.அமெரிக்காவைச் சேர்ந்த “நவீன நரம்புத் தூண்டல்” (TMS)  வைத்திய நிபுணர் தாரிக் பெரேரா வளவாளராக கலந்துகொண்டிருந்தார். இதன்போது TMS முறையின் அடிப்படை கோட்பாடுகள், மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் மனநலத் துறையில் அதன் எதிர்கால பங்கு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மனநல மருத்துவத் துறை ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக அரசியல். கட்டுரை 

அமெரிக்கா–ஈரான் போர், முஜ்தபா காமெனியின் எழுச்சி மற்றும் பழைய உலக ஒழுங்கின் வீழ்ச்சி

புதிய உலகளாவிய மகா யுத்தம் : அமெரிக்கா–ஈரான் போர், முஜ்தபா காமெனியின் எழுச்சி மற்றும் பழைய உலக ஒழுங்கின் வீழ்ச்சி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர் : ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✧ உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் மத்திய கிழக்கு போர் மத்திய கிழக்கு பிராந்தியம் 21-ஆம் நூற்றாண்டின் மிக ஆபத்தான இராணுவ மோதல்களில் ஒன்றுக்குள் நுழைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் இந்தப் போர், தற்போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள், ரஷ்யாவின் மூலோபாய ஆதரவு மற்றும் சீனாவின் உளவுத்துறை கண்காணிப்பு ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்து, ஒரு பிராந்திய மோதலிலிருந்து உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மோதலாக வேகமாக உருவெடுத்து வருகிறது. ஈரானின் இராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் – இளவாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த குடும்பஸ்தர் சடலமாக தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார். இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், சடலத்தை மீட்ட இளவாலை பொலிஸார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

துப்பாக்கிச் சூட்டுக் குப் பலியான சிறுவனின் கொலை க்கு நீதி வேண்டி போராட்டம்

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச்  சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள் ஃபயாஸ் சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகள் காவல்துறைனருக்கு எதிரான கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் கலந்துகொண்டனர். குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமானது.போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில், நீதிமன்ற காவல்துறையினரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள், ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது,  காவல்துறையினரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய…

மேலும் படிக்க