அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பேருந்து கட்டணங் களை அதிகரிக்க வேண்டும் தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த விலை உயர்வை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்தநிலையில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இராணுவ நடவடிக் கையை பிரான்ஸ் ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான ஒரு “முன்னோடியில்லாத” இராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, பிரான்ஸ் தனது கடற்படையின் ஒரு பெரும் பகுதியை மத்திய கிழக்கு கடற்பரப்பில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.இது ஒரு தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான நடவடிக்கை என பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஈரானின் தற் போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படு கொலை யினை மீளவும் நினைவு படுத்துகிறது: சிறீதரன்

ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு……! ​”சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது” எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். ​”சுதந்திரப்பறவைகள்” மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் தின நிகழ்வில், முதன்மை அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ​அவர் மேலும் தெரிவிக்கையில்: ​”ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள். உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று…

மேலும் படிக்க
அண்மை செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு!

திருச்சி: திருச்சி சிறுகனூரில், ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் பெயரில் திமுக மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. 10 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடக்கும் இம்மாநாடு, திமுகவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும். திரைப்பட இசையமைப்பாளர் தேவா மற்றும் இசைக் கலைஞர் அப்துல் குத்தூஸின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி, தொண்டர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு மேடைக்குச் செல்வார். மாநாட்டிற்காக 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் அமரவும், 7 லட்சம் பேர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

முல்லை இளையோ ரின் விளையாட்டு திறனை மேம்படு த்தும் நோக்கில் பூப்பந் தாட்ட பயிற்சி முகாம்

முல்லைத்தீவு மாவட்ட இளையோரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மற்றும் போட்டி   முல்லைத்தீவு மாவட்ட இளையோரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் 13 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இளையோருக்கான பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மற்றும் போட்டி நிகழ்வு நேற்றையதினம் 07.03.2026 சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறை பூப்பந்தாட்ட சங்கம் மற்றும் வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் இணைந்து, தமிழர் புலம்பெயர் பூப்பந்தாட்ட அமைப்பான UBF அமைப்பின் நிதி அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இளையோரின் பூப்பந்தாட்ட விளையாட்டு திறனை வளர்த்தெடுத்து எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுமார் 60 இளையோர் கலந்து கொண்டு பயிற்சியிலும் போட்டியிலும் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்வின் ஆரம்ப…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வெற்றிலைக்கேணி பகுதியில் பனைமரத்தை கடத்த முற்பட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் அதிகளவான பனைமரத்தை கடத்த முற்பட்ட மூவர் மருதங்கேணி  காவல் துறையினரால்.நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் பனைமரங்கள் அழிக்கப்பட்டு வெளி இடங்களுக்கு பனைமரங்கள் அதிகளவாக கடத்தப்படுவதாக மருதங்கேணி காவல் துறைக்கு அதிகளவான முறைப்பாடு கிடைத்திருந்தது. இதனடிப்படையில் விசாரணையை மேற்கொண்டிருந்த காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று (7) இரவு குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.  குறித்த சுற்றிவளைப்பில் அனுமதிபத்திரம் இன்றி கடத்துவதற்காக மறைத்துவைக்கப்பட்ட பனை மரங்களை கண்டறிந்ததுடன் அதனுடன் தொடர்புடைய மூவரை மருதங்கேணி  காவல் துறையினர். கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ்- தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது இன்றையதினம் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு, அணிநடையுடன் போட்டி ஆரம்பமானது. தொடர்ந்து சுவட்டு நிகழ்வுகள், இடைவேளை நிகழ்வு, பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன. கல்லூரியின் முதல்வர் ரி.வரதன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனான வைத்தியர் ரி.நந்தகுமார் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் – ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

படகு விபத்து: அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ்ப்பாணத்தில் நடந்த படகு விபத்தின் முழுமையான காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக கடற்படையினரும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதற்கான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளதோடு, துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி செய்துள்ளார். மேலும், விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார். கடலில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அவர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

அவசர கால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி

அவசர கால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து விடுதலைப்போராட்ட காலத்தில் அவசர கால விதிமுறைக்குள்ளாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அத்தகைய அவசரகாலநிலை தற்போது மீண்டும் இந்தநாட்டில் அறிமுகப்படுத்தப்படும்போது, தமது உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாக தமிழ் மக்கள் இந்த அவசரகால நிலையையும் நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இந்த அவசரகாலநிலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். எனவே சட்ட ஏற்பாட்டுடனான மக்கள் மயப்பட்ட நடவடிக்கைகள், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் உரிமைசார்ந்த போராட்டங்கள் மற்றும் அவர்களின் இயல்பு வாழ்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலை ஒழுங்குவிதிகள் பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்,…

மேலும் படிக்க