அண்மை செய்தி தாயகச் செய்தி 

சிறீதரன் எம்பியை சந்தித்த ஐ.நா வதிவிடப் பிரதிநிதி:

சிறீதரன் எம்பியை சந்தித்த ஐ.நா வதிவிடப் பிரதிநிதி: வடக்கின் நிர்வாக இடைவெளி குறித்து விரிவான கலந்துரையாடல்! ​இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க் கிழமை(24/03/2026) அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமையத்தில் (IOM) நடைபெற்றது. ​இதன்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாரிய நிர்வாக இடைவெளி மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்கள் குறித்து ஐநாவின் வதிவிடப் பிரதிநிதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. ​குறிப்பாக, தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதிகாரப் பரவலாக்கல் சிதைவடைந்து, நிர்வாகக் கட்டமைப்புகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதை அவர் வலியுறுத்தியதோடு, யுத்தத்திற்குப்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கைப்பற்றப் பட்ட போதைப் பொருட் களை விரைவாக அழிக்க புதிய பொறி முறை ஜனாதிபதி!

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான சட்டத் திருத்த வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு எடுக்கும் காலத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இச்செயல்முறையின் போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – சிறீதரன் எம்.பி

உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – செவிப்புலன் வலுவற்றோர் விழாவில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு….! செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (ROOD) 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக்கூட்டமும் அண்மையில் (2026/03/07) யாழ்ப்பாணம், கலட்டியில் அமைந்துள்ள அமையத்தின் தலைமைக் காரியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ​இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், “உலகம் சத்தங்களால் நிறைந்தது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், மௌனத்திற்கு ஒரு வலிமையான மொழி உண்டு என்பதை உங்கள் கண்கள் எனக்கு உணர்த்துகின்றன. ‘செவிப்புலன் அற்றவர்கள்’ என்பது உங்களின் குறைபாடு அல்ல; அது ஒரு தனித்துவமான ஆற்றல். சத்தமில்லாத உலகில் நீங்கள் கட்டியெழுப்பும் அன்புக்கும் கலைக்கும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

திருகோண மலையில் வெற்றுக் காணியி லிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி

திருகோணமலையில் வெற்றுக்காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மூதூர் காவல் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – அப்ரார்நகர் பகுதியில் இருந்தே இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது.குறித்த நடவடிக்கை நேற்று (19-03-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இம்மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.இம்மிதிவெடியில் ஜொனி என்றும் தமிழீழம் என்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளது.யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் இம்மிதிவெடி புதைக்கப்பட்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. இம்மிதிவெடியானது மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் தட்டுப் பாடு காரணமாக வைத்திய சாலைக் கட்டமைப்பைப் பராமரிப் பதில் கடும் சவால்கள்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரிப்பதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இது குறித்து விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணிக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக GMOA தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக நாளை (மார்ச் 17) நாடளாவிய ரீதியிலான பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்த GMOA தீர்மானித்துள்ளது. இதன்போது ஆரம்ப சுகாதார சேவை குறித்த விசேட அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வைத்தியர்களின் கோரிக்கை…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு!

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு! டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கரவெட்டி பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில், இன்றைய தினம் விசேட நிகழ்வொன்று கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. புயல் அனர்த்தத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்த சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு, அரசாங்கத்தின் விசேட நிதியுதவித் திட்டத்தின் கீழ் இழப்பீட்டு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.  நிகழ்வின் சிறப்பம்சங்கள்: * பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு காசோலைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. * தொழில் முயற்சியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீண்டும் செம்மையாக ஆரம்பிப்பதற்கும், தொழிலில் முன்னேற்றமடைவதற்குமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. * அரசாங்கத்தின் இந்த நேரடித் தலையீடு, பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பெரும் உறுதுணையாக அமையும். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் UL232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், மேலதிக உதவிகள் தேவைப்படும் பயணிகள் இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும், சர்வதேச ரீதியாக +94 11 777 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பிரதேச சபையின் வருமான பரிசோதகர் வயலில் பாம்புக் கடிக்கு இலக்கான நிலையில் உயிரிழப்பு

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிவந்த  நபர் ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 55 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரன்  என்பவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவராவார். நேற்று துணுக்காய் பகுதியில் வயலில் வேலை செ‌ய்துகொண்டிருந்த போதே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவர் முன்னாள் துணுக்காய் பிரதேச சபையின் வருமான வ‌ரி பரிசோதகரும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகத்தாவும் தற்போது மாந்தை கிழக்கு  பிரதேச சபையின் வருமான வரி  பரிசோதகராக கடமையாற்றிவந்துள்ளார். இவரது உடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள அதேவேளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதையடுத்து குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதவது, வடமராட்சி பருத்தித்துறை, கிராமக்கோடு பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு, மனைவியின்  தாயாரையும் வாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே மாமனாரை படுகாயப்படுத்திவிட்டு  மாமியாரை படுகொலை செய்துள்ளார். வாள்வெட்டு சம்பவத்தை தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான 5க்கு மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார சபை தொழிற் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கை களுக்கு இணக்கம் தலைவர் நுசித் குமாரதுங்க

மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார். எஞ்சிய இரண்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: முன்வைக்கப்பட்ட 64 கோரிக்கைகளில் பெரும்பாலானவை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அதே சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இதில் 59 கோரிக்கைகளுக்கு முதற்கட்டக் கலந்துரையாடலின் போதே பணிப்பாளர் சபை இணக்கம் தெரிவித்திருந்தது. அதன் பின்னர் 5 கோரிக்கைகள் எஞ்சியிருந்ததுடன், அவை குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானமொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இறுதியாக எஞ்சியுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க