சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையின் சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் :

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் இதனைக் குறிப்பிட்டார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போராட்டமானது சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ரூ. 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா மற்றும் மருமகன் கைது

ரூ.2 கோடி 30 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேகநபர்களை சம்மாந்துறை  காவல்துறை.கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை.பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றில் நேற்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கைதான 49 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரது வாக்குமூலம் மற்றும் சம்மாந்துறை  காவல்துறை.நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துறை புற நகர் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்  காவல்துறை.அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பிரகாரம் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான என். றிபாய்டீன் தலைமையிலான காவல்துறை.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். அருட்தந்தை மா.சக்திவேல்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். பயங்கர வாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி, ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது சிங்கம் போன்ற கொடிய முகத்துடன், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்காக வரைபை வெளியிட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(30.01.2026) கொழும்பு – நீதி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிவில் செயற்பட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அருட்தந்தை மா.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை மா.சக்திவேல், “ ஜெ. ஆர். ஜெயவர்த்தனவிற்கு இல்லாத கொடிய முகம் ஒன்று அநுரவிற்கு இருக்கிறது. இந்த சிங்கம் தெற்கில் உள்ள தமிழ் மக்களை வேட்டையாட காத்திருக்கிறது. இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழர்கள் சூரையாடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள்உளவாளிகள்.சி.சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் நுழைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் , தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.   அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார்.   அதேபோல் சாணக்கியன் எம்.பி எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாமல் உள்வாங்கப்பட்டு விட்டார். உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. அவர் எப்படி அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அது மர்மமாகவே இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது குற்றமாகும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அனுமதி பெறாமல் இலச்சினையைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கெதராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம், எதிர்வரும் 2026, பெப்ரவரி மாதம், 19,20,21,22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதன் போது பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் பல்கலைக்கழக இலச்சினை பொறிக்கப்பட்ட கழுத்துமாலை, பட்டச் சான்றிதழ் சுருள் மற்றும் பல்கலைக்கழகப் இலச்சினை பொறிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் என்பன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படுவதாகப் பலகலைக்கழக நிர்வாகம் அறிகிறது. இது சட்டப்படி குற்றச்செயலொன்றாகும். பல்கலைக்கழக மூதவை மற்றும் பேரவையின் அனுமதியுடன், நடைமுறைகளின் ஊடாக பல்கலைக்கழக இலச்சினையைப் பயன்படுவதற்குப் பதிவாளரிடமிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட வேண்டும்.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவ மனையாக தரம் உயர்த்த நடவடிக்கை

யாழ் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவ மனையாக தரம் உயர்த்த நடவடிக்கை மருத்துவர் நிஹால் அபேசிங்கே   தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்த பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை, தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்த விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் மருத்துவர் நிஹால் அபேசிங்கே தலைமையில் கூடியது. இதன்போது, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நிறுவன மதிப்பாய்வு இடம்பெற்றது. இதன்போது தற்போது வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சேவைகளை மேலும் மேம்படுத்தவும் மேலதிக ஊழியர்களின் தேவை அதிகரித்து வருவதாக யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மருத்துவமனையை தேசிய மருத்துவமனையின் நிலைக்கு மேம்படுத்த வேண்டியதன் அவசியமும் எடுத்துக் கூறப்பட்டது இந்த நிலையில் தேவையான அளவுகோல்களை பூர்த்தி…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அம்மையார்,யாழ்பல்கலைக் கழகத்துக்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அம்மையார், நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த இரு நாட்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர்,நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்தும் கலந்துரையாடினார். இச்சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் உட்பட சமகால விடயங்கள் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கனேடியத் தூதரக அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

நெல்சந்தைப்படுத்தல் தாமதமாகினால் மாவட்ட செயலகத்தை முற்றுகை ரவிகரன் எம்.பி

நெல்சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு தாமதமாகினால் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெறும்; ரவிகரன் எம்.பி எச்சரிக்கை நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல்சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு தாமதமாகினால் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விவசாயிகளுடன் இணைந்து முற்றுகைப் போராட்டம் ஒன்று இடம்பெறும் எனவும் எச்சரித்துள்ளார். முல்லைத்தீவு – மாவட்டசெயலகத்தில் 27.01.2026இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பெரும்போக நெல்அறுவடை வன்னி உட்பட வடக்கு கிழக்கெங்கும் மும்முரமாக இடம்பெற்றுவரும்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விரைந்து நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு கடந்த 20.01.2026 அன்று பாராளுமன்றில் உரையாற்றியிருந்தேன். அதனைத்தொடர்ந்து கடந்த 21.01.2026அன்று…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியாவில் செட்டிகுளம் பகுதியில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயம்

வவுனியாவில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று (27-01-2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. குறித்த இளைஞனின் சடலம் விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 25 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது அம்மா, புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போன…

மேலும் படிக்க