தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பண மோசடி குற்றங்க ளுக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணை

மன்னாரில் பண மோசடி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக  கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை நேற்று பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணையில் செல்ல மன்னார் நீதவான் உத்தரவிட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஒரு சந்தேக நபரைக் கைது செய்தது. தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், அதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டு ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுள்ள தங்க நகைகள் வாங்கியுள்ளதாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பாடசாலை மாணவர்களுக்கான உதவித்திட்டம் முன்னெடுப்பு…!

பாடசாலை மாணவர்களுக்கான உதவித்திட்டம் முன்னெடுப்பு…! ஜேர்மன் நாட்டில் வசிக்கும் திரு. சுஜித்குமார் மற்றும் அந்நாட்டின் லேயர் வோக்கோஸ்ற் பகுதியில் வசிக்கும் ஈழத் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த நிதிப் பங்களிப்பில், திரு. நிமலன் பிருந்தாபன் மற்றும் மேனாள் வட மாகாண சபை உறுப்பினர் திரு. பரஞ்சோதி ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. ​கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கிவைக்கப்பட்டது. ​இதன்போது உரையாற்றிய வித்தியாலயத்தின் முதல்வர், “இன்றைய நாள் எமது பாடசாலை வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான நாள். ‘தேவை’ என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அது நிறைவேறப் பல மாதங்கள் ஆகும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு!

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு! டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கரவெட்டி பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில், இன்றைய தினம் விசேட நிகழ்வொன்று கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. புயல் அனர்த்தத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்த சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு, அரசாங்கத்தின் விசேட நிதியுதவித் திட்டத்தின் கீழ் இழப்பீட்டு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.  நிகழ்வின் சிறப்பம்சங்கள்: * பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு காசோலைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. * தொழில் முயற்சியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீண்டும் செம்மையாக ஆரம்பிப்பதற்கும், தொழிலில் முன்னேற்றமடைவதற்குமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. * அரசாங்கத்தின் இந்த நேரடித் தலையீடு, பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பெரும் உறுதுணையாக அமையும். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமை ப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

வளமான நாடு -அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 7 கிலோமீற்றர் நீளமான காரைநகர் சுற்றுவட்ட வீதியில், ஏற்கனவே 2 கிலோமீற்றர் நீளமான பகுதி புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பணிகளின் ஒரு பகுதியாக 2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேலும் எஞ்சியுள்ள 3 கிலோமீற்றர் வீதி, “டித்வா” மீள்கட்டுமானத் திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, இவ்வாண்டுக்குள் முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.இப்பணிகளின் போது முறையான வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், தாழ்வான பகுதிகளில் வீதியை உயர்த்தி நிலையான முறையில் புனரமைப்பதும் திட்டமிடப்பட்டுள்ளது.நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்ப்பாண த்தில் சட்டவிரோத பொருட்க ளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த மூவரும் நேற்றையதினம் (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒருவரிடமிருந்து வாளும், மற்றைய இருவரிடமிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.போதைப்பொருளுடன் கைதான இருவரில் ஒருவரிடமிருந்து 2 கிராம் 340 மில்லிகிராம் ஐஸும், மற்றையவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லிகிராம் ஐஸும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் காவல்துறை குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சுயநலம் குடிகொண்டு ள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமை களை தவறி விட்டது சுதாகரன்

சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டது. எனவே அந்த இடைவெளியை தமிழர்விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… தமிழர் விடுதலைக்கூட்டணியானது புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ்மக்களுக்கான தலைமையை வழங்கும் நோக்குடன் சிறப்பாக செயற்ப்பட்டுவருகின்றது.நாங்கள் கடந்த காலங்களில் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தோம். தற்போது இளைஞர்களின் பங்களிப்புடன் புதிய உத்வேகத்துடனும் முன்னிலையான செயற்ப்பாட்டை நோக்கி நகர்ந்துவருகின்றோம். தற்போது தமிழ்மக்கள் தலைமைத்துவம் அற்று மோசமான நிலையில் வாழ்கின்றனர். எந்த ஒரு தமிழ்கட்சிகளும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையினை தெரிவுசெய்யவில்லை. தொடர்ச்சியாக பிழையான பாதையில் அந்த கட்சிகள் பயணிக்கின்றன. கட்சிகளில் சுயநலம் குடிகொண்டுள்ளது. பொது நலம் இல்லாமல் போய்விட்டது. தமிழ்கட்சிகளுக்கு போதுமான சந்தர்ப்பம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தம்பல காமம் பிரதேச செயலாளராக கந்தவனம் சதிசேகரன் நியமிக்க ப்பட்டுள்ளார்.

திருகோணமலை , தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன்  நியமிக்கப்பட்டுள்ளார். அவர்  (13) வெள்ளிக்கிழமை  உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றார்.தம்பலகாமம் பிரதேச செயலாளராக இருந்து வந்த  ஜெ.ஸ்ரீபதி திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டார். காரைதீவைச் சேர்ந்த சதிசேகரன்( சதீஷ்) இறுதியாக லாகுகல உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றியிருந்தார்.புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் சதீஷ் , காரை தீவில் பயின்று,  திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரம் இந்து கல்லூரியில் 2012 முதல், ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். பின்னர், காரைதீவு பிரதேச செயலகத்தில் 2013- 2015 காலப் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவேளை  இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று  இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார்.2015- 2019 காலப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மகாவலி அதிகார சபைக்கு மரண தண்டனை வழங் கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி

திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் வலியுறுத்தியுள்ளார். வவுனியா மாவட்டசெயலகத்தில் 12.03.2026நேற்று இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு பிரசேசெயலாளர் பிரிவிலுள்ள திரிவச்ச குளம் என்னும் இடத்தில் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டன. இலங்கையின் சட்டத்தின்படி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழர் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி;

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி; உப்பளம் அமைப்பதை நிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முல்லை மாவட்டசெயருக்கு அறிவுறுத்திய அமைச்சர் – கே.டிலால்காந்த முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் சட்ட விரோத அனுமதியுடன் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்தி குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, சட்டவிரோத அனுமதி வழங்கியோருக்கும், அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்துவதுடன், குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு விவசாயம்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மட்டு மண்முனையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு, மண்முனை பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தீவுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று காவல் துறையினரால். சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா ம‌ற்று‌ம் 67,500 மில்லி லீட்டர் கசிப்பு என்பவற்றை  காவல் துறை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கொக்கட்டிச்சோலை காவல் துறை.தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கைதானவர்கள் தாளங்குடா, மாவிலங்கத்துறை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கேஸ் சிலிண்டர், கேஸ் அடுப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை  காவல் துறை .முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க