தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சகல கிளினிக்கு களும் வழமை போன்று. சத்தியமூர்த்தி

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சகல கிளினிக்குகளும் வழமை போன்று நடைபெறுவதாக  வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் துரித நடவடிக்கையின் கீழ் கொழும்பு மத்திய மருந்துக் களஞ்சியத்திலிருந்து மூன்று பாரவூர்திகள் மூலம் மருந்துகள் கொண்டு வரப்பட்டன. இதனால் கொண்டு வரப்பட்ட அனைத்து மருந்துகளும் புதிதாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மருந்துக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன.இதனால் சகல சேவைகளும் வழமைபோன்று நடைபெறுகின்றன. மேலும் ஒரு தொகுதி மருந்துகள் எதிர்வரும் நாட்களில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படவுள்ளன. கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வழங்குவதற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

சிசு மரண விவகாரம் ; தொழிற்சங்க நடவடிக்கைக்கும் அதற்கும் தொடர்பில்லை; GMOA

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவத்திற்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சங்கத்தின் உப தலைவர், விசேட வைத்திய நிபுணர் சந்திக எபிடகடுவ, பிரசவ அறை சிகிச்சைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் அடங்குவதால், தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது வைத்தியர்கள் ஒருபோதும் அவசர சிகிச்சைகளில் இருந்து விலகிச் செல்வதில்லை என குறிப்பிட்டார் அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் ஒரு தரப்பினர் திட்டமிட்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்த போதிலும், அது குறித்து தமக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான அறிவித்தல் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புத்தளம் -கற்பிட்டியில் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு

புத்தளம் – கற்பிட்டி பங்களாவத்தை மற்றும் சேதவாதீ ஆகிய கடலோரப் பகுதிகளில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கிவரும் இலங்கை விஜய கடற்படைக் கப்பலின் ஆலங்குடா பிரிவினரால், நேற்று கற்பிட்டியவின் பங்களாவத்தை கடலோரப் பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு உரப் பைகள் இருந்ததை அவதானித்த கடற்படையினர் அதனை சோதனை செய்தனர். குறித்த உரப் பைகளில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 80 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும், கற்பிட்டி சேதவாதீ கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவுடன் இணைந்து நடத்தப்பட்ட மற்றொரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீட்டு வாடகை தகராறில் முதியவர் கொலை.!

வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த முதியவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர். சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், இது இயற்கை மரணம் அல்ல, திட்டமிட்ட படுகொலை என உறுதி செய்யப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாடகை பிரச்சினையை மையமாகக் கொண்டு இக்கொலை இடம்பெற்றதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு

இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார். வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க நேற்றும் இன்று அதிகாலையும் தவிசாளர் தலைமையிலான சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால்  பூவரசங்குளம் பகுதியிலுள்ள உணவகங்களுக்கு அதிரடியாக விஜயம் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சுகாதாரமற்ற முறையி்ல் இயங்கிவந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தாரால் நடாத்தப்படும் உணவகம் உட்பட 4 உணவகங்கள் மற்றும் வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் முச்சக்கர வண்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி சமிக்ஞைகளை விழிப்புணர்வு நிகழ்வு

வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று (10)விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.யாழ்பாணம் பொலிசாரும் தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் இணைந்து இன்று ஆரிய குளம் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தனர். இதன்போது சந்தியிலுள்ள சமிக்ஞையில் பாதசாரிகள் கடக்கும் கடவையில் அவர்களுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள வாகனங்களை அகற்றியும் அவர்களை எச்சரித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.இதேவேளை, குறித்த நிகழ்வில் வித்தியாசமான முறையில் இவர்கள் வேடமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றது. 2024 ம் ஆண்டு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது சந்தாப்பணம் கட்டுதல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2026 ம் ஆண்டு நிர்வாக தெரிவு மிகவும் சிறப்பாக இடம் பெற வேண்டும் என்பதற்காக 2026/1/15 தொடக்கம் 2026/2/15 வரை புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கான காலம் அறிவித்தல் நோட்டீஸ் மூலம் ஒட்டப்பட்டது. அதன் அடிப்படையில் 93 உறுப்பினர்கள் சந்தாப்பணம் கட்டி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களாக இணைந்தார்கள். அதன் பின்னர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் 2026/3/6 அன்று வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு இடம்பெரும் என…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதா பமாக உயிரிழப்பு.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டிப் பயணி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்  64 வயதுடைய  பாலகுகன்   என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழப்பு.

வவுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று இரவு  இடம்பெற்றுள்ளது.செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி

தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு நோக்கி புறப்பட்டுள்ளது. தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவரது திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபன்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இன்று காலை இந்த ஊர்தி பணி ஆரம்மானது. யாழில் இருந்து இன்று ஆம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊர்தி, வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று இறுதியாக அன்னை பூபதி அம்மாவின் நினைவிடத்தை சென்றடைந்து நிறைவடையும்.

மேலும் படிக்க