அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றது.

2024 ம் ஆண்டு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது சந்தாப்பணம் கட்டுதல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2026 ம் ஆண்டு நிர்வாக தெரிவு மிகவும் சிறப்பாக இடம் பெற வேண்டும் என்பதற்காக 2026/1/15 தொடக்கம் 2026/2/15 வரை புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கான காலம் அறிவித்தல் நோட்டீஸ் மூலம் ஒட்டப்பட்டது.

அதன் அடிப்படையில் 93 உறுப்பினர்கள் சந்தாப்பணம் கட்டி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களாக இணைந்தார்கள்.

அதன் பின்னர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் 2026/3/6 அன்று வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு இடம்பெரும் என தெரிவிக்கப்பட்டது .

பின்னர் சில மணிநேரத்தின் பின்னர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொலைபேசி மூலம் யாப்பின் படி மூன்று மாதங்களுக்கு பிறகு தான் நிர்வாக தெரிவு இடம்பெரும் என அறிவுத்தப்பட்டது.

பின்னர் புதிதாக 42 அங்கத்தவர்கள் தாம் புதிதாக இணைவதற்கு சந்தாப்பணம் கட்டுவதற்கு தயாராக உள்ளனர் என கூறினர். அதனை நிர்வாக உறுப்பினர்களாகிய நாம் அதனை ஏற்க முடியாது என கூறினோம்.

அதன் பின்னர் தாம் மூன்று மாதங்கள் காத்திருக்கும் போது புதிய அங்கத்தவர்களை இணைப்பது ஒரு குழப்பமான செயற்பாடு ஆகும்.

இதனால் ஒற்றுமையாக இருந்த எமது கிராமத்தில் பல பிரச்சனைகள் வந்துள்ளது. அதற்கு முழுமையான காரணமாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரே ஆவார் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்

இவ் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தாம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளருக்கு கொடுப்பதற்கு கொண்டு வந்த கடிதத்தினை பிரதேச செயலாளருக்கு கொடுப்பதற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது பிரதேச செயலாளர் பதில் உத்தியோகத்தரிடம் கொடுக்க சொன்ன போது பதில் உத்தியோகத்தர் குறித்த கடிதத்தினை வாங்க மறுத்தார்.

பின்னர் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் சென்ற போதே குறித்த கடிதத்தை வாங்கினார் என போராட்டக்காரர்கள் தமது கவலையை தெரிவித்துள்ளனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment