அண்மை செய்தி இலங்கை செய்தி. 

2025 O/L தேர்வு முடிவுகள் வெளியீடு – 2,25,748 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகளின்படி, 2,25,748 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருடத் தேர்வில் 11,790 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்று சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 11,651 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாகவும், 139 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களாகவும் உள்ளனர். அதேவேளை, 7,419 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூன் 25 முதல் ஜூலை 08 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 O/L தேர்வு முடிவுகள் நேற்று (19) நள்ளிரவில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம்.!

நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜமீல் விஜேசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவரின் தகவலின்படி, 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான டெங்கு தொற்று நிலைக்கு ஒப்பான அளவில் தற்போது நோயாளர்கள் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 8,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலேயே 9,000 க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கொழும்பு மாவட்டத்தில் வாராந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பதிவாகும் மொத்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

‘ஐஸ்’ போதைப் பொருள் கடத்தல்.! ஒருவர் கைது

கடவத்தையில் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சிறப்பு சுற்றிவளைப்பில் பெருமளவிலான ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) கடவத்தை, புனித அந்திரேயா அக்வில்லினோ தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியொன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையில் சுமார் 6 கிலோ 288 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சந்தை பெறுமதி 10 கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், கணேமுல்ல, கேந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் ‘பொடி சுரேஷ்’ மற்றும் ‘சங்க சமீர’ ஆகியோரின் இலங்கை வலையமைப்பை இயக்கும் முக்கிய நபராக செயல்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் எடைபோட பயன்படுத்தப்பட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோகத்தின் QR குறியீட்டு முறை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்தின் போது பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறை நீக்கப்படுவது தொடர்பாக தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட அதன் தலைவர் டி. ஜே. ராஜகருணா, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த அளவிற்கு இணையாக உள்ளூர் சந்தையில் விலை குறையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எரிபொருள் விநியோக முறையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் QR முறை தொடருமா அல்லது மாற்றப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

போதைப் பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பெருமளவிலான போதைப்பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.அவரிடமிருந்து சுமார் 37 கிலோகிராம் எடையுடைய ஹஷீஷ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் பெறுமதி சுமார் 377 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக போதைப்பொருளை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் சந்தேகநபரும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

மதவாச்சி தலை மன்னார் வரை புகையிரத சேவை யின் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுப்பு

மதவாச்சி -தலைமன்னார் வரை புகையிரத சேவையின் பரீட்சார்த்தநடவடிக்கை முன்னெடுப்பு மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரிட்சார்த்த நடவடிக்கை இன்று (19) மதியம் இடம் பெற்றது. தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரத பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக குறித்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த புகையிரத பாதைகள் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற் கொண்டது. அதற்கு அமைவாக இன்று மதியம் மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.விரைவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் சந்தேக நபர் கைது

சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட காணொளி தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர். மதவாச்சி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அதன் உரிமையாளரைத் தாக்கும் காணொளி ஒன்று சமீப நாட்களாக சமூக மற்றும் மின்னணு ஊடகங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து, 10 ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு ஒன்றினைச் செய்திருந்தார். இந்தக் காணொளிகள் குறித்து மதவாச்சி பொலிஸார் நடத்திய விசாரணையின் போது தாக்குதல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை 17ஆம் திகதி புதன்கிழமை மாலை மதவாச்சி பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவினரால் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் .சம்பந்தப்பட்ட தாக்குதலில் சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதம் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொட்டகலை திருமண மண்டப மோதல்: விலக்க சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

தலவாக்கலை — வட்டகொட பகுதியைச் சேர்ந்த குழுவினர் கொட்டகலை நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று (17) திருமண விழா ஒன்றை நடத்தியுள்ளனர். இதன்போது, மாலை 4.00 மணியளவில் திருமணத்திற்கு வந்திருந்த, மதுபோதையிலிருந்த இருதரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாகச் சென்று மோதலைச் சமரசம் செய்ய முயன்றுள்ளனர். எனினும், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து அந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, காயமடைந்த அதிகாரிகளை மீட்கத் திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், வன்முறைக் கும்பல் அவர்களையும் விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தியுள்ளது. பொலிஸார் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தாக்குதலுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களைக் கைது செய்தனர். பொலிஸார் தாக்கப்படுவதைக் கண்ட கொட்டகலை நகர மக்கள் உடனடியாகச்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு வைரஸானது புதிய மரபணுத் திரிபுகளுடன் தீவிரம்

நாட்டில் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸானது புதிய மரபணுத் திரிபுகளுடன் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பரவிய டெங்கு வைரஸுடன் ஒப்பிடுகையில், தற்போது பரவி வரும் புதிய வைரஸில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த புதிய மாற்றங்களைக் கொண்ட வைரஸ் இதற்கு முன்னர் இலங்கை மக்களுக்குத் தொற்றியிருக்கவில்லை. இதன் காரணமாக, நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு இந்த புதிய டெங்கு வைரஸ் மிக வேகமாகத் தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம் என்பதால், அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே ஓரளவிற்குத் தயாராகவே இருந்தது. எனினும், இம்முறை வைரஸின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாகப் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் எனச்…

மேலும் படிக்க