இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இதுவரை சுமார் 40 லட்சம் பேர் வரி அடையாள இலக்கம் பெறவில்லை:

நாட்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் ‘வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்’ (TIN Number) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 40 லட்சம் பேர் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாட்டில் சுமார் 17 மில்லியன் (1 கோடியே 70 லட்சம்) மக்கள் இந்த இலக்கத்தைப் பெற வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் மாத்திரமே TIN இலக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய, தற்போது அன்றாட மற்றும் வணிக ரீதியிலான பல்வேறு தேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இந்த இலக்கம் இனி அவசியமானதாகும்: புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் மற்றும் கடன் அட்டைகளை (Credit Cards)…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ரூ.2 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சாவுடன் இளைஞர் கைது!

ரத்மலானா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரின் உடைமைகளில் இருந்து 3 கிலோகிராம் மற்றும் 125 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நீடிக்கும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

குவைத்தில் போதைப் பொருள் வேட்டை; 3 இலங்கையர் உட்பட 7 பேர் கைது

குவைத்தில் போதைப்பொருள் தொடர்பான தனித்தனி நடவடிக்கைகளில் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு குவைத் பிரஜை, ஒரு இந்தியர், மூன்று இலங்கையர்கள் மற்றும் இரண்டு நாடற்றவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்த பல்வேறு வகையான போதைப்பொருட்கள், மனநிலையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் அவற்றை பொதி செய்து விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களில் 2.550 கிலோகிராம் ஹஷிஷ், 150 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை அடங்குகின்றன. மேலும், கைது நடவடிக்கைகளில் ஒன்றின் போது சந்தேகநபர் ஒருவர் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படுவதால், அவருக்கு எதிராக கூடுதல் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

இன்று (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாடல் பாடியதால் கைது இல்லை; விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பதிவே காரணம்

கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை.  விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் தான்  கைது செய்யப்பட்டார்.  பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக்கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது  என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்றுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். மேடையில் பாடல் பாடியதற்காக தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும். அன்றைய தினம் பரீட்சைக்கான நேர அட்டவணை பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: இரண்டாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை. முதலாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை.இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவற்றுக்கான விரிவான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளமை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

மன்னாரில் 150 மெகா வோட் காற்றாலை மின்உற்பத்தி நிலையம்

இலங்கையின் மின்சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை விரைவுபடுத்தும் நோக்கோடும், மன்னார் – கொண்டச்சி பகுதியில் 150 மெகாவோட் கொள்ளளவு கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. வலுசக்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.மன்னார், சிலாவத்துறை – கொண்டச்சி பகுதியிலுள்ள இலங்கை முந்திரி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அரசகாணியில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சுமார் 31 நவீன காற்றுச் சுழலிகள் மூலம் 150 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மின்சார விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, மேம்பட்ட மின்கல மின்சக்தி சேமிப்பு அமைப்புடன் (BESS) இது இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், பறவைகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் விரிவான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வடமேல் மாகாணங்களில். இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

2025ஆம் ஆண்டுக்கான அதிபர் சேவையின் தரம் III இற்கு போட்டிப் பரீட்சை

2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதிப் பத்திரங்களை தங்களது திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இப்பரீட்சை ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அதனைத் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க