அண்மை செய்தி இலங்கை செய்தி. 

O/L பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சை விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களைக் ஒன்லைன் (Online) முறைமை ஊடாகத் திணைக்களம் கோரியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஜூன் 25 முதல் ஜூலை 8ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk இன் “Exam Information Centre” பகுதிக்குச் செல்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைய முகவரி மூலமோ விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் 2025 சாதாரண தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய பரீட்சை சுட்டெண் (Index number) மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், புதியவர்கள் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பதிவிட்டுப் பதிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மலேசியா விலிருந்து நாடு கடத்தப்பட்ட முக்கிய குற்றவாளி

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் தங்கியிருந்த அவர், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதையடுத்து, நேற்று (25) நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதுடைய சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Interpol Red Notice)  பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது, 2022 ஆம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றிற்கு அமைவாக நீதிமன்றம் விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கரைவலை மீன்பிடி முறைமை க்கு தடை விதிக்கப் படவில்லை அமைச்சர் சந்திரசேகர்

பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும். அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை; அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.எனினும், உழவு இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, கடல்வளத்தை அழிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் மீன்பிடி நடைமுறைகளே தடை செய்யப்பட்டுள்ளன. எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் இன்றி, தமக்குத் தேவையான விதத்தில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடந்த காலங்களில் துறைசார் அமைச்சர்கள் அனுமதி வழங்கியமையாலேயே கரைவலை மீன்பிடித் தொழிலில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

18 வயது கனேடிய யுவதி ரூ. 35 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 352.65 மில்லியன் தெரு மதிப்பிலான போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி ஒருவர் இலங்கைச் சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (NCU) கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார். நேற்று (23) இரவு 10.40 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK 648 எனும் விமானம் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து துபாய் ஊடாக வருகை தந்த குறித்த யுவதியின் 2 பயணப் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதற்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 35.265 கிலோகிராம் ‘ஹஷிஷ்’ (Hashish) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் ரூ. 352.65 மில்லியன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் தொடர்பில் அமை ச்சரின் முக்கிய அறிவிப்பு

விடுதலைப் புலிகளிடமிருந்து போரின் போது கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பாக, இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர (Defence Deputy Minister Aruna Jayasekara) ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு: விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பது தொடர்பான விபரங்கள் (ஆவணங்கள்) தற்போதைய நிலையில் இலங்கை இராணுவத்திடம் இல்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த விடுதலைப் புலிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் (Safes) இருந்து சுமார் 150 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கம் மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் இன்னும் 3 மாத காலத்திற்குள் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக உரிய முறையில் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

காருக்குள் மருத்துவர் சடலம்; காதலனும் மனைவியும் யாழில் கைது!

கண்டி –  தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதியினர் நேற்று (23) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டதாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதேவேளை கடந்த ஜூன் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், சந்தேகநபர் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பொலிஸாரின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு விசார ணைக்கு உட்படுத்தப் படவேண்டும். ரவிகரன்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய வடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 23.05.2026இன்று உரையாற்றும் போதே தனநாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப்புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக சிறார்கள், பெண்கள், ஆண்கள், முதியோரென பலதரப்பட்டவர்களுடைய எலும்புக்கூடுகளும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கடந்தவாரம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனிதப்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டப் பலன்களை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இக் கொடுப்பனவு 270,025 தகுதியான குடும்பங்களுக்குக் கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கமைய, மொத்தம் 3,287,163,750 ரூபா (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய் தொகை, இன்று உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக அச்சபை மேலும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு (Evan Papageorgiou) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் இணையவுள்ளனர். இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்யவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க