இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

39 நாடுகளுக்கு இலங்கையின் இலவச சுற்றுலா விசா..!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு 2025 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ், இலவச விசா வழங்குவதற்கான சட்ட வரைவுகள் சட்ட ஆலோசகரால் தயாரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த முன்மொழிவு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவை அதற்கான அனுமதியை அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலா இலக்குகளில் ஒன்றாக வலுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஏடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

போரின் விளிம்பில்: ஈரான்–அமெரிக்க மோதல் – கலப்புப் போரின் புதிய கட்டம்

போரின் விளிம்பில்: ஈரான்–அமெரிக்க மோதல் – கலப்புப் போரின் புதிய கட்டம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ விளிம்பில் ஒரு பிராந்தியம்: நிழல் யுத்தத்திலிருந்து நேரடி இராணுவ மோதல் வரை ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையேயான மோதல், நீண்டகால “நிழல் யுத்தம்” (Shadow War) நிலையிலிருந்து வெளிப்படையான, பல்துறை இராணுவ மோதலாக வேகமாக மாறியுள்ளது. முன்பு பிரதிநிதி போர்கள் (Proxy Wars), இணையவழித் தாக்குதல்கள் மற்றும் மறைமுக நடவடிக்கைகளால் மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்த மோதல், இப்போது மூலோபாய குண்டுவீச்சுகள், பெரிய அளவிலான படை நிலைநிறுத்தங்கள் மற்றும் நேரடி தரைப்போர் சாத்தியங்களைக் கொண்ட ஒரு ஆபத்தான கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. இந்த தீவிரமடைந்த பதற்றத்தின் மையத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடபகுதி கடற் பரப்பு க்களில் அதிகரித் துள்ள இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்.ரவிகரன்

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; கண்காணிப்பு கருவிகள் பழுதடைந்துள்ளனவா எவும் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 31.03.2026நேற்று கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தந்தை செல்வநாயகத்தின் 128 ஆவது ஜனன தினம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 128 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று (31)மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தது இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர மேயர் க. செல்வராசா (சுப்ரா), உப்பு வெளி பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ், தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் வி. விஜய குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இதேவேளை,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் பிறந்தநாள் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் எதிர் கால அபிவிருத்தி க்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்குமென, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ட்ரூ பெற்றிக்  தெரிவித்தார்.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்  சந்தனஅபயரத்ன  மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக்  ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல், அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தும் வகையில், இந்த சந்திப்பு இடம் பெற்றது.பல்வேறு நெருக்கடியான காலங்களில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் இச்சந்திப்பில்,பாராட்டினார். அத்துடன் நாட்டின் பல அபிவிருத்தித் துறைகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.இலங்கையின் தற்கால அரச சேவை கட்டமைப்பிலுள்ள பழைய முறைகளுக்குப் பதிலாக, அவை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் சீரமைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இதற்கான மனிதவளப் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு முதியவர் சடலம்

யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (31) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதான காசிப்பிள்ளை மதுருபாகன்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த முதியவர் நேற்று (30) சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணி  நேற்று திங்கட்கிழமை (30.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த அகழ்வுப் பணி இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமையும்(31.03.2026) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.அகழ்வு இடம்பெறும் அவ்விடத்தில் இதுவரையில் எதுவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார கட்டணம் அதிகரிப்பு.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது அதன்படி 0 – 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது. மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

சட்டவிரோத கடற் றொழில்களு க்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லை மீனவர்கள்; 

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லை மீனவர்கள்; சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை 30.03.2026இன்று ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிரான கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் குறித்த தொடர்கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் என உரியதரப்பினர்களிடம் பலதடவைகள் முறையிட்டுள்ளபோதும் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்ட விரோத கடற் றொழில் செயற்பாடு களைக் கட்டுப் படுத்த அரசு வக்கற்றிருக் கின்றது; ரவிகரன்

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசு வக்கற்றிருக்கின்றது; கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசுவக்கற்றிருப்பதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார். எனவே இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவில் 30.03.2026இன்று இடம்பெற்ற சட்டவிரோத தடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்துக் கடற்பரப்புக்களையும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் எமது அப்பாவி மீனவர்கள் மிக…

மேலும் படிக்க