பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஆதரவு அளிக்காதென பா. உ சிறீதரன் தெரிவித்துள்ளார்
கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு அளிக்காதென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதா என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் கூறினார். கல்வித் துறை தொடர்பான சில நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னிறுத்தியே,பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டைக்கு அப்பால், அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதேவேளை,கல்வி அமைச்சரான…
மேலும் படிக்க