உலக செய்திகள் சிறப்புச் செய்தி 

ஈரான் கொத்துக் குண்டுகளை பயன் படுத்துவதாக இஸ்ரேலிய இரா ணுவம் குற்றம் சாட்டு!

ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் (IDF) மற்றும் சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஈரானின் Fateh போன்ற ஏவுகணைகள் விண்ணிலிருந்து வரும்போது, தரைக்குச் சில கிலோமீட்டர் உயரத்திலேயே வெடித்துச் சிதறுகின்றன. அதன் உள்ளே இருக்கும் சிறிய குண்டுகள் ஒரு பெரிய கால்பந்து மைதானம் போன்ற பரப்பளவில் மழையெனப் பொழிகின்றன. இஸ்ரேலின் Iron Dome போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளுக்கே இது பெரும் சவாலாக உள்ளது. ஒரு ஏவுகணையைத் தடுப்பது எளிது, ஆனால் விண்ணிலேயே பிரிந்து பல துண்டுகளாக வரும் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளைத் தடுப்பது மிகக் கடினம். சமீபத்திய தாக்குதல்களில் மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் இத்தகைய குண்டுகள் விழுந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் ஈழப் போரின் போதும் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதனை நிருபிக்கக்கூடிய சாட்சியங்களும் உள்ளன என்கின்றனர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக் க்ஷவுக்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் (17) செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு முன்னெடுக்கும்விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக இந்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் பெப்ரவரில் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தாம்,சிங்கப்பூரிலிருப்பதாக கோட்டாபய எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.இதையடுத்தே இம்மாதம் 17 ஆம் திகதி ஆஜராகும்படி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் நேற்று (11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளன. தாக்குதலுக்குள்ளான இடங்கள்: சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் இந்த ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீசாலை மேற்கு: வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த கும்பல், அங்கிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது. மீசாலை தட்டான் குளம்:  இங்குள்ள இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் ஒரு வீடு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன், ஒரு மினிபஸ் (Minibus) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளன. மீசாலை வடக்கு: ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அங்கிருந்த இளைஞர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் UL232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், மேலதிக உதவிகள் தேவைப்படும் பயணிகள் இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும், சர்வதேச ரீதியாக +94 11 777 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பிரதேச சபையின் வருமான பரிசோதகர் வயலில் பாம்புக் கடிக்கு இலக்கான நிலையில் உயிரிழப்பு

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிவந்த  நபர் ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 55 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரன்  என்பவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவராவார். நேற்று துணுக்காய் பகுதியில் வயலில் வேலை செ‌ய்துகொண்டிருந்த போதே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவர் முன்னாள் துணுக்காய் பிரதேச சபையின் வருமான வ‌ரி பரிசோதகரும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகத்தாவும் தற்போது மாந்தை கிழக்கு  பிரதேச சபையின் வருமான வரி  பரிசோதகராக கடமையாற்றிவந்துள்ளார். இவரது உடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள அதேவேளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதையடுத்து குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதவது, வடமராட்சி பருத்தித்துறை, கிராமக்கோடு பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு, மனைவியின்  தாயாரையும் வாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே மாமனாரை படுகாயப்படுத்திவிட்டு  மாமியாரை படுகொலை செய்துள்ளார். வாள்வெட்டு சம்பவத்தை தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான 5க்கு மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் கைது

இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அரச புலனாய்வு துறை அதிகாரிகளினால் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகளினால்நேற்று (10) ஹிங்குரன்கொட பொலிஸ் பிரிவின் கிம்புலாவள பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு,தோட்டாக்களை அதிரடிப்படையினர் செய்யப்பட்டவர் 46 வயதுடைய ஹிங்குரன்கொட,கிம்புலாவள பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பொலிஸ் அதிரடிப்படையினர் சந்தேகநபரை ஹிங்குரன்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஹிங்குரன்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி எல்லேபொள தலைமையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் ஹிங்குரன்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அந்தோனியார் ஆல யத்திற்கு ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துஉயிரிழந் தோரின் எண்ணி க்கை அதிகரித்து ள்ளது. 

யாழ்ப்பாணம் – பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்த 06ஆம் திகதி குருநகர் இறங்கு துறையில் இருந்து பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்கு உள்ளானது. இதன்போது கடலில் மூழ்கி அன்றைய தினம் இருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் உள்ளிட்ட 13 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த உரும்பிராய் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய எட்வேட் உதயகுமாரி  என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்  உயிரிழந்துள்ளார். இதேவேளை முன்னதாக  நாவற்குழி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய  ஸ்டீபன் பிரான்சிஸ், குருநகர், பழைய பூங்கா சாலையை சேர்ந்த  80 வயதுடைய எம். ஜோசப் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து அதிக சுமை காரணமாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார சபை தொழிற் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கை களுக்கு இணக்கம் தலைவர் நுசித் குமாரதுங்க

மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார். எஞ்சிய இரண்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: முன்வைக்கப்பட்ட 64 கோரிக்கைகளில் பெரும்பாலானவை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அதே சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இதில் 59 கோரிக்கைகளுக்கு முதற்கட்டக் கலந்துரையாடலின் போதே பணிப்பாளர் சபை இணக்கம் தெரிவித்திருந்தது. அதன் பின்னர் 5 கோரிக்கைகள் எஞ்சியிருந்ததுடன், அவை குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானமொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இறுதியாக எஞ்சியுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் போர்க் குற்றத்திற்கு இணையான ஒரு செயல்”எஸ்மாயில் பாகேய்

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தினை “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்” என ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் வர்ணித்துள்ளார். இந்திய கடற்படையுடனான கூட்டு கடற்படை பயிற்சி மற்றும் துறைமுக விஜயத்திற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கடந்த புதன்கிழமை இந்தியா மற்றும் இலங்கை கடற்கரையோரங்களுக்கு அருகில் இக்கப்பல் தாக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,இத்தாக்குதலை “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்” என வர்ணித்துள்ளதுடன், “கடற்படையினரை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா திட்டமிட்டே தடுத்தது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தில் 104 கடற்படையினர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்களில் 84 பேரின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஈரானுக்கு விரைவில்…

மேலும் படிக்க