இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹிங்கு ரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் ஒருவர் கைது

ஹிங்குரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அரச புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய விசேட பொலிஸ் அதிரடிப் படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரரின் வீட்டில் ஒரு கைக்குண்டு , பல்வேறு வகையான வெடிபொருட்கள், வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் 36 பயிற்சி தோட்டாக்கள் பல சீருடைகள் , நான்கு கெமா தொப்பிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்தனர். ஹிங்குரங்கொட கிம்புலாவல பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்த இராணுவ உபகரணங்கள்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானின் சட்டபூர்வ உரிமை களை மதித்து, இழப்பீடு களை வழங்க! ஈரான் ஜனாதிபதி

போரை நிறுத்த வேண்டுமானால் ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை மதித்து,இழப்பீடுகளை வழங்க இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்வர வேண்டுமென ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு தொடர்ச்சியாக விடப்படும் வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள ஈரான் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அவசியம். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இருப்பையும் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்.வலிந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.இவற்றை செய்தால் மாத்திரமே போரை நிறுத்துவது சாத்தியப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்தாலும் ஈரானின் நிலைப்பாடு இன்னும் மாறாதுள்ளதையே இந்நிபந்தனைகள் வௌிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அயல்நாடுகளை தாக்குவதில்லை என ஈரான் அறிவித்த பின்னரும் சில நாடுகள் தாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய ஈரான் ஜனாதிபதி, சில சதிகளை அரங்கேற்றி போரின் போக்கை மாற்றுவதற்கு அமெரிக்கா…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

எரிவாயு விநியோக த்தை. – உடனடியாக QR முறையை அறி முகப் படுத்துமாறு கோரிக்கை

தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது?  என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் கேள்வி எழுப்பினார். தேசிய நுகர்வோர் முன்னணி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.சர்வதேச ரீதியிலான போர்ச் சூழல் எமக்கு இன்னும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நம்மிடம் உள்ள கையிருப்புகளைக் காட்டி அநியாயமான முறையில் விலையை உயர்த்தும்போது, அது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கின்றது. ஏன் இந்த அறிவிப்புகளை நள்ளிரவில் விடுக்க வேண்டும்? பகல் 10 மணிக்கு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்க முடியாதா? நள்ளிரவில் விலையை உயர்த்துவதால், மறுநாள் காலை சந்தையில் உள்ள மருந்துகள் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000ம் கோடி பெறுமதியான போதைப்பொருள்.

தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000ம் கோடி பெறுமதியான போதைப்பொருள். இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ஒன்றிலிருந்து, 1000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சர்வதேச கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்கள் போதைப்பொருட்களுடன் மாத்திரமன்றி, சட்டவிரோத ஆயுதங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 08 பிஸ்டல்கள் 02 டி-56 (T-56) ரக துப்பாக்கிகள் 01 எம்-16 (M16) ரக நவீன துப்பாக்கி அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் மகசின்கள் (Magazines) கைது நடவடிக்கையும் விசாரணையும் இந்த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஜனாதிபதி மின்சார சபையின் பொறியி யலாளர் தொழிற் சங்கப் பிரதிநிதி களுக்கிடையி லான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நுகர்வோருக்கு நியாயமான விலையில், வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும், புதிய நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் மூலம் ஒரு நாடாக வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் இந்தச் செயல்முறையின் போது புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மின்சார சபையாக இருக்கும் போதே தீர்க்கப்பட வேண்டிய, ஆனால் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார். இது ஒரு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழர் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி;

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி; உப்பளம் அமைப்பதை நிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முல்லை மாவட்டசெயருக்கு அறிவுறுத்திய அமைச்சர் – கே.டிலால்காந்த முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் சட்ட விரோத அனுமதியுடன் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்தி குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, சட்டவிரோத அனுமதி வழங்கியோருக்கும், அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்துவதுடன், குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு விவசாயம்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மட்டு மண்முனையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு, மண்முனை பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தீவுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று காவல் துறையினரால். சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா ம‌ற்று‌ம் 67,500 மில்லி லீட்டர் கசிப்பு என்பவற்றை  காவல் துறை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கொக்கட்டிச்சோலை காவல் துறை.தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கைதானவர்கள் தாளங்குடா, மாவிலங்கத்துறை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கேஸ் சிலிண்டர், கேஸ் அடுப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை  காவல் துறை .முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரி பொருள் கையிருப்பை உறுதி டி.ஏ. ராஜகருணா

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து நான்கு பிரதான எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 – 15: முதலாவது கப்பலும் ஏப்ரல் 17 – 18: இரண்டாவது கப்பலும் ஏப்ரல் 21 – 22: மூன்றாவது கப்பலும் ஏப்ரல் 29 – 30: நான்காவது கப்பலும் நாட்டுக்கு வந்தடையவுள்ளது. குறித்த எரிபொருள் கையிருப்புகள் அனைத்தும், கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் தருணத்தில் உலக சந்தையில் நிலவும் சந்தை விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்யப்படும் என தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் பண்டிகைக்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

பிரதேச வைத்திய சாலைக்கு சென்ற குறைபாடுகள் குறித்து ஆராய்வு.ரவிகரன் எம்.பி;

முல்லைத்தீவு பிரதேச வைத்திய சாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி; குறைபாடுகள் குறித்து ஆராய்வு. முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு 12.03.2026இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். குறிப்பாக நோயாளர்கள் மற்றும் வைத்தியர் உள்ளிட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வைத்தியசாலைக்குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அத்தோடு வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார். அந்தவகையில் குறித்த வைத்தியசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிற்றுழியர்கள், மருத்துவர் உள்ளிட்ட ஆளணித் தேவைப்பாடுகள் காணப்படுவதாக வைத்தியரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இவ்வாறான ஆளணிப்பற்றாக்குறைகள் காணப்படுவதால் தம்மால் வினைத்திறனான வைத்தியசேவையை வழங்கமுடியாதுள்ளதாகவும் இதன்போது வைத்தியரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இதுதவிர வைத்தியசாலையின் சில அறைகளில் மின்சார இணைப்புக்கள் சீரின்றிக்காணப்படுவதால் அந்த அறைகளைப் பயன்படுத்திக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஒரு புதிய உலக ளாவிய எரிசக்திப் போரும் உலக வல்லரசுகளின் மூலோபாய மறுசீரமைப்பும்

ஹார்முஸ் நெருக்கடி 2026: ஒரு புதிய உலகளாவிய எரிசக்திப் போரும் உலக வல்லரசுகளின் மூலோபாய மறுசீரமைப்பும் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுத்து: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்று ஆய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ◆ ஹார்முஸ் ஜலசந்தி: உலகின் மிக ஆபத்தான கடல்வழிப் பாதை ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் ஒருமுறை உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தை ஏந்திச் செல்லும் இந்த குறுகிய கடல்வழிப் பாதை, வரலாற்று ரீதியாக பூமியின் மிக முக்கியமான மூலோபாயப் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மார்ச் 2026 நிலவரப்படி, ஈரான், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் இராணுவ மோதல், இந்த நீரிணையை…

மேலும் படிக்க