மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப் பென்பது “நவீன தீண் டாமை” ரவிகரன் எம்.பி;
மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” எனச் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி; அவர்களின் நிருவாகக் கொடுப்பனவு மற்றும் இடமாற்றம் தொடர்பிலும் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” என கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக்கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்தும் இதன்போது பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சேர்ப்பின் அடிப்படையிலும், நிதிபிரமாணங்களுக்கு அமைவாகவும், சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் மிகை ஊழியர் அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, மிகை ஊழியர் அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் எதிர்வரும்…
மேலும் படிக்க