தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, துணிகரக் கொள்ளை

யாழ்ப்பாணம், அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. பொலிஸ் தகவல்களின்படி, நேற்றுமுன்தினம் இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அப்போது வீட்டில் இருந்தவர்களை தாக்கிய குறித்த கும்பல்,   சுமார் 10 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் முகங்களை மூடியபடி வந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என வீட்டார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் நோக்கில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடு முழுவதும் 471 மருந்தகங்களில் விசேட சோதனை

நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 471 விசேட மருந்தக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது 109 மருந்தகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 86 சட்டமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 362 மருந்தகங்களில் விசேட சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. அண்மைய சோதனைகளையும் இணைத்துக் கொண்டதன் பின்னர், இவ்வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த விசேட மருந்தக சோதனைகளின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் நீதிமன்ற…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

செம்மணி மனித புதைகுழியின் 44ஆவது நாளான நேற்று (05), மேலும் 8 எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 44ஆவது நாளான நேற்று (05), மேலும் 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், செம்மணி மனித புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் கீழ் இதுவரை மொத்தமாக 491 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 489 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி எலும்புக் கூடுகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்

செம்மணி எலும்புக்கூடுகளின் ஆய்வு விவகாரம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை சேகரித்து பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்எம்.பி வலியுறுத்து செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமெவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 05.08.2026இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் ஓகஸ்ட் 04ஆம் திகதி நேற்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் செம்மணிமனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483மனித எலும்புக்கூடுகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டெங்கு ஒழிப்புக்கு இந்தியா வழங்கிய மலத்தியன் அமைச்சரிடம் ஒப்படைப்பு

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா 500 லீற்றர் மலத்தியன் பூச்சிகொல்லியை வழங்கியுள்ளது.சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இந்த நன்கொடை, இலங்கையின் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப ஆதரவாக அமைவதோடு, பொது சுகாதாரத் துறையில் இலங்கை மற்றும் இந்தியா இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் தற்போது பயன்படுத்தப்படும் சில பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்திைய உருவாக்கியிருப்பது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மாற்று பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்பத் தரமுடைய மலத்தியன், அதிக ஆபத்து நிலவும் பகுதிகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

முல்லை, மன்னார் வைத்திய சாலைகளுக்கு CT, MRI ஸ்கேனர் இயந்திரங்கள். நளிந்த ஜயதிஸ்ஸ

வடக்கில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளுக்கு சி.ரி, எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.ரவிகரன் எம்.பி தமது கேள்வியின் போது; மன்னார் வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கேனர் வசதிகள் ஏற்படுத்தப்படுமென ஏற்கனவே சுகாதார அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் சி,ரி ஸ்கேனர் வசதி இல்லாமல் நீண்டகாலமாக முல்லைத்தீவு மாவட்ட நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பல நூற்றுக் கணக்கான நோயாளர்கள் சி.ரி ஸ்கேன் எடுப்பதற்காக வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வரவேண்டிய நிலையே காணப்படுகிறது.அந்த வகையில் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளுக்கும் சி.ரி ஸ்கேனர் வசதிகளை வழங்க வேண்டுமென,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அம்பாறையில். ஐஸ்’ போதைப் பொருளுடன் மூவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிராந்திய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, அம்பாறை பிராந்திய பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து தலா 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான நபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 14,700 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அம்பாகஹவெல்ல, ஜெமுனுபுர மற்றும் பொல்வக காலனி பகுதிகளைச் சேர்ந்த 21 முதல்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு வருகை

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்று புதன்கிழமை இலங்கைக்கு வருகை தருகின்றார். கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு, உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள் குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது. தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து அவர் விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளார். இந்தியாவின் ‘அண்டைய நாடுகளுக்கு முதலுரிமை’ கொள்கையின் அடிப்படையில், இலங்கையுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த புதுடில்லி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தைப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை மற்றும் மன்னார் மருத்துவமனைக்கு CT, MRI இயந்திரங்கள் ரவிகரன் கோரிக்கை

முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது மருத்துவமனைகளுக்கு CT, MRI இயந்திரங்கள் வழங்கப்படும்; ரவிகரன் எம்.பியின் கோரிக்கைக்கு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மருத்துவமனைகளில் CT, MRI இயந்திரங்கள் இன்மையால் நோயாளர்கள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது மருத்துவமனைகளுக்கு துரிதகதியில் CT, MRI இயந்திரங்ளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விரைவில் CTஇயந்திரம் வழங்கப்படுமெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, முல்லைத்தீவு மாவட்ட பொதுமருத்துவமனைக்கு எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் CT, MRI இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பதிலளித்துள்ளார். நாடாளுமன்றில் 04.08.2026இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம்தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இதுதொடர்பில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சீரற்ற வானிலை தீவிரம்: உயிரிழப்பு 7 ஆக உயர்வு;

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் – பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், அங்கு வசித்து வந்த 47, 58 மற்றும் 83 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. வட்டவளை, ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கைக்கு குறுக்காக அமைந்துள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும், நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை…

மேலும் படிக்க