மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, துணிகரக் கொள்ளை
யாழ்ப்பாணம், அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் தகவல்களின்படி, நேற்றுமுன்தினம் இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அப்போது வீட்டில் இருந்தவர்களை தாக்கிய குறித்த கும்பல், சுமார் 10 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் முகங்களை மூடியபடி வந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என வீட்டார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் நோக்கில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க