இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடற்பிராந்திய ங்களுக்கு சிவப்பு அறிவிப்பு; கடலுக்கு செல்லத் தடை

நாட்டின் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.​அந்த வகையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வர தொழில்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகளை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கிணங்க, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? பலாலி மக்கள்

எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களை சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இன்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பல ஆண்டுகளாக தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் காணப்படுவதால் வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும், பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும், மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மக்கள் தமது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வரணி பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று மரத்துடன் மோதியதில் மூவர் காயம்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று மரத்துடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று பிற்பகல் 4 மணியளவில் வரணி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மகிழுந்து, வரணி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ஆலமரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் மகிழுந்து பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடளாவிய பொலிஸ் தேடுதல் நடவடிக்கை 437 சந்தேகநபர்கள் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 437 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 33,024 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன்போதே இந்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 135 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 65 நபர்களும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 68 நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,189 நபர்களுக்கு எதிராக சட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? –

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரம் காரணமாக பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் விவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடவுச்சீட்டை முறையாக ஸ்கேன் செய்து வாசிக்க முடியாததால், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என பிரித்தானிய அதிகாரிகள் சந்தேகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடவுச்சீட்டுக்கான கட்டணம் 6,000 ரூபாயாக தொடரும் நிலையில், கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்பு அல்லது நீட்டிப்பு பக்கங்கள் இல்லாததுடன், அச்சுத் தரமும் குறைவாக இருப்பதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன், குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்தில் கசிவது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக சில…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் கைது

சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல   மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி   ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.  நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர். சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது. இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புதிய கட்டுமான நடவடிக்கை களுக்காக, தற்காலிக இடமாற்றம் குறித்து விசேட ஆலோசனை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் முன்னர் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் இயங்கி வருகிறது. போதனா மருத்துவமனையில் தரைமட்டத்திலுள்ள சில பழமையான கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய மாடிக் கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகள் நிறைவடைய மூன்று ஆண்டுகள் செல்லும் என்பதால், இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர வேண்டிய சிகிச்சைப் பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான குறித்த கட்டடத்துக்கு மாற்றுவது தொடர்பாகவும், அதற்கான ஒப்பந்தம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் : குடும்பப் தகராறால் இரசாயனம் அருந்திய நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய துரைராசா புஸ்பநாதன் என்பவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர், வீட்டிலிருந்த கல்சியம் நீக்கி  திரவத்தைக் குடித்துள்ளார். இரசாயனத்தை அருந்தியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மீட்புக் குழுவினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான திடீர் மரண விசாரணைகளை அதிகாரி வி. அன்ரலா மேற்கொண்டுள்ளதோடு, மரணத்திற்கான மேலதிக பின்னணிகள் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இடிந்து விழும் அபாயத்தில் பழமையான இரும்புப் பாலம்; பரவிப்பாஞ்சான் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள பழமையான இரும்புப் பாலம் சேதமடைந்துள்ள நிலையில், அதனை உடனடியாக சீரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏ-9 பிரதான வீதியிலிருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள குறித்த பாலம், 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாகவும், 1985ஆம் ஆண்டு சேதமடைந்த பின்னர் விடுதலைப் புலிகளால் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நீண்டகாலமாக மக்கள் பாவனையில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், பல்வேறு மக்கள் போராட்டங்களின் பின்னர் 2018ஆம் ஆண்டு கட்டம் கட்டமாக மீள மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பரவிப்பாஞ்சான் கிராமத்தின் வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக…

மேலும் படிக்க