யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத் திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கள விஜயம்
யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கள விஜயம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (26.05.2026) விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் கெளரவ அருண ஜெயசேகர அவர்கள், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட இதுவரை விடுவிக்கப்படாத பகுதிகளில் விசேட கள ஆய்வொன்றை மேற்கொண்டார். இந்த கள ஆய்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கெளரவ ராமலிங்கம் சந்திரசேகர் , பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் நிலப்பரப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…
மேலும் படிக்க