தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒரே நேரத்தில் பல பகுதிகளில் இடம்பெற்ற சுத்திகரிப்பு நடவடிக்கை

’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டின் பல மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் இன்று (23) ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். “அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில், யாழ்ப்பாண பண்ணை கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. இலங்கை இராணுவத்தின் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் 256 கரையோர சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கிணங்க யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 30 இடங்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புகளுடன், அரச அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கிழக்கு காணிகளை பாதுகாக்க விசேட குழு – ஜனாதிபதி அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விசேட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்படுவதால் மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இதனைத் தடுக்கும் நோக்கில் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று (22) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும், அம்பாறை மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாக பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாக அமைப்புகள் அரசியல் சார்ந்தவை அல்ல, அவை முழுமையாக நிர்வாக பணிகளாகவே செயல்பட வேண்டும் எனவும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து தொலைத்தொடர்பு கம்பம் உடைந்து சேதம்

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், தொலைத்தொடர்பு கம்பம் இரண்டு முழுமையாக உடைந்து சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து இன்று (22) அதிகாலை 12.00 மணியளவில் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட92 ம் கட்டை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சீமந்து (சிமெண்ட்) ஏற்றுவதற்காகச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த வேளையில் லொறியில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் (நித்திரைச் சிறுக்கம்) காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி தொலைதொடர்பு காமத்தை உடைத்துக்குண்டு மரத்தில் மோதி  அருகில் இருந்த மற்றுமோர் தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் முதன்மைப் பணவீக்க மதிப்பு, ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது. இது மார்ச் மாதப் பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும். மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதம் வரை சற்று அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவற்ற பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதம் வரை மிகக் கடுமையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் தேசிய பணவீக்கம் இந்த அளவுக்குத் திடீரென உயர்வடைவதற்கு, உணவற்ற பிரிவில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை; நீதிமன்றில் வெளிவந்த தகவல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். சாட்சியமளித்த பொலிஸார், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இருவரின் மரண விசாரணைகளையும் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியலை அன்றைய தினம் வரை நீடித்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சடுதியாக விலை அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களுக்குள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. டொலரின் மதிப்பு உயர்வால் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளும் கடந்த 10 நாட்களுக்குள் கணிசமாக உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது: அந்தவகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 225 ரூபாயிலிருந்து 245 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.10 நாட்களுக்கு முன்னர் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், இன்று 200 ரூபாவை நெருங்கியுள்ளது. அதேநேரம், ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 900 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், வெள்ளைப்பூண்டு ஒரு கிலோகிராம் 350 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் போராட்டம்!

வேதன முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் இன்று (21) முதல் காலவரையறையற்ற தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இதற்கு முன்னர் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் போன்ற வெளிப்புறக் குழுக்களில் பங்கேற்பதில் இருந்து பொறியியலாளர்கள் விலகியிருப்பார்கள் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுத்பால ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார். மேலும், தேசிய தேவைகளைக் கருத்திற் கொண்டு இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த, வீதி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்படாத ஏனைய பணிகளில் இருந்தும் விலகியிருக்க பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளதாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது பாடசாலை மாணவன் பலி

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு (19) இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயது றிஸ்வான் சிப்கி எனும் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும் காயமடைந்துள்ளார்.விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது – மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று , மீண்டும் மூதூருக்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விளகி இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இளைஞனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்!

மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு  வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம்  வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட கூட்டம்  மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்,  பிரதி அமைச்சருமான உபாலி   சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள்,  திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டார்கள். கடந்த பல வருடங்களாக இந்த   ஈவு    வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தொடர்ச்சியான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முற்பகல் வௌியிடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு இன்று முற்பகல் 08.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் நிலவும் மோசமான வானிலை காரணமாக அவசரகால நிலை ஏற்பட்டால், உடனடியாக செயற்படுவதற்கு ஹெலிகாப்டர்களும் படையினரும் தயாராக இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.அதேவேளை, நேற்று பிற்பகலுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில்…

மேலும் படிக்க