அண்மை செய்தி தாயகச் செய்தி 

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம்

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம் யாழ்ப்பாணம், நெடுங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய, பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த சிப்பாய் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்கு வந்த அவரிடம், நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதமை தொடர்பில் கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் முகாமிலிருந்து வெளியேறிய அவர், அரியாலை – நெடுங்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மானிப்பாய் காணி விவகாரம்: அப்பாவி மக்களை பலிகடாவாக்க வேண்டாம்!

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி தொடர்பாக சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான செய்திகளால் தாம் மற்றும் தமது குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர், இன்றைய காலச் சூழலில் ஊடகங்களின் விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றாலும், உண்மைக்குப் புறம்பான செய்திகளின் தாக்கம் அப்பாவி மக்களையும் அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதிப்பதாகத் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பகுதியில் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டதாகவும்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தொடர்பணியில் ஏர் நிலம்..ஆழ்துளைக் கிணறு அமைப்பு.

தொடர்பணியில் ஏர் நிலம்.. 05.06.2016இல் இறைபதமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு நாள் 05.06.2026 ஆகும்.. இவ் நாளில் அவரது ஆன்மா சாந்திபெற இறைவணை வேண்டுவதோடு நினைவுகளால் வணங்குகின்றோம். இறைபமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தாயகம் மன்னார் முத்தரிப்புத்துறை 70 குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்தி செய்யுமுகமாக ஆழ்துளைக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதோடு சிறப்புணவு வழங்கி ஆன்ம சாந்தி பிரார்தனையும் நடைபெற்று பயன்தரு மரக்கன்றும் நடுகை செய்யப்பட்டது… இச் செயற்திட்டத்திற்கு அவரது சுவிற்சர்லாந்து வாழ் மகள் திருமதி ராதிகா கஜேந்திரன் அவர்கள் 3,24,000/= நிதியினை வழங்கியிருந்தார். இவ் நிதியுதவி நல்கிய குடும்பத்தினர்கும் இப் பணியை நிறைவாக்கிய “ஏர் நிலம்” தொண்டமைபின் இணைப்பாளர் கவிஞர் மன்னார் பெனில், நிர்வாக இயக்குனர் திரு.தனம் நித்தி ஆகியோருக்கும் பயன்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடி யேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த கிராமங்களை மீள்குடியேற்றம்செய்வது தொடர்பில் விசேட கூட்டங்களை ஏற்பாடுசெய்யுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இகியோருக்கு இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026இன்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் ஆண்டான்குளம் கிராமமும்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி அகழ்வில் மேலும் 14 எச்சங்கள்; இரும்பு வளையம், சிறுமியின் காப்பு போன்றன மீட்பு

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது. என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் ஒரு இரும்பு வலயம் ஒன்று சான்று பொருள் மீட்கப்பட்டுள்ளது. சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஜெயபுரம் பகுதியில் நிரந்தரமான நீதிமன்றம் அமைப்பதற்கு சுமார் மூன்று ஏக்கர் காணி

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகர பகுதியிலேயே நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. இதனால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் மற்றும் ஜெயபுரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வருவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டில் இருந்து குறித்த பகுதியில் நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதற்கு பிரதேச செயலகத்தினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் ஜெயபுரம் பகுதியில் நிரந்தரமான நீதிமன்றம் அமைப்பதற்கு சுமார் மூன்று ஏக்கர் காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அடையாளப்படுத்தப்பட்ட காணி வன வள பகுதியினரின் ஆளுகைக்கு உட்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால், குறித்த காணியினை நீதிமன்றம் அமைப்பதற்கு பெற்றுக் கொள்வது தொடர்பான ஒன்றிணைந்த கூட்டுக்களவிஜயம் நேற்றைய தினம் (15.06.2026) இடம்பெற்றது.இக்களவிஜயத்தில் கெளரவ மேல் நீதிமன்ற நீதிபதி, கெளரவ மாவட்ட நீதிமன்ற நீதிபதி, பிரதேச செயலாளர், மாவட்ட வன வள அதிகாரி,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு புதிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம்

பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு புதிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவின் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளராக தெரிவு செய்யப்பட்ட திருமதி கஜதீபன் விதுஜா அவர்கள், 2026.06.01 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. S. முரளிதரன் அவர்களிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இந்நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் மாவட்ட காணி பதிவாளரும் கலந்துகொண்டார். பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு நீண்டகாலமாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமிக்கப்படாத நிலையில், பல்லவராயன்கட்டு மேற்கு பிரிவின் பதிவாளரே பதில் கடமையாற்றி வந்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கென தனியான பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளதால், அப்பிரதேச மக்கள் தங்களது பிறப்பு, இறப்பு…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தேசிய வீட்டுத்திட்டம் 2026; கிளிநொச்சியில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட 3 புதிய வீடுகள்

தேசிய வீட்டுத்திட்டம் 2026;கிளிநொச்சியில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட 3 புதிய வீடுகள் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர் டி.பி.சரத் நேற்று (16) கிளிநொச்சி மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 3 புதிய வீடுகள் பிரதியமைச்சர் T. B. சரத்தினால் சம்பிரதாய பூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இளங்குமரன் ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த வீடு, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. போரின் பாதிப்பு,குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் வீடுகளை நிர்மாணிக்கும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு

வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கானகாசோலை வழங்கும் நிகழ்வு 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (16) பி. ப. 3.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா பங்குபற்றினார்கள். இந் நிகழ்வில் அரசாங்க அதிபரின் தலையுரையினைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனின் கருத்துரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத்தினால் சிறப்புரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் பட்டா வாகனத்தில் லொறி மோதி விபத்து; இருவர் பலி

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின்  வவுனியா – பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோதிய பின்னர் குறித்த லொறி பட்டா வாகனத்தின் மீது கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க