வவுனியா அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியா நகர அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ. 250 மில்லியனும், பிரதேச அபிவிருத்தியின் கீழ் 36 வீதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 250 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் உள்ள 9 பெரிய பாலங்களைப் புனரமைப்பதற்காக ரூ. 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 500 மீற்றருக்கும் குறைவான நீளத்தைக் கொண்ட 21 கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூ. 350 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது,…
மேலும் படிக்க