அண்மை செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்தி மூன்று பேர் கைது

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்திமூன்று பேர் கைது இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து, 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன் இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (6) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய சந்தேகநபர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மின்னல் தாக்கியதில் முன்னாள் போராளி உயிரிழப்பு

இன்று 07/06/2025 புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மதியம் 2:00 மணி அளவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் 8ம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிப்பைச் சேர்ந்த அருமைநாயகம் .யசோதரன் [ வசக்கண்டு ] என்னும் முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார்

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

விடுதலைப்புலிகளுக்கு அகவை 49

புதிய தமிழ்ப் புலிகள் என்பது 1972 மே 22 ஆம் நாள் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தனது 17வது வயதில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பைத் தொடங்கினார் இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்ப்பதையும், தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட புரட்சிகர அமைப்பாகும் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் 1976 மே 5 ஆம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறைக்கு கொண்டுகொண்டு வரப்பட்டது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மன்னார்-யாழ் பிரதான வீதியில் பஸ் விபத்து; 

மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் நேற்று 03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பஸ் கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பஸ்ஸில் மோதி குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிலில் நின்ற நபரும் காயமடைந்ததுடன்,அவரது மோட்டார் சைக்கிலும் பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த விபத்தில் ஹென்டனர் ரக வாகனத்தின் சாரதி,உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது…

மேலும் படிக்க