முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி;
முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி; 2027இல் புலிபாய்ந்தகலிற்கு 53.5மில்லியன், முல்லை கடற்கரைக்கு 80மில்லியன் நிதி ஒதுக்கப்படுமென பதில் முல்லைத்தீவு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்கென 53.5மில்லியன் ரூபாயும், முல்லைத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்காக 80மில்லியன்ரூபாயும் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன்போது துறைசார் அதிகாரிகளால் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழு அறையில் 25.06.2026இன்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவலகள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம்…
மேலும் படிக்க