சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (15) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நாளைய தினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி முதலாம் கட்ட அகழ்வு பணிகள் 09 நாட்கள் நடைபெற்றதில், 19 மனித எண்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

ட்ரோன்’ பறக்க விட்டவர் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ‘ட்ரோன்’ பறந்தமையால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பதற்றம் ஏற்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத ‘ட்ரோன்’ ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டது. ‘ட்ரோனை’ அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதேநேரம் இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு  சிறை பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டது. இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ‘ட்ரோன்’ அது எனக் கண்டறியப்பட்டது. பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

.விவசாயிகளிட மிருந்து துரிதகதியில் நெற்கொள் வனவை மேற்கொள் ளுமாறு ரவிகரன் வலியுறுத்து;

விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து; முல்லைத்தீவில் 15ஆம்திகதி நெற்கொள்வனவு விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து; முல்லைத்தீவில் 15ஆம்திகதி நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென நெல் சந்தைப்படுத்தல்சபை பதில் விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் சிறுபோக நெல்கொள்வனவை ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன், எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுமெனவும் தெரிவித்தார். கடந்த 08.07.2026அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழ். பல்கலையில் ‘நீதம்’ சட்ட இதழ் வெளியீடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த ‘நீதம்’ சட்ட இதழின் வெளியீட்டு விழா, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் சனிக்கிழமை (11) நடைபெற்றது. இந் நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் சம்பத் அபேயகோன் பிரதம விருந்தினராகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் கௌரவ விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி நாயகம் சுஹர்ஷி ஹேரத்தும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவனைக்காக கையளிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் மற்றும் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கற்பக பிள்ளையார் கோவில் வீதியானது 1.5 நீளமான வீதியாகும். இதன் புனரமைப்பு பணி 74.5 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி கண்டாவளை பாலத்தில் நடந்த விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிக் கொண்டு பயணித்த கப் ரக வாகனம், பரந்தன் வீதி ஊடாக முல்லைதீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது, வெளிகண்டல் பகுதியில் வேகட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பளையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

புனரமைக்கப் பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு – சுமார் ரூ. 3.5 மில்லியன் செலவில் தற்காலிக பாலம் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28) உடைந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று (09) மாலை முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து இன்று (10) காலை 9.00 மணி அளவில் மீண்டும் மக்களின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் ரூ. 3.5 மில்லியன் செலவில் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள் பாலத்திற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள வீதி அறிவுறுத்தல்களை பின்பற்றி இப் பாலத்தின் ஊடாக மிகவும் அவதானமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை நிரந்தரமாக புதிய பாலம் ஒன்று அமைக்கும் வரை கனரக வாகனங்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழ் மக்களி டமிருந்து ராஜபக்சக் கள் கொள்ளையடித்த நகைகளை மக்களு க்கு வழங்க வேண்டும்

தமிழ் மக்களிடமிருந்து ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீண்டும் அவர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தமிழரசுக்கட்சி எம். பி எஸ். சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில் ஊழல் நடந்துள்ளதால் இது தொடர்பில் விசாரணை செய்யாமல் விட முடியாது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நகைகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக பட்டியலைக் கோரி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர்,எத்தனை ஆயிரம் பேர் நகைகளை அடகு வைத்துள்ளனர். அவ்வாறென்றால் எவ்வளவு கோடி ரூபா பெறுமதியான நகைகளை ராஜபக்‌ஷ அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது என்பதனை வெளிக்கொண்டு வாருங்கள் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கதிர்காம பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபல் நகர் பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், சாரதி உட்பட நால்வர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்று, அவர்களை இறக்கிவிட்டு திருகோணமலை நோக்கி திரும்பி வந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மோதியதில் வீடு மற்றும் அதிலிருந்த பல்வேறு உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.…

மேலும் படிக்க