தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக மீனவர்கள் நேற்றிரவு கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஐரோப்பாவில் அபாயச் சிக்னல்கள்: ஜெனிவா பேச்சுவார்த்தை தோல்வி, பால்டிக் பதற்றம் அதிகரிப்பு,

ஐரோப்பாவில் அபாயச் சிக்னல்கள்: ஜெனிவா பேச்சுவார்த்தை தோல்வி, பால்டிக் பதற்றம் அதிகரிப்பு, போர் ஆபத்து புதிய கட்டத்தை எட்டுகிறது ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✦ நம்பிக்கையற்ற நிலையில் முடங்கிய ஜெனிவா ராஜதந்திரம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே அமெரிக்காவின் முன்னிலையில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தத் தீர்வும் எட்டாமல் முடிவடைந்தன. நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த முழுமையான போரில், இரு தரப்புகளுக்கும் இடையிலான ஆழமான கருத்து வேறுபாடுகளை இது வெளிப்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவான சமரசத்தை வலியுறுத்திய போதிலும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா திட்டமிட்டே பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், உக்ரைன் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்ற வாஷிங்டனின் வெளிப்படையான அழைப்புகளையும் அவர் கண்டித்தார். ரஷ்ய பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தையை “ஆக்கபூர்வமானது” என்று வர்ணித்தாலும், ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பை புறக்கணித்து பெருந்தோட்டத்திற்கு படையெடுக்கும் மலையக இளைஞர்கள்!

கொழும்பை புறக்கணித்து பெருந்தோட்டத்திற்கு படையெடுக்கும் மலையக இளைஞர்கள்! கொழும்பு உணவகங்களில் (Hotels) பணிபுரிந்த பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தங்களது வேலைகளைக் கைவிட்டு மீண்டும் பெருந்தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உணவகங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டதே இதற்குக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. பொரள்ளை மற்றும் மருதானை உள்ளிட்ட கொழும்பின் பல உணவகங்களில் பணியாளர்கள் (Waiter), சமையல் கலைஞர்கள் (Chef) உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், தற்போது அவர்கள் அதிக ஊதியம் காரணமாக மீண்டும் தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பரந்தன் கரைச்சி முல்லைத்தீவு (A035) வீதி தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல்.

பரந்தன் கரைச்சி முல்லைத்தீவு (A035) வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் பொதுமக்களுக்கு அறிவிக்கும் மிக முக்கியமான அறிவித்தல். பரந்தன் கரைச்சி முல்லைத்தீவு (A035) வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக வாகனங்களுக்கான பயணக்கட்டுப்பாடு தொடர்பானது. மேற்படி பாலமானது அண்மையில் ஏற்பட்ட “டித்வா” புயலின் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் தற்காலிக பாலமாக அமைக்கப்பட்டு பொதுப்பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது. இப்பாலத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக போக்குவரத்திற்கு உகந்த முறையில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தமை தாங்கள் அறிந்ததே. இந்நிலையில், அண்மைக்காலமாக இப்பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட பாதிப்புக்களைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட தரப்புகளின் நேரடியான களவிஜயம் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கீழ் குறிப்பிடப்பட்டவாறு மட்டுப்படுத்தப்படுகின்றது. 01. பேருந்து தவிர்ந்த அனைத்து விதமான கனரக வாகனங்களும்…

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை 

சிதறடிக்கப்பட்ட ஓர் தேசத்தின் புலம்பல் — போர், புலம்பெயர்வு மற்றும் நினைவுகளிலிருந்து செதுக்கப்பட்ட ஓர் அழுகை —

꧁༺ சிதறடிக்கப்பட்ட ஓர் தேசத்தின் புலம்பல் ༻꧂ — போர், புலம்பெயர்வு மற்றும் நினைவுகளிலிருந்து செதுக்கப்பட்ட ஓர் அழுகை — ❀••┈┈•┅━┅┉┈ ┈┉┅━┅•┈┈••❀ ❖ இன்னும் மூச்சுவிடும் போர் ❖ போர் முடிந்துவிட்டது என்றார்கள், ஆனால் காற்று இன்னும் துப்பாக்கிச் சூட்டுப் போல நடுங்குகிறது. மண் இன்னும் புகையையும் உப்பையும் மணக்கிறது, கடலோ இன்னும் பெயரற்ற நினைவுகளை சுமந்து வருகிறது, அந்த நினைவுகள் உச்சரிக்கத் துணியாதவையாக. இடப்பெயர்வு காலடிச் சுவடுகளால் மட்டுமல்ல— அது எலும்புகளுக்குள் குடியேறி, அந்நிய அறைகளில் பாடப்படும் தாலாட்டுகளில், தாயகமற்ற வரைபடங்களில் உறைந்து கிடக்கிறது. ❖ ஒரே இனத்தின் இரு ஆன்மாக்கள் ❖ ஒரு ஆன்மா தீபம் போல எழுகிறது, விடுதலைக்காக அமைதியாய் எரிகிறது, மொழியை புனித நெருப்புப் போலக் காக்கிறது, வரலாற்றை காயமடைந்த குழந்தை போலத் தாங்குகிறது. மற்றொரு ஆன்மா அந்நியக் காற்றில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கில் இந்துநாகரீம் மற்றும் சங்கீத பாட ஆசிரிய ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும் – ரவிகரன்

வடக்கில் இந்துநாகரீம் மற்றும் சங்கீத பாட ஆசிரிய ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வேண்டுகோள்; சமச்சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை சீர்ப்படுத்துமாறும் வலியுறுத்து. பட்டதாரிகளைஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளபோதும், கர்நாடக சங்கீதம், இந்துநாகரீக பாடங்களுக்கான விண்ணப்பங்கள் வடமாகாணத்தில் இதுவரை கோரப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூயவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். கர்நாடக சங்கீத பாடத்திற்கு யாழ்ப்பாணத்தில் 81ஆசிரியர்கள் மிகையாக உள்ளபோதும் வன்னியில் 46ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதேபோல இந்துநாகரீக பாட ஆசிரியர்களும் வடமாகாணத்தில் சமச்சீரற்ற விதத்தில் சமச்சீரற்ற விதத்தில் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே வடக்குமாகாணத்தில் நிலவும் இவ்வாறான சமச்சீரற்ற ஆசிரியர் வளப்பரவலாக்கத்தை சீர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் ஹரிணி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன்  நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். ஓலைத்தொடுவாய்  பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக  நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நபரிடம் இருந்து டைனமைட் வெடிபொருள் பாவித்து பிடிக்கப்பட்ட சுமார் 450 கிலோ மீன் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன், வாகனம் ஒன்றும், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளிலும் நீர் தேங்க ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதையும் காணமுடிகின்றது. அறுவடை செயற்பாடுகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் அறுவடை செய்தவர்கள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினராகி 75 ஆண்டுகள் நிறைவடைவதையும், இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவையும் ஒட்டியே இந்த விஜயம் அமைந்தது. மத்திய வங்கி வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, கலாநிதி ஜோர்ஜீயேவா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போதைய நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் வழங்கப்பட்ட உறுதியான ஆதரவிற்கும், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு உதவும் வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்ய தீவிரமாக ஒத்துழைத்தமைக்கும் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினருக்கு ஆளுநர் தமது மனமார்ந்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

காணிகளை பறித்து சிங்களவர்களுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பாகவே தமிழர்கள் மகாவலியை நோக்குகின்றனர்;

தமது காணிகளை பறித்து சிங்களவர்களுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பாகவே தமிழர்கள் மகாவலியை நோக்குகின்றனர்; பாதகமான கிவுல் ஓயா திட்டத்தை ஒருபோதும் ஏற்கோம் என கடுமையாக எதிர்த்த – ரவிகரன் எம்.பி தமது காணிகளை பறித்து பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்ற ஒரு கட்டமைப்பாக மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் வெறுப்போடு நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கப்படும் தமிழ் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதகமான கிவுல் ஓயாத் திட்டத்தினை ஒருபோதும் தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 17.01.2026இன்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான விசேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த…

மேலும் படிக்க