இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அடையாள வேலைநிறுத்தம் நிறைவு.

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி சமிக்ஞைகளை விழிப்புணர்வு நிகழ்வு

வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று (10)விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.யாழ்பாணம் பொலிசாரும் தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் இணைந்து இன்று ஆரிய குளம் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தனர். இதன்போது சந்தியிலுள்ள சமிக்ஞையில் பாதசாரிகள் கடக்கும் கடவையில் அவர்களுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள வாகனங்களை அகற்றியும் அவர்களை எச்சரித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.இதேவேளை, குறித்த நிகழ்வில் வித்தியாசமான முறையில் இவர்கள் வேடமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதா பமாக உயிரிழப்பு.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டிப் பயணி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்  64 வயதுடைய  பாலகுகன்   என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அரசாங்க மருத்துவ சங்கத்தினருடன் பேச்சுவார்த்தைக்கும் இடம் கிடையாது! நளிந்த ஜயதிஸ்ஸ

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நியாயமற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருடன் இனி எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடம் கிடையாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேவையானால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நீதிமன்றம் செல்லலாம் என சபையில் குறிப்பிட்ட அவர், புதிய நியமனம் பெற்றுக்கொண்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய பொலிஸ் பாதுகாப்பும் அத்துடன் மக்கள் பாதுகாப்பும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நியாயமற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் . அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த மாதத்தில் மாத்திரம் 5 தடவைகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ள…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழப்பு.

வவுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று இரவு  இடம்பெற்றுள்ளது.செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

விளையாட்டுப் பொருட்களுடன் ஐஸ் போதைப்பொருள் சந்தேக நபரும் கைது

அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது 43 வயது மதிக்கத்தக்க தோடம்பழம் சுயேட்சைக் குழுவின் காரைதீவு பிரதேச சபை முன்னாள்  உறுப்பிராக செயற்பட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் பயன்படுத்திய பல வீடுகளில் மணிக்கணக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது, கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும்   மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் இலத்திரனியல் தராசு 2, கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், கொரியர் ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள்  சட்ட நடவடிக்கைக்காக …

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான ரயில் சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஆசன முன்பதிவுகள் கடந்த 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் ஆர்வத்துடன்  தமக்கான பதிவுகளை மேற்கொள்வதை காணமுடிகின்றது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் டீசல் விலை அதிகரிப்பு.

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கமைய, எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 590 ரூபாய் லங்கா சூப்பர் டீசல் (LSD) – 600 ரூபாய் எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 620 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லாஃப்ஸ் எரிவாயுவை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 7,000 மெற்றிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தது. குறித்த எரிவாயு கையிருப்பினை லாஃப்ஸ் நுகர்வோருக்கு இன்று முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அஸ்வெசும கொடுப் பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப் பட்டுள்ள தாக ஜனாதிபதி!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும்  தற்போதைய உலகப் போர்ச் சூழலினால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். இதன்போது எரிபொருள் மற்றும் வலுசக்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எரிபொருள் செலவினங்களுக்கு ஏற்ப விலைகளைத் திருத்தியமைக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தைப் பெறுமதிக்கு இணங்க, தற்போது ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கடுத்த தினமொன்றில் எரிபொருளுக்கான புதிய செலவு…

மேலும் படிக்க