மட்டக்களப்பில் குடிநீர் விநியோகம் – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக சுமார் 9,500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரச அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதன்போது, எல் நினோ தாக்கம் காரணமாக மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை குறைப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில்…
மேலும் படிக்க