தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பில் குடிநீர் விநியோகம் – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக சுமார் 9,500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரச அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதன்போது, எல் நினோ தாக்கம் காரணமாக மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை குறைப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் 1ஆவது சேவைக்கு BIA இல் உற்சாக வரவேற்பு

இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் 1ஆவது சேவைக்கு BIA இல் உற்சாக வரவேற்பு – வாரத்திற்கு 3 சேவைகள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கிய ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways) நிறுவனத்தின் முதலாவது விமானம் நேற்று (25) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது. இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் புதிய விமான சேவையின் ஆரம்பத்தை முன்னிட்டு, விமான நிலையத்தில் விசேட நீர் பீச்சி வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்டிய நடனக் கலைஞர்களின் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன திடீர் கள விஜயம்!

யாழ். சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன திடீர் கள விஜயம்! யாழ்ப்பாணத்திற்கு நேற்று (25) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோகbத்திற்கு. தொடர்ந்தும் QR

மத்திய கிழக்கு மோதல் இன்னமும் முடிவுக்கு வராததால் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “மேற்கு ஆசியாவில் தொடரும் நெருக்கடிகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிச்சயமற்ற தன்மை என்பன உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் விநியோகத்தில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கு QR முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். QR முறைமை மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் நடைமுறையில் இருந்த போதிலும், எரிபொருள் நுகர்வானது சிறிய அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, டீசல் பாவனை சுமார் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமல் ஆக்கப்பட் டோர் தின நிகழ்வுக்காக யாழ்ப்பாண த்திற்கு 400 பேரை அழைத்து வர ஏற்பாடு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (25) நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக, பிற மாவட்டங்களிலிருந்து சுமார் 400 பேர் பஸ்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபாய் பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 பேர் பஸ்கள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர். இவர்களுடன் இணைந்து நிகழ்வில் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என மண்டப ஏற்பாட்டுத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பண்டார வன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்;

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள்மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 25.08.2026இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் உணவெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன், கலையரசி கமலேஸ்வரன், தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், தவராசா அமலன், சமூக ஆர்வலர்களான மணிவண்ணன் நிறோஜன், மரியநாயகம் மரியஎனஸ்ரின் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

துன்னாலை காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

அரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், துன்னாலை காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின்போது 20,000 மில்லிலீற்றர் கசிப்பு, 540,000 மில்லிலீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, அண்மைக்காலமாக வடமராட்சி பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு விற்பனை அதிகரித்து வருவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ், காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

யாழ்ப்பாணம், காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்ற சிலர், சடலம் ஒன்று கடலில் மிதப்பதை அவதானித்து இது தொடர்பில் ஊர்காவற்றுறை  பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.கரையொதுங்கிய சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மீனவர்களின் சடலமாக இருக்குமா எனவும் பொலிஸார் ஆராய்ந்துள்ளனர். எனினும், அண்மையில் எந்தவொரு மீனவரும் காணாமல்போனதாக முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்கவில் ஒரு கோடி பயணிகளை கையாளத் திட்டம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் ஒரு கோடி பயணிகளை கையாளும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.முதலாவது முனையத்தில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு விரிவாக்கத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”36 பயணிகள் பதிவு (Check-in) கவுண்டர்கள் மற்றும் முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட புதிய லொபி பகுதியை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முனையம் ஒன்றின் திறனை அதிகரிப்பதற்காக மேலும் நான்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த அனைத்துத் திட்டங்களும் ஒரு வருடத்துக்குள் நிறைவுசெய்யப்படும். இதன் மூலம் முனையம் ஒன்றில் பயணிகள் கையாளும் திறன் அடுத்த ஆண்டு, ஒரு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

SLS போலி தரச்சான்றுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

போலியாக இலங்கை தரச்சான்று முத்திரையை (SLS) பயன்படுத்தி சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.அவிசாவளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையிலே,இந்த போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அமிதிரிகல, ருவான்வெல்ல பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்தச் சுத்திகரிக்கப்படாத குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, அவிசாவளையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கு 500 மில்லிலீற்றர் முதல் 19 லீற்றர் வரையிலான பல்வேறு அளவிலான போத்தல்களில் போலியான SLS முத்திரை மற்றும் ‘894’ என்ற சான்றிதழ் இலக்கம் அச்சிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட இந்த 8,500 போத்தல்களும் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு பொறுப்பேற்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறான போலி உற்பத்தியாளர்கள் செலவுகளைக்…

மேலும் படிக்க