இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கோதுமை மா விலை இன்று முதல் உயர்வு – சிற்றுண்டி விலையும் அதிகரிப்பு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது கொடூரத் தாக்குதல்

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 5 மணியளவில் இடம்பெற்றதாகவும், தாக்குதல் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராக போதகர் அன்டனி செபஸ்டியன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அந்தப் பொறுப்பில் இருந்து பல்வேறு நிர்வாக விடயங்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் வழிநடத்தல் தொடர்பான பயிற்சிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. இதன் இறுதி நாளான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும் – ஜனாதிபதி

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து,  சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயாபுரம்’ வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்வரும் வரவு- செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லையில் சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி;

முல்லையில் சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி; சிறுவர் பாதுகாப்பு மாநாடும் முன்னெடுப்பு முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், “எதிர்கால தலைவர்களைக் கட்டி எழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு ஒன்றும் 27.08.2026இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மதுரம், விக்றி ஜெனரேஷன், ஷாறிபாத், ஹார்மெல், ப்லோமிங் ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் இந்த பேரணியும், மாநாடும் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் சிறுவர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இடம்பெற்ற குறித்த பேரணியானது முல்லைத்தீவு பேருந்துநிலைய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸ்நிலையம்வரை இடம்பெற்றது. அதற்கமைய சிறார்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டும், கோசங்கள் எழுப்பப்பட்டும் பேரணி முன்னைடுக்கப்பட்டது. அத்தோடு பேரணியின் நிறைவில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் அதிக விலைக்கு குடிநீர் விற்பனை; உணவகத்திற்கு ரூ.9.5 இலட்சம் அபராதம்

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 1 லீற்றர் குடிநீர் போத்தலொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக 200 ரூபாவிற்கு நுகர்வோர் ஒருவருக்கு குறித்த உணவகத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு பொருளைக் கொள்வனவு செய்யும் போது அதிலுள்ள அச்சிடப்பட்ட விலை மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டெங்கு தீவிரம்; உயிரிழப்பு 72 ஆக உயர்வு

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதுடன், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை நாட்டில் 94 ஆயிரத்து 292 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 29ஆயிரத்து 962 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களில் மேலும் 8 ஆயிரத்து 956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த நோயாளர்களில் 52.92 சதவீதமாகும். தென் மாகாணத்தில் 13 ஆயிரத்து 779 பேரும், மத்திய மாகாணத்தில்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

நேபாளம், சீனாவில் பேரழிவு வெள்ளம்! உதவிக்கரம் நீட்டும் ஐ.நா

நேபாளம் மற்றும் சீனாவில் பெரும் உயிரிழப்புகளையும், பலர் காணாமல் போகும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் தான் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ள குட்டெரெஸ், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளி அமைப்புகளும் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களைத் திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இன, மத மோதல் களுக்கு இனி இட மில்லை.! – ஜனாதிபதி

இலங்கையில் மீண்டும் எந்தவொரு இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42ஆவது தேசிய மீலாதுன் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இடம்பெற்ற இன மோதல்களால் இலங்கை பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளதாகவும், அந்தக் கொடூரமான அனுபவங்களின் பாதிப்பை இன்றைய தலைமுறையினரும் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டில் மீண்டும் எந்தவொரு இன மோதலும் உருவாகுவதற்கு இடமளிக்கப்படாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் நீதித்துறை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், நீண்டகாலமாக வழக்குகள் முடிவுக்கு வராமல் இருப்பதால் மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளிநொச்சியில் ரயில் கடவையில் கோர விபத்து – சிறுமி பலி

கிளிநொச்சி – யாழ் பல்கலைக்கழக வீதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில், கடவையை கடக்க முற்பட்ட காரை மோதியுள்ளது.விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்.புங்குடுதீவு கடற்கரையில் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலர் குறித்த சடலத்தை அவதானித்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், இதுவரை உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை. சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க