இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறை நிலைமை கட்டுப் பாட்டுக்குள்;விசேட விசாரணைக் குழுவொன்று நியமனம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் நேற்று (05) இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதலில் இருவர் உயிரிழந்ததோடு, இந்த வன்முறைச் சம்பவத்தின் போது காயமடைந்த சுமார் 35 கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமென தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்று அம்பலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட தர்க்கமே இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலானது “பூரு மூனா” (Booru Moona) எனும் பாதாள உலகக் கும்பல் தலைவருடன் நெருங்கிய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு அபிவிருத்திக்கு ரூ. 2000 மில். நிதி ஒதுக்கீடு. பிமல் ரத்நாயக்க

நெடுந்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் ரூ.1500-2000 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்பட அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார். நெடுந்தீவு பகுதியில் ரூ. 40மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது. அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.1500-2000 ஆயிரம் மில்லியன் வரை அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. நெடுந்தீவில் ரூ.40மில்லியன் செலவில் நிரந்தரமாக எரிபொருள் நிலையமொன்றை அமைக்கவுள்ளோம். நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிறுவ நாம் கோரிய போது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இராணுவ முகாமுக்கு முன் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (05.06.2026) 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்று (05) காலை கேப்பாபுலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மானிப்பாய் குப்பை மேடு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவு சேகரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த குப்பை மேட்டில் திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் சீரான கழிவு தரம்பிரிப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இம்முறை கழிவுப் பொருட்கள் முறையாக தரம்பிரிக்கப்படாததாலேயே தீ ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குப்பை மேடு குடியிருப்புகளுக்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரிக்கை

நெடுந்தீவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் (RO Plant) திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் RO Plant திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 80,000 லிட்டருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு, சுமார் 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், நெடுந்தீவில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது 1400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால், தற்போதைய நீர் உற்பத்தி போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் அரச…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை. ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டு யானையின் அட்டகாசம்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டுயானையின் அட்டகாசம் அதிகாரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். வீடுகளில் நெல்மூடைகளை வைத்திருக்கமுடியாத நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் வீடு ஒன்றிற்குள் புகுந்த காட்டுயானை நெல்பைகளை உடுத்து நாசாம் செய்து உண்டுள்ளது.இந்த நிலையில் இன்று(03.07.2026) அதிகாலை வேலை ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்த காட்டுயானை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட அறையின் கதவினை உடைத்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்த 6பை நெல்லினை எடுத்து உண்டு நாசப்படுத்தியுள்ளது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மாணவர்களின் பாதுகாப்புக்காக கிளிநொச்சி A9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கிளிநொச்சி A9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு – இன்று சாரதிகளுக்கு அறிவுறுத்தல் கிளிநொச்சி A9 வீதியின் இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ரிப்பர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் கடந்த ஜூன் 30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற வீதி விபத்துகளைத் தடுப்பது மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டது. அதன்படி, தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை, இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரையிலான A9 வீதிப் பகுதியில் ரிப்பர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொக்குத் தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: விளக்கம் கோரி ரவிகரன்

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்! முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குறித்த பகுதியில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலை குறித்தும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு 2026.06.29 அன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது. அந்த வகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி உப்பளம் அமைப்பதைத் தடுத்தல் மற்றும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தல் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து வினவல்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா;

ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஒதியமலை தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா 02.07.2026 நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் குறித்த ஆலயத்தின் கருவறை, முருகன் சந்நிதானம், நாகதம்பிரான் சந்நிதானம், வசந்தமண்டபம், வைரவர் சந்நிதானம் என்பவற்றுக்கு புதிய கட்டடங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வே இவ்வாறு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன் அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணற்காடு சந்தி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்திருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஆசிரியர் ஒருவரும், பிள்ளைகளை ஏற்றி சென்ற தாயும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது குடத்தனை கிழக்கு பகுதியிலிருந்து குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாட சாலையில் தனது இரண்டு பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது மருதங்கேணி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்களது மோட்டார் சைக்கிளும் மணல்காடு சந்தி பகுதியில் ஒன்றை ஒன்று…

மேலும் படிக்க