தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்- மருதனார்மடம் பகுதியில் கிணறு ஒன்றில் நபர் ஒருவரது சடலம்

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது. மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் இனங்கானப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு மிக விரைவில் எரிபொருள்.

ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவுடன் அரசியல் ரீதியான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேர்காணலில் ஒன்றில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.எரிபொருள் விநியோகம் தொடர்பாக அரசியல் ரீதியான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எண்ணெய் விநியோகம் ஆரம்பிக்கப்படும்.

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய பண வீக்கம் தோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை இல்லாத மிக மோசமான இடையூறு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் திகதி வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்  ஊடாக, சர்வதேச நாணய நிதியம் பல்வேறு பொருளாதார நிலைமைகள் குறித்த கணிப்புகளை முன்வைக்கவுள்ளது. போரினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் கடுமையான நிதி நிபந்தனைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையக்கூடும் என்று…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் வாள்களுடன் இளைஞன் கைது!

ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞன் ஒருவர் நேற்றைய தினம். திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணப் காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு  காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞனை    இன்று. செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக  காவல்துறை.தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண  காவல்துறை.நிலைய தலைமைப் காவல்துறை. பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டுதலின் கீழ் பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான  காவல்துறை குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சுழற்றியடித்த காற்றால் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்த மீனவர்கள்

புத்தளம் – உடப்பு கிராமத்தில் இன்று அதிகாலை தென்மேல் பருவக்காற்று திடீரென்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். அதிகாலை வழமை போல மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகிய நிலையில் காற்றின் வேகம் காணப்படவே அவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லாது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. இதனால் இயந்திரப் படகுகள், தெப்பங்கள், கரைவலைத் தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து தடைப் பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டு

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை  தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். நெடுந்தீவு – குறிகட்டுவான்  இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் குமுதினி திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையிலும், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் என பயணிகள் சேவையில் இருந்து முற்றாக அரச படகுகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு தீவு மக்களை தவிக்கவிட்டுள்ளனர். தனியார் படகொன்றே தற்போது பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.இதன்காரணமாக வழமையான அதன் மு.ப.11.30 மணி சேவையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் மு.ப.11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு சேவைகள் தொடர்பாக உரிய திட்டமிடல் இன்றி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி ஓரங்களில் கழிவுகள் வீதியால் செல்லமுடியாத துப்பாக்கிய நிலை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் வீதி ஓரங்களில் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றன.இதனை தடுக்கும் நடவடிக்கையாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதியோரங்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என அறிவிக்கப்பட்ட போதும் புதுக்குடியிப்பு நகர்பகுதி மக்கள் வீட்டுக்கழிவுகளை குறித்த வீதிக்கருகில் தொடர்ச்சியாக கொட்டிவருகின்றார்கள் இதனால் இந்த வீதி ஊடாக பயணிக்கும் போது அதிக துர்நாற்றம் வீசுவதுடன் காட்டு மிருகங்களின் நடமாட்டங்களால் வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வீதியால் பயணிப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதிகளவான மக்கள் வாழ்ந்து வரும் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் பிரதேச  சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கழிவகற்றல்  நடவடிக்கை சரியான முறையில் இல்லை என…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

25,000 தொன் உரத்துடன் நாட்டை வந்தடையவுள்ள கப்பல்

25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று நாளை (05) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் உருவாகியுள்ள உரப் பிரச்சினையை அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.அத்துடன், யல பருவம் ஆரம்பமாகும் இவ்வேளையில் விவசாயிகளிடையே உரப் பிரச்சினை குறித்த கவலைகள் காணப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது தேவையையும் விட அதிகளவில் சேற்று உரம் (TSP) மற்றும் பண்டி உரம் (MOP) கையிருப்பில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். யூரியா உரம் தொடர்பில் ஒரு சிறிய சிக்கல் காணப்படலாம் என்றாலும், தற்போது நாட்டில் 1 இலட்சம் தொன்களுக்கு நெருக்கமான கையிருப்பு உள்ளதாகவும், நெற்செய்கைக்குத் தேவையான 80,000 தொன்களுடன் ஒப்பிடுகையில் இது போதுமானது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.   உப பயிர்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடு தழுவிய அடை யாள வேலை நிறுத்தம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முடிவு, இன்று நடைபெறவுள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார். வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரம் ஏற்கெனவே இரண்டு முறை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேக நபர்கள் கல்பிட்டி யவில் கைது.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேகநபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர். கடந்த 31ஆம் திகதி கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற 98 கி.கி ஏலக்காயை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர். அதன்படி, கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பரப்பை உள்ளடக்கி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்கூறிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு (01) ஆய்வு செய்யப்பட்டது, மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் எண்பத்தெட்டு (98) கிலோகிராம் ஏலக்காய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களை கடற்படையின் கைப்பற்றினர்.…

மேலும் படிக்க