இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

காவலில் இருக்கும் ஈரானியப் பணியாளர்களை ஈரானுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் அமெரிக்கா

ஈரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையின் மனிதாபிமான உதவி குறித்த விவகாரத்தில் அமெரிக்கா தனது அழுத்தத்தைப் பிரயோகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச செய்தி முகமையான ‘ராய்ட்டர்ஸ்’ (Reuters) மற்றும் ஏனைய ஊடகங்களின் தகவல்படி,இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகத் தெரியவருகிறது: இலங்கையின் காவலில் இருக்கும் ஈரானியப் பணியாளர்களைத் தற்போதைய சூழலில் ஈரானுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஈரானிய தரப்பினர், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டு வீரர்களைத் தவறான பிரசார நோக்கங்களுக்காக (Propaganda) பயன்படுத்தக்கூடும் என்றும், அவ்வாறு நடக்காமல் இலங்கை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்த விவகாரத்தை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகவே அணுகுவதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இலங்கை இச்சூழ்நிலையில், சர்வதேச நாடுகளின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடு . நீதிமன்றை நாடவுள்ள ஆசிரியர் சங்கம்

வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில்  ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். சேவையின் தேவை இடமாற்றம் என்ற பெயரில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பின்றி வடமாகாண கல்வி திணைக்களத்தால், முன்னெடுக்கப்படும் சட்டவிரோத இடமாற்ற செயற்பாடுகளுக்கு துணைபோகும் வகையில் வடமாகாண ஆளுநர் செயற்படுகிறார். இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆணைக்குழுவுக்கும் சட்ட ஏற்பாடுகள் குறித்து முறையிட்டிருந்தும், சட்ட முரண் குறித்த விடயங்களுக்கு பதிலளிக்காமல் மழுப்பலான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது என்பது வடமாகாண ஆணைக்குழுவும் சுயாதீனமாக இயங்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. இன்றைய ஆளுநர் முன்னர் அரச அதிபராக இருந்துபோது, தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இஸ்ரேலின் பணிபு ரியும் இலங்கை யர்கள் அவதானத் துடன் இருக்குமாறு கோரிக்கை

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஹைஃபா (Haifa), நஹாரியா (Nahariya), எக்கர் (Acre), கலிலி (Galilee), அஃபுலா (Afula), கர்மேல் மலைத்தொடர் (Carmel Mountains), நாசரேத் (Nazareth), திபேரியா (Tiberias) உள்ளிட்ட வடக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள், லெபனான் திசையிலிருந்து வரக்கூடிய தாக்குதல்கள் மற்றும் நாட்டின் உட்பகுதிகளில் சில குழுக்களால் முன்னெடுக்கப்படக்கூடிய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தற்போது ஈரானில் இருந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில் குறைவு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்.படைத் தலைமையகம் அகற்றப்பட மாட்டாது.பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர,

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று  பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்து விரிவான விளக்கமளித்தார். “யாழ்ப்பாணம் படைத் தலைமையகம் அகற்றப்படவுள்ளதாகச் சிலர் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மிகக் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவுமே இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்: “நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணிகளை விடுவிக்கும் போது, ‘தேசிய பாதுகாப்பு’ என்பற்கே முதலிடம் வழங்கப்படும். பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பருத்தித்துறை  காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் “போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பருத்தித்துறை  காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, பருத்தித்துறை  காவல் துறையினரால்.பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது “விற்கின்ற -அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்”- அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும் அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்குவதே நமது இலக்கு. இந்த வாரம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208 பேரும் வெலிசறையிலுள்ள கடற்படை முகாமில்!

இந்தியக் கடற்படையால், பெப்ரவரி 15 – 25 ஆம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச கடற்படை கண்காட்சியில் பங்குபற்றிய ஈரான் கடற்படை கப்பல்களில் ஒன்றான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று மீண்டும் நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடந்த 4ஆம் திகதி அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலின் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கியது. இந்நிலையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தது. எவ்வாறிருப்பினும் இலங்கையின் கடல் சார் வர்த்தக பாதிப்புக்களைக் கருத்தில்கொண்டு அக்கப்பலுள்ளவர்கள் மீட்டு, பின்னர் அதனை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அரசு அனுமதியளித்தது. அதற்கமைய அந்தக் கப்பலிலிருந்த 208…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் கடலில் காணாமல் போன மீனவர்கள்; தமிழக கடற்பரப்பில் கைது!

யாழ் கடலில் காணாமல் போன மீனவர்கள்; தமிழக கடற்பரப்பில் கைது! யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதி. கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் படகு பழுதடைந்த நிலையில் மாயமானார்கள்.மீன்பிடிக்கச் சென்றபோது இவர்களது படகு இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்து, நீரோட்டத்தினால் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றது.அங்கு இருந்த இந்திய மீனவர்கள் இவர்களைக் கவனித்து, அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி, அவர்களது படகை இழுத்துச் சென்று இலங்கை கடல் எல்லையில் விட்டுச் சென்றனர். மீண்டும் எல்லை தாண்டிய படகு: எனினும், கடல் அலையினால் படகு மீண்டும் இழுத்துச் செல்லப்பட்டு இந்தியக் கரைக்குச் சென்றுள்ளது.காணாமல் போன ஏழாவது நாளில், நேற்று வியாழக்கிழமை தமிழகத்தின் வடக்குக் கரையில் உள்ள அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழக கடலோரக் காவல் படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர்.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண் களுக்கு எங்கே பாதுகாப்பு?

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு? நுவரெலியாவில் போராட்டம்! உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். இச்சம்பவம் கடந்த 24 ஆம் திகதி டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் இருபாலாரும் இச்சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை வேண்டும் என்றும், அவர்கள் மூவரும் கைது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிரடி அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக மனு கையளிப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தருமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தியும் மாவட்ட அரச அதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மனுவொன்றை கையளித்துள்ளனர். இதுதொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் குறித்த மனுவில் தெரிவிக்கப்படுவதாவது, கடந்த 25.2.2026 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா எமது சம்மேளனத்தின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அன்றைய கூட்டத்திற்கு எம்மை அழைக்காமையால் நாம் அங்கு சமூகமாகவில்லை. அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு விடயத்தை அதிகாரிகள் கையில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், மிக மோசமான வார்த்தைகளால் எமது சம்மேளனம்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தை’ கட்டுப்படுத்த தவறிய அமெரிக்க செனட்

ஈரானுக்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை முறியடித்துள்ளது இந்த நடைமுறைத் தீர்மானத்திற்கு எதிராக 53 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் அளிக்கப்பட்டன.லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்து வரும் சூழலிலேயே இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க செனட் சபையானது குடியரசுக் கட்சியினரின் (Republicans) கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஈரானுக்கு எதிரான போரை ஆதரிப்பதாலும், இந்த முயற்சி முறியடிக்கப்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்தது.எவ்வாறாயினும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது நடைமுறைக்கு வர ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமாகும். தனது போர்க் கொள்கைக்கு எதிராக அமையும் இத்தீர்மானத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிப்பார் என்பது உறுதியாக நம்பப்படுகிறது.ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை மீறி இச்சட்டத்தை…

மேலும் படிக்க