தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தம்பலகாமத்தில் தொடர் கொள்ளை: நால்வர் கைது

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இன்றையதினம் அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். முதல் வீட்டில்: சுமார் 10 பவுன் தங்க நகைகள். இரண்டாம் வீட்டில்: 70,000 ரூபாய் ரொக்கம். மூன்றாம் வீட்டில்: 5 குவைத் தினார் மற்றும் 30 இந்திய ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் போது…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

மாணவர்கள் குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணை! அதனை கண்டித்து மாணவர் கள் போராட்டம்

விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டமானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.அதனை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அநுரவின் ஆட்சியிலும் இடம்பெறும் அடக்குமுறைகளை நிறுத்துமாறும், இனிமேல் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் வழங்க கூடாது என்றும், விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தோடு நிறைவு செய்யுமாறும் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளுக்காக மாணவர்கள் சென்றுள்ள நிலையில் அவர்கள் திரும்பி வரும்வரை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற மாணவர்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

அன்னை பூபதி அவர்களின் அறப்போராட்டம் தொடங்கிய நாள்.

ஈழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி அவர்களின் அறப்போராட்டம் மிகவும் முக்கியமானது. 1988-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கினார். :இந்திய அமைதிப்படைக்கும் (IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடந்துகொண்டிருந்த சூழலில், பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்: உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். விடுதலைப் புலிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தியாகப் பயணம் ஆரம்பம்: 1988 மார்ச் 19. காலம்: நீர் மட்டும் அருந்தி 32 நாட்கள் தொடர்ச்சியாகப் போராடினார். வீரச்சாவு: 1988 ஏப்ரல் 19 அன்று தனது போராட்ட இலட்சியத்திற்காக உயிர்நீத்தார்.மக்களுக்காகத் தாய் ஒருத்தி உயிர் கொடுத்தார்” என்ற பெருமைக்குரியவராக, ஈழத் தமிழ் மக்களின் இதயங்களில் ஒரு மாபெரும் அறப்போராளியாக அவர் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தெற்கு மற்றும் மத்திய ஆசியா விற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) இலங்கைக்கு வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இம் மாதம் 19 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.இந்த விஜயத்தின் போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உயர் மட்ட சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், சிறப்பு தூதர் செர்ஜியோ கோர், அரசின் சிரேஷ்ட தலைவர்களுடன் சந்தித்து அமெரிக்கா–இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவுள்ளார். மேலும், முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. இந்த சந்திப்புகள், முக்கிய கடல் போக்குவரத்து வழிகளைப் பாதுகாப்பது, துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது போன்ற அமெரிக்காவின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மத்திய கிழக்கு விமான சேவைகள் இரத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதற்கமைய, துபாய்க்கான விமான சேவைகள் இன்றும், நாளையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.அத்துடன், தமாம், தோஹா குவைத் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.பயண முன்பதிவுகளை செய்தவர்கள் தங்களின் போக்குவரத்து தொடர்பில் 1979 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகங்களுக்குச் சென்று, விமான சேவைகள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொக்கட்டிச் சோலையில்.கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காவல் துறை பிரிவுக்குட்பட்ட மண்முனைப்பாலம் பகுதியில் இன்று பிற்பகல் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று  .காவல் துறையினரால்.முற்றுகையிடப்பட்டுள்ளது. முழுநாடும் ஒன்றாக ஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக கொக்கட்டிச்சோலை  காவல் துறையினரால்.தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன்கீழ் நேற்றைய தினம்.பிற்பகல் மண்முனைப்பாலத்திற்கு அருகில் உள்ள கன்னக்காடு பகுதியில் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையம்  காவல் துறையினரால்.முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது நான்கு பறல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கசிப்பு காய்ச்சுவதற்கான சுமார் 720,000 மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு காவல் துறையினரால்.அழிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் கொக்கட்டிச்சோலை காவல் துறை தெரிவித்தனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

திட்டமிட்ட அழிப்பு களிலிருந்து எம் இனத்தைக் காக்க மாணவர்கள் ஒழுக்கத்துடன் உயர வேண்டும்” சிறீதரன் எம்.பி

திட்டமிட்ட அழிப்புகளிலிருந்து எம் இனத்தைக் காக்க மாணவர்கள் ஒழுக்கத்துடன் உயர வேண்டும்” சிறீதரன் எம்.பி தெரிவிப்பு…..! ​”எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது; உலகத்தரம் வாய்ந்த கல்வியோடும் கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே, திட்டமிடப்பட்ட அழிப்புக்களை முறியடித்து நாம் உலக அரங்கில் தலைநிமிர முடியும்” என அண்மையில், யாழ்/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் கலந்துகொண்ட, நிகழ்வின் பிரதம விருந்தினரும் அப் பள்ளியின் பழைய மாணவனுமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ​போருக்குப் பின்னரான சூழலில் தமிழ் தேசிய இனம் பல்வேறு நூதனமான மற்றும் திட்டமிடப்பட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வருவதை எம்மால் அவதானிக்கமுடிகிறது. “யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் சிதைப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன; எமது எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களைச்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது. இதில் 5,000 பவுண்ட் (சுமார் 2,268 கிலோகிராம்) எடை கொண்ட ‘டீப் பெனெட்ரேட்டர்’ மற்றும் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளதுசில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கப் படைகள் ஈரானின் கடற்கரைப் பகுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள கடினமாக்கப்பட்ட ஈரானிய மிசைல் தளங்களுக்கு பல 5,000 பவுண்ட் டீப் பெனெட்ரேட்டர் முனிஷன்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தின. இந்தத் தளங்களில் உள்ள ஈரானிய ஆண்டி-ஷிப் க்ரூஸ் மிசைல்கள் (கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள்) சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் (அல்லது பெருமளவு…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

இலங்கை க்கு வழங்கப் பட்ட உலங்கு வானூர்தி கள்.இலங்கை க்கு அனுப்பி வைப்பு.

அமெரிக்காவால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக  உலங்கு வானூர்திகள்.தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10  வானூர்திகளும்.மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த வானூர்திகளும்., இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த  வானூர்திகளும்.இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பண மோசடி குற்றங்க ளுக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணை

மன்னாரில் பண மோசடி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக  கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை நேற்று பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணையில் செல்ல மன்னார் நீதவான் உத்தரவிட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஒரு சந்தேக நபரைக் கைது செய்தது. தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், அதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டு ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுள்ள தங்க நகைகள் வாங்கியுள்ளதாக…

மேலும் படிக்க