தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5 முறைப்பாடுகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஐந்து (5) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் வழிகாட்டலில், குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியையும் சட்டத்தரணி முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி ருடானி சாஹிர் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். எனினும், குறித்த சந்திப்பின் போது, நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருளுக்கான 50 ரூபா வரியை நீக்குமாறு விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்க முடியும் என, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது; ”பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால், 50 ரூபா வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள   கிவ்.ஆர். (QR) முறையும், எரிபொருள் விநியோகத்திற்கான வரம்புகளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் அவற்றையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், ”எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத பெறுமதி சேர் வரி மற்றும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான சேவை வழங்கியமைக்கான சேவை கண்டனம் 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால்,  தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை?

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் ஆராய்வு பிணை வழங்கும் நடைமுறைச் சட்டத் திருத்தங்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட  தொடர்புகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பிற்கே பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன்,  இந்த நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதைக் கருத்திற்கொண்டே போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டது.தேசிய செயற்பாட்டு சபை  நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியபோதே  இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள குற்றச்செயல் சூழல், தற்போது தேசிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சிறைச்சாலை மோதல்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளுக்கு அழைப்பு

சிறைச்சாலைகள் சில தொடர்பில் பதிவாகியுள்ள அமைதியின்மை மற்றும் குழப்ப நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்படி கலந்துரையாடலுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.அது தொடர்பில் மேலும் தெரிவித்த ஆணைக் குழுவின் தலைவர்;சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியவை. மனித உரிமைகள் ஆணைக்குழு அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் கணிசமானளவு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடற்பிராந்திய ங்களுக்கு சிவப்பு அறிவிப்பு; கடலுக்கு செல்லத் தடை

நாட்டின் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.​அந்த வகையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வர தொழில்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகளை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கிணங்க, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வரணி பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று மரத்துடன் மோதியதில் மூவர் காயம்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று மரத்துடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று பிற்பகல் 4 மணியளவில் வரணி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மகிழுந்து, வரணி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ஆலமரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் மகிழுந்து பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடளாவிய பொலிஸ் தேடுதல் நடவடிக்கை 437 சந்தேகநபர்கள் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 437 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 33,024 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன்போதே இந்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 135 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 65 நபர்களும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 68 நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,189 நபர்களுக்கு எதிராக சட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? –

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரம் காரணமாக பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் விவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடவுச்சீட்டை முறையாக ஸ்கேன் செய்து வாசிக்க முடியாததால், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என பிரித்தானிய அதிகாரிகள் சந்தேகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடவுச்சீட்டுக்கான கட்டணம் 6,000 ரூபாயாக தொடரும் நிலையில், கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்பு அல்லது நீட்டிப்பு பக்கங்கள் இல்லாததுடன், அச்சுத் தரமும் குறைவாக இருப்பதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன், குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்தில் கசிவது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக சில…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் கைது

சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல   மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி   ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.  நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர். சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது. இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை…

மேலும் படிக்க