தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டைக்காடு பகுதி களில் யானைகளை  விரட்டியடிப் பதற் குரிய  நடவடிக்கை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதிகளில் அண்மையில் யானை தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினரும்,  வடமராட்சிக்  கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி இன்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களோடு உரையாடிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனத்திணைக்களம்  போன்றவர்களோடு பேசி யானைகளை  விரட்டியடிப்பதற்குரிய  நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் யானைகள் திசை மாறி வடமராட்சி கிழக்கு பகுதிக்கு வந்துள்ளதகவும் அவர் தெரிவித்தார். இதில் வடமராட்சி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சாம்,  பருத்தித்துறை பிரதேச சபையின்  உறுப்பினர்களான பரிதா ஜெகதீஸ், கோ.கலைச்செல்வன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை நிச்சியவெட்டை கேவில் வீதி திருத்த வேலைகளையும் பார்வையிட்ட ரஜீவன்  ஜெயசந்திரமூர்த்தி  கிரவல் பிரச்சனை காரணமாக கால தாமதமாகியிருந்த குறித்த வீதி திருத்த பணிக்கு சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி உடனடியாக கிரவல் பெற்றுக்கொள்ள…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயக்க மருந்து கொடுத்து பெண் களை கடத்தி கொள்ளை மற்றுமொரு சந்தேக நபரும் அதிரடியாக கைது

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரும் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை நேற்று வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரே யருடன் கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே, மாத்திரைகள்  என்பவற்றை  மீட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல்போனதா மற்றொரு  பெண் ஒருவர் சடலமாக கிணற்றில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இடமாற்ற முறைமைக்கு எதிராக ஆசிரியர்கள் யாழில் போராட்டம்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் அதற்கு எதிராக வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆசிரியர்கள் பலர் ஒன்று கூடி பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கோசம் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேல் முறையோடுசெய்தும் அந்த முறையிட்டினை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு மாகாண கல்வி திணைக்களம் வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் வடமாகண பொதுச்சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீயைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொலைக் குற்றவாளி களுக்குத் துணை ; மட்டக்கள ப்பில் போராட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவத்திற்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் கொக்கட்டிச்சோலை நகரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தின்  ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள்

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி திரு.மார்க் அன்றி பிரான்சிக்கும்  தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இன்று காலை 9.15 – 10.15 வரை இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான பொ.ஜங்கரநேசன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை இலங்கைத் தமிழரசுக்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கணுக்கேணிக் குளத் தின் முதலாம் வாய்க் கால் சீரமைப்பிற்கு ரவிகரன் எம்.பியால் நிதி ஒதுக்கீடு

கணுக்கேணிக் குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரமைப்பிற்கு ரவிகரன் எம்.பியால் நிதி ஒதுக்கீடு முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலைச் சீரமைப்பதற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 350, 000ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறித்தபகுதிக்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், அதனைத் தொடர்ந்தே குறித்த வாய்க்கால் சீரமைப்பிற்கு தனது இவ்வாண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரின்றிக் காணப்படுவதால் அந்த வாய்காலின் கீழ் 51ஏக்கர் வரையில் நெற்செய்கை மேற்கொள்ளும் 28விவசாயிகள் தமது வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் முறையிட்டிருந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கமைய…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சிறீதரன் எம்பியை சந்தித்த ஐ.நா வதிவிடப் பிரதிநிதி:

சிறீதரன் எம்பியை சந்தித்த ஐ.நா வதிவிடப் பிரதிநிதி: வடக்கின் நிர்வாக இடைவெளி குறித்து விரிவான கலந்துரையாடல்! ​இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க் கிழமை(24/03/2026) அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமையத்தில் (IOM) நடைபெற்றது. ​இதன்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாரிய நிர்வாக இடைவெளி மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்கள் குறித்து ஐநாவின் வதிவிடப் பிரதிநிதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. ​குறிப்பாக, தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதிகாரப் பரவலாக்கல் சிதைவடைந்து, நிர்வாகக் கட்டமைப்புகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதை அவர் வலியுறுத்தியதோடு, யுத்தத்திற்குப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.இதன்போது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விதமான அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் மக்களது பிரச்சினைகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள நீலங்காடு காணி பிரச்சினை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் தொடர்பான பிரச்சனைகள், குழாய்வழி குடிநீர் பிரச்சினை, பாடசாலைகளின் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரைநகர் பிரதேச செயலர், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், கடற்படையினர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.மேலும் இன்றைய கூட்டமானது எந்தவிதமான குழப்பங்களும் இன்றி ஆரோக்கியமாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

வவுனியா வடக்கில் தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி  நினைவுதினம் இன்று (25) அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தர்மலிங்கம் தனுசன்  தலைமையில் இடம்பெற்ற மேற்படி நினைவுதின நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்டக்கிளை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், சரோஜாதேவி மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நினைவேந்தல் தீபம் ஏற்றப்பட்டதுடன் மலர் தூவி அஞ்சலியும் இதன் போது செலுத்தப்பட்டது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வன்னியில் முழுமைப் படுத்தப் படாதுள்ள வீடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய – ரவிகரன்

வன்னியில் முழுமைப்படுத்தப்படாதுள்ள வீடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய – ரவிகரன் எம்.பி; மூன்று வருடங்களுக்குள் அனைத்து வீடுகளையும் முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி அமைச்சர் – டி.பி.சரத் பதில் கடந்த நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு இடைநடுவே கைவிடப்பட்டுள்ள வீடுகள் தொடர்பாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத்திடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியதுடன், குறித்த வீடுகளை முழுமைப்படுத்த விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்தப்படாத அனைத்து வீடுகளையும் கட்டி முடிப்பதற்குமான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், ஒரு முறையான வேலைத்திட்டத்தின்மூலம் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத் இதன்போது பதிலளித்துள்ளார். கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற…

மேலும் படிக்க