தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணற்காடு சந்தி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்திருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஆசிரியர் ஒருவரும், பிள்ளைகளை ஏற்றி சென்ற தாயும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது குடத்தனை கிழக்கு பகுதியிலிருந்து குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாட சாலையில் தனது இரண்டு பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது மருதங்கேணி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்களது மோட்டார் சைக்கிளும் மணல்காடு சந்தி பகுதியில் ஒன்றை ஒன்று…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஜூலை 20 முதல் செப்டெம்பர் வரை “எல் நினோ” கடுமை யாகத் தாக்கும் – பேராசிரியர் பிரதீப ராஜா

பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள “எல் நினோ” இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மிகக் கடுமையாகத் தாக்கும் என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கமக்காரர் அமைப்பு மற்றும்  மீனவசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ தொடர்பான கலந்துரையாடல்  கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஏற்படப்போகும் எல்நினோ நிலையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் K.அழகக்கோன், பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தின் இணைப்பாளர் வல்லிபுரம் வாசுகி, கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவசங்க பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் ஒன்பது நாளை எட்டியது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியே தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 59.5 ஏக்கர் காணிகள் பூர்வீக மக்களுக்குச் சொந்தமானவை என்றும், தற்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ நிலைகளை அருகிலுள்ள மாற்று நிலங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறே தாங்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இராணுவ முகாம்களை மாற்றி அமைத்து, பூர்வீக மக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்க…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை – புதுக்குடியி ருப்பில்.78 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர்.கைது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் 78 கிலோகிராம் கேரள கஞ்சா  கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  அதில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 31 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய சாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டி

முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டி முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை, நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசரச் சிகிச்சைச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான புதிய அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று நேற்று (30) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது. இந்த அம்பியூலன்ஸ் வண்டியானது அதிநவீன வசதிகளைக் கொண்ட “நிசான்” ரக வாகனமாகும். இது ஆரம்பத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்காக (PSD) ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அது சார்ந்த பணிகளுக்காகப் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. நாட்டின் சுகாதாரச் சேவையின் அவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு, இந்த வாகனத்தை வீணடிக்காமல் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்க ஜனாதிபதி செயலகம் (Presidential Secretariat)…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பன்முகப் படுத்தப் பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

2026ஆம் ஆண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்தார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் முன்னெடுக்கப்படவுள்ள சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள் இன்று 30.06.2026இன்று இடம்பெற்றன. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் அவரது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தின் மலசலகூட திருத்த வேலைத்திட்டங்களுக்காக 200,000ரூபாய் நிதியும், முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்திற்குரிய மின் இணைப்பை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக 225,000ரூபாய் நிதியும், வற்றாப்பளை மகாவித்தியாலயத்தின் பாடசாலைக் கட்டடங்களுக்குரிய மின்னிணைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக 200,000ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மூன்று வேலைத்திட்டங்களையுமே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மாணவர் ஏறும், இறங்கும் நேரம் SMS யாழில் டிஜிட்டல் ‘சிசு செரிய’ சேவை

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்கான பிரத்தியேகச் சேவையான ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படுவதுடன், எஞ்சிய தொகை அரசாங்கத்தால்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மரப்பொந்திற்குள் புலிகளின் ‘ஸ்னைப்பர்’ துப்பாக்கி மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு, பக்மிட்டியா காட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று  மாலை மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையினர் வழமை போல் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இத்தேடுதல் நடத்தப்பட்டது. காட்டுப்பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியானது கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்ததுடன், அவர்கள் கெரில்லா போர் உத்திகளுக்காக இவ்வாறான ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆயுதங்கள் நீண்டகாலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் தற்போது துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர்  தெரிவித்துள்ளார். ஸ்னைப்பர் துப்பாக்கி – 01 தொலைநோக்கி (Scope) – 01 ரவைக்கூடு (Magazine) – 01 தோட்டாக்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பயணிகளை அலைக் கழித்து, கூடுதல் கட்டணமும் (NTC) காரி யாலயத்தில் பயணி கள் முறைப்பாடு

பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று பயணிகளை அலைக்கழித்து, கூடுதல் கட்டணமும் ஈட்டியதாக வவுனியா தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) காரியாலயத்தில் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளனர். பரந்தனில் இருந்து இன்று புறப்பட்ட NP 7487 இலக்கமுடைய இப்பேருந்து கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காலை 09:20 மணி வந்தடைந்து தரித்து நின்றது. அங்கிருந்து காலை 09:30 மணி வவுனியா நோக்கிப் பயணிக்க வேண்டிய பேருந்து, திட்டமிட்டபடி பயணிக்காமல், திடீரென மீண்டும் பரந்தன் நோக்கியே திரும்பிச் சென்றுள்ளது. பரந்தனுக்குச் சென்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து தரித்து நின்று வவுனியாவை வந்தடைந்த போது மணி மதியம் 12:15 ஆகி இருந்தது. கிளிநொச்சியில் இருந்து காலை 09:30 மணிக்கு வவுனியா வந்தடைந்திருக்க வேண்டிய பயணிகள், பேருந்தின் இந்தத் தன்னிச்சையான பின்னோக்கிய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளிநொச்சி மாவட் டத்தில் வீதி விபத்துகளைத் தடுத்தல் விழிப் புணர்வுக் கலந்துரை யாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (30.06.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், அண்மை நாட்களாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். அனைத்து சாரதிகளும் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டிருந்தாலும், வாகனம் செலுத்துவதற்குத் தேவையான பொறுப்புணர்வும் மனநிலையும் எப்போதும் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். எனவே, இளைய சமூகத்தினருக்கு தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் பெறுமதிமிக்க உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார். மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின்…

மேலும் படிக்க