சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பாடசாலையின் முக்கிய நிகழ்வுக்கு அரசியல் கட்சி பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள்

கரவெட்டியில் நீண்ட வரலாற்று பாரம்பரியம் மிக்க பாடசாலையின் முக்கிய நிகழ்வுக்கு அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை முதன்மை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு ஆரம்ப எதிர்பு காட்டப்படுள்ளது. பாடசாலையில் அரசியல் கலக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. இதுவரை காலமும் இல்லாத ஒன்றை திணிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே இந்த துண்டுப்பிரசுரங்களை நோக்க முடிகிறது. அரசியல்வாதிகளை தவிர்த்து பாடசாலை பழைய மாணவர்கள் அல்லது கல்வியியலாளர்கள் ஒருவரை அழைக்கவும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

உழவர் ஒன்றிய விளையாட்டுக உதைபந் தாட்டச் சுற்றுப் போட்டி

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில்! உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நி லையமும் நடாத்தியஅமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ​”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் கலாசாரச் சீரழிவுகள் மற்றும் போதைப்பொருள் போன்ற சவால்களை முறியடிக்க விளையாட்டுத் துறை ஒரு தற்காப்புக் கேடயமாகச் செயல்படுகிறது. ​விளையாட்டு மைதானங்கள் என்பவை வெறும் போட்டிகளுக்கான இடங்கள் மட்டுமல்ல; அவை ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைப் போதிக்கும் நவீனப் பள்ளிக்கூடங்கள். எனவே,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழ். சுன்னாகம் பகுதியில் தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயம்

யாழ். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்வம் நேற்று(23.03.2026) இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவருடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். பின்னர் அங்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியை விட்டுவிட்டு இணுவில் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த நபருக்கும் பெண்ணின் உறவினர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு உள்ளே சென்ற நபர் புகையிலை வெட்டும் கத்தியை எடுத்து வந்து மூவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதலில் பெண் வீட்டை சேர்ந்த இருவர் படுகாயமடைந்ததுடன் மற்றையவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் அவர்களும் குறித்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வெறுப்பு பேச்சுக் களை பேசும் தமிழ் மற்றும் அரசியல் வாதிகளுக்கு எதிராக போராட்டம்

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஊரெழு பகுதியில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 5,900 லீட்டர் எரிபொருள் மீட்பு

ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருட்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று மீட்டனர். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொறுப்பதிகாரி பிறேமதிலகா தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் ஊரெழு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்பொருள் அங்காடியின் களஞ்சியசாலையில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையின் போது, பாரிய பரல்களில் (Barrels) அடைத்து வைக்கப்பட்டிருந்த பின்வரும் எரிபொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன: டீசல் 4,700 லீட்டர், பெற்றோல்: 800 லீட்டர், மண்ணெண்ணெய்: 400 லீட்டர்சட்டவிரோத எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் நிறைவில், கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் இந்தியா வில் வைத்து கைது

யாழ்ப்பாணத்திலிருந்து நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர், மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த மூவர், கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசா மூலம் நேபாளத்திற்குப் பயணித்துள்ளனர். அங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது. நேபாளத்தில் வைத்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்று இத்தாலிக்குப் பயணிக்க முற்பட்ட போது, அவர்களில் இருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுடன் சென்ற மற்றுமொரு இளைஞர் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதிக்கு வந்தடைந்த மேற்படி இளைஞர், அங்கிருந்து படகு மூலம் மீண்டும் இலங்கைக்குத் தப்பி வர முயன்றுள்ளார். இதன்போது இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

காற்றாலை மின்சாரக் கேபிள்களில் சிக்கி 2 பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு

மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் 3 வங்காலை பறவைகள் சரணாலய பகுதி ஊடாக அதி வலு கொண்ட காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளாகிய பறவைகளில் 2 உயிரிழந்த நிலையிலும், ஒன்று பலத்த காயமடைந்த நிலையிலும் மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளது.அத்தோடு காயமடைந்த பறவைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது வெளிநாட்டு பறவைகள் மன்னார் தீவு பகுதிக்கு வருகை தரும் காலமாக உள்ளது. இந்நிலையில் வருகை தந்த பறவைகளில் மூன்று பறவைகள் மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுப் பறவைகளான பிளமிங்கோ (Flamingo) போன்றவற்றை நேரில் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கிய அதே இராணுவத்திடம் எரிபொருளை நிரப்ப முடியாது;

இராணுவத்தின் படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கிய விவகாரங்களுக்காக நீதிகோரும் எம்மால், அதே இராணுவத்திடம் எரிபொருளை நிரப்ப முடியாது; நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் எம்.பி கடிதம் இறுதிப் போர் காலப்பகுதியில் இராணுவப் பொறிமுறைக்குள் நம்பி ஒப்படைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பத்து ஆண்டுகளைக் கடந்து தேடிக்கொண்டும், இறுதிப்போரில் இதே இராணுவக்கட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான நீதிக்காகவும் நீதிக்கான சர்வதேச தலையீட்டுக்காகவும் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கும் தம்மால், இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் எரிபொருளை நிரப்ப முடியாதெனவும், மாற்று ஏற்பாட்டச் செய்யுமாறும் வலியுறுத்தி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு 22.03.2026இன்று கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரால் நிருவகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும் ஏற்பாடு குறித்து அண்மையில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்கப்பில் கிணற்றி லிருந்து பெண் உயிருடன் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்காரைப் பிரதேசத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அதே கிணற்றிலிலிருந்து உயிருடன் மேலும் பெண்ணும் மீட்கப்பட்டள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அவரது பிள்ளையுடன் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (19) சென்றவர் வெள்ளிக்கிழமை காலை வரைக்கும் வீடு திபியிருக்கவில்லை.இந்நிலையில் நேற்று (20) காலையில் சிறிய பிள்ளை ஒன்று அப்பகுதியிலுள்ள வயற் பகுதியில் அழுது கொண்டு இருந்த நிலையில் வழியால் சென்றவர்களல் அப்பிள்ளை மீட்கப்பட்டுள்ளது. அப்பிள்ளையின் தாயை கண்டுபிடிக்காத நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் அமைந்திருந்த பாழ்ங் கிணற்றில் இருந்து குற்றுயிராய் அத்தாய் தாய் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த தாய் அணிந்திருந்த தாயின் தாலிக்கொடி களவாளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் பல்கலைக் கழகத்தின் பெண் விரிவுரையாளர் அடித்துக் கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி சான்றும் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த எரிபொருள்…

மேலும் படிக்க