தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அம்பாறையில். ஐஸ்’ போதைப் பொருளுடன் மூவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிராந்திய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, அம்பாறை பிராந்திய பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து தலா 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான நபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 14,700 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அம்பாகஹவெல்ல, ஜெமுனுபுர மற்றும் பொல்வக காலனி பகுதிகளைச் சேர்ந்த 21 முதல்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை மற்றும் மன்னார் மருத்துவமனைக்கு CT, MRI இயந்திரங்கள் ரவிகரன் கோரிக்கை

முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது மருத்துவமனைகளுக்கு CT, MRI இயந்திரங்கள் வழங்கப்படும்; ரவிகரன் எம்.பியின் கோரிக்கைக்கு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மருத்துவமனைகளில் CT, MRI இயந்திரங்கள் இன்மையால் நோயாளர்கள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது மருத்துவமனைகளுக்கு துரிதகதியில் CT, MRI இயந்திரங்ளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விரைவில் CTஇயந்திரம் வழங்கப்படுமெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, முல்லைத்தீவு மாவட்ட பொதுமருத்துவமனைக்கு எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் CT, MRI இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பதிலளித்துள்ளார். நாடாளுமன்றில் 04.08.2026இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம்தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இதுதொடர்பில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (03) பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், வீதியில் நின்றுகொண்டிருந்த பெண் மீது அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி பளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சந்திரன் சசிகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூக மட்ட அமைப்புகளில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

களுவாஞ்சிகுடியில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு:ஒருவர் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றில் திருடப்பட்ட 24½ பவுண் தங்க நகைகளை 24 மணி நேரத்திற்குள் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளனர். துறைநீலாவணையில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24½ பவுண் தங்க நகைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) திருடப்பட்டிருந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதே நாளில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டைப் பெற்றவுடன் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன் பலனாக, 24 மணி நேரத்திற்குள் களவாடப்பட்ட அனைத்து தங்க நகைகளும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில், கைது செய்யப்பட்ட யுவதி வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், பாதிக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மண்டைதீவு கடற்பரப்பில் 3,111 கடல் அட்டைகள் கைப்பற்றல் – இருவர் கைது

யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பரப்பில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 3 ஆயிரத்து 111 கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (03) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட கடல் அட்டைகளுடன் அவற்றை ஏற்றிச் சென்ற சிறிய கன்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட 3,111 கடல் அட்டைகள் 11 இலட்சத்து…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி – அருட்தந்தை மா. சத்திவேல்!

அவரால் இன்று (03.08.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாற்றம் எனும் தொனியோடு  ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியினர் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமது இயக்க உறுப்பினர்களுக்கு வருடம் தோறும் தெற்கில் நினைவு நிகழ்வுகள் பெருமெடுப்பில் நிகழ்த்துகையில்  அதே அரச பயங்கரவாத இனவாத கட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்காக தெற்கில் நினைவேந்தல் நடத்துபவர்களையும் அந்நினைவுகளில் வளவாளர்களாக கலந்து கொண்டவர்களையும்  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணை என அழைப்பது அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது. இதனை கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாக கண்டிப்பதோடு நினைவேந்தல் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாட்டினை நிறுத்துமாறும் கோரிக்கை விடுகின்றது. கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பண்டாரவன்னியன் மற்றும் பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக் கடமை;

பண்டாரவன்னியன் மற்றும் பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக்கடமை; அந்த வரலாற்றுக் கடமையை தொடர்ந்து முன்னெடுப்பேன் – ரவிகரன் எம்.பி தெரிவிப்பு தமிழர்களின் வீரத்தினைப் பறைசாற்றுகின்றவகையிலான வரலாற்றினையுடைய வன்னி மன்னன் பண்டாரவன்னியன், பால்ராஜ் போன்றவர்களை நினைவுகூருவது தமிழர்களின் வரலாற்றுக் கடமை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்தோடு கடந்த மேமாதம் இலங்கை நாடாளுமன்றில் பால்ராஜ்ஜிற்கு தாம் அஞ்சலி செலுத்தியமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பெரும்பான்மை இனத்தவர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்ததாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்வாறான எதிர்ப்புக்களைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் இவ்வாறான நினைவுகூரல்களும், அஞ்சலிகளும் தம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவுந் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – முற்றவெளி மைதானத்தில் 02.08.2026நேற்று இம்பெற்ற தமிழர் பாரம்பரிய வீரக்கலை வீரர்களின் மதிப்பளிப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கக் கோரி, வசாவிளான் மக்களால் இன்று (02)கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் வசாவிளான் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது. வசாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தப் போராட்டத்தில், 36 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பாரம்பரிய காணிகளை விடுவித்து, மீள்குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர். இதனுடன், பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணி மீட்புக்கான போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே மயிலிட்டி மக்களால் மயிலிட்டியில் ஒரு போராட்டமும், பலாலி மக்களால் பலாலி சந்தியில் மற்றுமொரு போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இன்று வசாவிளான் மக்களும் போராட்டத்தில் இணைந்துள்ள நிலையில், பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது மூன்று இடங்களில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய செல்வராசா கசிவன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிடைத்த தகவல்களின்படி, நேற்று மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்டுச் சென்ற வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வெடிக்காமல் இருந்த பட்டாசை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக செல்வராசா கசிவன் அதற்கு அருகில் சென்று ஊதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் திடீர் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஓமந்தை பகுதியில் வீதி விபத்து: பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் பலி

வவுனியா, ஓமந்தை – ஏ9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற சோககரமான வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே, கூலர் (குளிரூட்டப்பட்ட) வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பனிக்கன் நீராவி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களும் உயிரிழப்புகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இன்னும் எத்தனை உயிர்களை வீதி விபத்துக்களுக்கு பலி கொடுக்கப் போகிறோமோ? என அப்பகுதி மக்கள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க