தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்கப்பில் கிணற்றி லிருந்து பெண் உயிருடன் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்காரைப் பிரதேசத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அதே கிணற்றிலிலிருந்து உயிருடன் மேலும் பெண்ணும் மீட்கப்பட்டள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அவரது பிள்ளையுடன் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (19) சென்றவர் வெள்ளிக்கிழமை காலை வரைக்கும் வீடு திபியிருக்கவில்லை.இந்நிலையில் நேற்று (20) காலையில் சிறிய பிள்ளை ஒன்று அப்பகுதியிலுள்ள வயற் பகுதியில் அழுது கொண்டு இருந்த நிலையில் வழியால் சென்றவர்களல் அப்பிள்ளை மீட்கப்பட்டுள்ளது. அப்பிள்ளையின் தாயை கண்டுபிடிக்காத நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் அமைந்திருந்த பாழ்ங் கிணற்றில் இருந்து குற்றுயிராய் அத்தாய் தாய் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த தாய் அணிந்திருந்த தாயின் தாலிக்கொடி களவாளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் பல்கலைக் கழகத்தின் பெண் விரிவுரையாளர் அடித்துக் கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி சான்றும் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த எரிபொருள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் சரசாலை கனகம்புளியடி பகுதியில் வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு.

யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இதன்போது முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையீல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் வட்டுக் கோட்டை பிரதேச வைத்திய சாலைக்கு முன்பாக, பொது மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்,

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் இன்றையதினம் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், குறித்த வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், பொதுமக்கள், நோயாளிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வைத்தியசாலையில் போதுமான கட்டட வசதிகள் இருந்தபோதிலும், தற்போது இரு வைத்தியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும், ஒரு தாதியர் கூட நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், முன்பு 24 மணி நேர சேவை வழங்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போது அந்த சேவையை இழந்துள்ளதாகவும், நோயாளர் விடுதி இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேபோல், வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) காரைநகர் வைத்தியசாலைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனால், வட்டுக்கோட்டை மற்றும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மாணவர் களுடன் தொடர்ந்து பயணிப் போம்.சட்டத் தரணி மணிவண்ணன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கிக் கறுப்புக் கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினைத் தெரிவித்து, அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். கறுப்புக் கொடியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் சுமார் 5 மணி நேரம் வியாழக்கிழமை (19) விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, அவர்களுக்கான சட்டப் பிரதிநிதித்துவத்தை மூத்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழங்கி இருந்தார். மாணவர்கள் மீதான பொலிஸாரின் விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமான செயற்பாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களாகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது அவர்களின் உணர்வுபூர்வமான விடயம். அது மாத்திரமின்றித் தமிழ் மக்களின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – சிறீதரன் எம்.பி

உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – செவிப்புலன் வலுவற்றோர் விழாவில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு….! செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (ROOD) 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக்கூட்டமும் அண்மையில் (2026/03/07) யாழ்ப்பாணம், கலட்டியில் அமைந்துள்ள அமையத்தின் தலைமைக் காரியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ​இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், “உலகம் சத்தங்களால் நிறைந்தது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், மௌனத்திற்கு ஒரு வலிமையான மொழி உண்டு என்பதை உங்கள் கண்கள் எனக்கு உணர்த்துகின்றன. ‘செவிப்புலன் அற்றவர்கள்’ என்பது உங்களின் குறைபாடு அல்ல; அது ஒரு தனித்துவமான ஆற்றல். சத்தமில்லாத உலகில் நீங்கள் கட்டியெழுப்பும் அன்புக்கும் கலைக்கும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

எரிபொருள் நெருக்கடிக்கு அரசே பொறுப்பு – ரவிகரன் எம்.பி

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு அரசே பொறுப்பு – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு; புதன் சிக்கன விடுமுறை தொடர்பிலும் கேள்வி எழுப்பினார் அரசு எரிபொருளுக்கான சடுதியானகேள்வி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தவறியதன்மூலம் நிகழ்ந்த எரிபொருள் பதுக்கல்களாலேயே, தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்று உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த நெருக்கடி நிலைக்கு அரசே பொறுப்பெனவுத் தெரிவித்துள்ளார். அத்தோடு ஒரு வாரத்திற்குரிய 20சதவீத மனித உழைப்பினை இழந்து, வெறுமனே 02சதவீத எரிஎண்ணெயை மிச்சப்படுத்தும்வகையில் அமைந்துள்ள புதன் சிக்கன விடுமுறை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் 20.03.2026இன்று இடம்பெற்ற உலகில் தற்போது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பெரும் நெருக்கடி க்கு உள்ளாகி யுள்ள வடக்கு கடற்றொழி லாளர்கள் நா.வர்ணகுல சிங்கம்

உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகண கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதியான நா.வர்ணகுலசிங்கம் குறிறம் சுமத்தியுள்ளார். அவர் நேற்று(20.03.2026) தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீதியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்துவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இந்திய இழுவை மடி படகுகள் உற்பத்தி இடங்களை அழித்து நாசம் செய்கின்ற போதும் அதை விட அதிகமாக தற்போது உள்ளூர் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து உறப்பத்தியை இல்லாமல் செய்வதாகவும் குறிப்பட்டுள்ளார்.தற்போதும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் சட்ட விரோத…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

திருகோண மலையில் வெற்றுக் காணியி லிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி

திருகோணமலையில் வெற்றுக்காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மூதூர் காவல் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – அப்ரார்நகர் பகுதியில் இருந்தே இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது.குறித்த நடவடிக்கை நேற்று (19-03-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இம்மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.இம்மிதிவெடியில் ஜொனி என்றும் தமிழீழம் என்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளது.யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் இம்மிதிவெடி புதைக்கப்பட்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. இம்மிதிவெடியானது மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தம்பலகாமத்தில் தொடர் கொள்ளை: நால்வர் கைது

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இன்றையதினம் அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். முதல் வீட்டில்: சுமார் 10 பவுன் தங்க நகைகள். இரண்டாம் வீட்டில்: 70,000 ரூபாய் ரொக்கம். மூன்றாம் வீட்டில்: 5 குவைத் தினார் மற்றும் 30 இந்திய ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் போது…

மேலும் படிக்க