ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேக நபர்கள் கல்பிட்டி யவில் கைது.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேகநபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர். கடந்த 31ஆம் திகதி கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற 98 கி.கி ஏலக்காயை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர். அதன்படி, கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பரப்பை உள்ளடக்கி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்கூறிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு (01) ஆய்வு செய்யப்பட்டது, மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் எண்பத்தெட்டு (98) கிலோகிராம் ஏலக்காய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களை கடற்படையின் கைப்பற்றினர்.…
மேலும் படிக்க