மூடப்பட்ட புகை யிரதக் கடவைக ளைத் திறக்க நடவடிக்கை….!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மூடப்பட்ட புகையிரதக் கடவைகளைத் திறக்க நடவடிக்கை….! யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகளையும் சபைக்கு வழங்கியிருந்தார். குறிப்பாக, “யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரவுண் வீதி முதலாம் ஒழுங்கை – அன்னசத்திர முதலாம் ஒழுங்கைப் பகுதியில் மூடப்பட்டுள்ள புகையிரதக் கடவையை மீளத் திறப்பதன் மூலம், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து அசௌகரியங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு” முன்வைக்கப்பட்ட முன்மொழிவை அடுத்து, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்…
மேலும் படிக்க