தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முள்ளிக்குளம் மக்களின் 753ஏக்கர் காணிகளை நிபந்தனை களுடன் விடுவிக்க இணக்கம்

முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; 753ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க இணக்கம் தெரிவித்தார் – பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர விஜயரத்தினம் சரவணன் மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவில், கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள 1012ஏக்கர் காணியில் 753ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர பதிலளித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் 25.05.2026இன்று இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்குழுக் கூட்டங்களில் முள்ளிக்குளத்தில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் விபத்தில் இளம் தாய் ஒருவர் பலி

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல்இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது கரடி போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மோதியதில் குறித்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞர்கள் தங்களது பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் வேகமாக ஓடிதிரிந்ததாக சம்பவத்தை அவதானித்த பொது மக்கள்குறிப்பிட்டனர். சம்பவத்தில் குறித்த இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவனும் காயமடைந்துள்ளான். சம்பவம்தொடர்பில் கிளிநொச்சி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

களுவாஞ்சிகுடி கடலில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன்பிடிக்க சென்ற 19 வயது இளைஞனான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த சனிக்கிழமை (23) கடலுக்கு இரவு சென்றவரே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில்  மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும், அதில் அவர் இல்லாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளியான பூபாலசிங்கம் ஜெயகுமார் (வயது 46) யாழ். சிறைச்சாலையில் குளியல் பகுதியில் உயிர்மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின்னர் இந்த தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் மேல் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. அதன்படி  அந்த தீர்ப்பை வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தேசிய மக்கள் சக்தியின் யாழ் ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப் பட்டுள்ளது

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகமானது இன்று(23.5.2026) யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , அரியாலை பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்வில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான , க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் , மாநகர சபை உறுப்பினர்களான, சு.கபிலன் , ச.பிரதீபன் உள்ளிட்ட யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் , கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கடலில் தத்தளித்த தமிழக கடற் றொழிலாளர் மீட்பு

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழகம் இராமேஸ்வரம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  இதே நேரம் இன்று (23) மாலை 4.30 மணியளவில் குறித்த மீன்பிடியாளர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளை (24) குறித்த தமிழக கடற்றொழிலாளரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் நெடுந்தீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒரே நேரத்தில் பல பகுதிகளில் இடம்பெற்ற சுத்திகரிப்பு நடவடிக்கை

’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டின் பல மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் இன்று (23) ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். “அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில், யாழ்ப்பாண பண்ணை கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. இலங்கை இராணுவத்தின் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் 256 கரையோர சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கிணங்க யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 30 இடங்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புகளுடன், அரச அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

அத்தியார் இந்துக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு

யாழ்ப்பாணம்,  நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நேற்றைய தினம் விழிப்புணர்வு  நாடககம் அரங்கு ஆற்றுகை  செய்யப்பட்டுள்ளது அண்மைக்  காலமாக அதிகளவான  இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதை பாவனையிலிருந்து அவர்களை விடுவிக்கும் முகமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே குறித்த விழிப்புணர்வு நாடகம் நேற்றைய தினம் அரங்காற்றுகை  செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வில் மாணவர்கள் அதிக அளவில் பயன் பெற்றுள்ளன

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து தொலைத்தொடர்பு கம்பம் உடைந்து சேதம்

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், தொலைத்தொடர்பு கம்பம் இரண்டு முழுமையாக உடைந்து சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து இன்று (22) அதிகாலை 12.00 மணியளவில் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட92 ம் கட்டை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சீமந்து (சிமெண்ட்) ஏற்றுவதற்காகச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த வேளையில் லொறியில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் (நித்திரைச் சிறுக்கம்) காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி தொலைதொடர்பு காமத்தை உடைத்துக்குண்டு மரத்தில் மோதி  அருகில் இருந்த மற்றுமோர் தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அநுரவின் வாக்குறுதிகள் எங்கே? மயிலிட்டியில் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள்…

மேலும் படிக்க