யாழில் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது கொடூரத் தாக்குதல்
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 5 மணியளவில் இடம்பெற்றதாகவும், தாக்குதல் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராக போதகர் அன்டனி செபஸ்டியன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அந்தப் பொறுப்பில் இருந்து பல்வேறு நிர்வாக விடயங்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் வழிநடத்தல் தொடர்பான பயிற்சிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. இதன் இறுதி நாளான…
மேலும் படிக்க