சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்..!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்..! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.. அதனை அடுத்து இன்றைய தினம் புதன்கிழமை புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்.

வீதி புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் ஆளுகைக்குட்பட்ட கிருஷ்ணபுரம்–விநாயகபுரம் வீதி மற்றும் கோவில்காடு பிரதான வீதி ஆகியவற்றைப் புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் இன்று (21.07.2026) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தெரிவுசெய்யப்பட்ட வீதிகளை புனரமைப்புப் பணிகளுக்காக உரிய திணைக்களங்களிடம் கையளித்தல், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர், கணக்காளர், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபை உபதவிசாளர், கரைச்சி பிரதேச சபைச் செயலாளர்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் வந்த அவுஸ்ரேலிய அமைப்பு – அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கருத்து.

யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே குறித்த அமைப்பின் ஸ்தாபகரான டேஷ் பாலசுப்ரமணியம் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வரையிலான ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை அவுஸ்ரேலிய பிரஜைகள் உட்பட்ட நூல் அமைப்பின் தோழர்களோடு தாம் நிறைவு செய்துள்ளதாகவும், குறித்த பயணம் தமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த உதவுவதாகவும் குறிப்பிட்ட அதேவேளை குறித்த பயணத்திற்கான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் வெளிநாட்டு வாழ் மக்களின் நிதி அன்பளிப்புகள் கிடைக்கப்பெறுவதாகவும் குறித்த உதவி மூலம் இங்குள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூலை மாதமும் நடாத்தப்படும் எனவும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

காணி விடுவிப்பில் இனவாத அரசியல் வேண்டாம்” – வடக்கு ஆளுநர்

போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்கள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

வடமராட்சியில் மீண்டும் தீ வைப்பு: வயல் வேலிகள், பனை மரங்கள் தீக்கிரை

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரக் கோவிலை அண்மித்த மருதங்கேணி – பருத்தித்துறை வீதியின் தெற்குப் பகுதியில் விஷமிகளால் தீ வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தால் வயல் வேலிகள், புற்தரைகள் மற்றும் பனை மரங்கள் எரிந்து வருகின்றன. தீ பரவியதால் அப்பகுதியில் உள்ள வயல் வேலிகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பனை மரங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக வடமராட்சி பகுதியில் அடிக்கடி இவ்வாறான தீவைப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், இதன் காரணமாக பல ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் வயல் வேலிகள் தீக்கிரையாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த தொடர்ச்சியான தீவைப்பு சம்பவங்களைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஆழிப்பேரலை நினைவுக் கிண்ணத்தை தனதாக்கியது வட்டுவாகல் உதயசூரியன்

ஆழிப்பேரலை நினைவுக்கிண்ணத்தை தனதாக்கியது வட்டுவாகல் உதயசூரியன் முல்லைத்தீவு – கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழகத்தினால் அமரர் நாகேஸ்வரன் றமணா ஞாபகார்த்தமாக ஆழிப்பேரலை நினைவுக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியும், அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழக அணியும் மோதின. இந்நிலையில் இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியினர் வெற்றியீட்டி கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர். இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, முல்லை மறைக்கோட்டத்தின் பங்குத்தந்தை எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முள்ளிவாய்க்கால் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்பு பூர்த்தி;

ரவிகரன் எம்.பியின் கடும் பிரயர்த்தனத்தினால் முள்ளிவாய்க்கால் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்பு பூர்த்தி; மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது. வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய கடுமையான தொடர்முயற்சியின் பலனாக, முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது. இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்த குறித்த பிலவுவெளி கமவீதியானது 20.07.2026இன்று மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு- முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிலுள்ள, முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் பிலவுவெளி கமவீதி மற்றும் அரசடி கமவீதி என்பன சீரின்றிக்காணப்பட்டது. இத்தகையசூழலில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் விதைநெல், உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்க கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பருத்தித்துறை அஞ்சல் நிலையம் கடந்த 41 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த, பழைய வாடகை கட்டடம் ஒன்றிலேயே இயங்கி வருகின்றது. வடபகுதி மக்களின் அன்றாட நிர்வாக, நிதி மற்றும் அஞ்சல் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான அரச நிறுவனமாக இது திகழ்கின்றது. இருப்பினும், இடவசதி இன்மை மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை காரணமாக, பொதுமக்களுக்கு வினைத்திறனான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்களை உளவு இயந்திரமும் மடக்கிய பொலிஸார்!

மணல் அனுமதிப்பத்திரத்தை தவறாக வேறு பகுதியில் பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் உளவு இயந்திரமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த கைது முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் நேற்று திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிசார் திருகோணமலை மாவட்ட மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் அகழ்வில்  ஈடுபட்ட நான்கு டிப்பர்களும் ஒரு உளவு இயந்திரமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவத்தின் டிப்பர் சாரதிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடயப்பொருட்கள்  22.07.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம்  குறித்த கல்லாறு பகுதியில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றம்

திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள் இன்று (20) அகற்றப்பட்டுள்ளன. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, குறித்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை மற்றும் 17.5 அடி அகலம் கொண்ட மற்றுமொரு கட்டடம் ஆகியவற்றை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2) இன் கீழ், 1988ஆம் ஆண்டின் 64ஆம் இலக்க மற்றும் 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத் திருத்தங்களின் அடிப்படையில், குறித்த கட்டடங்களை அகற்றுவதற்கான உடைத்தல் கட்டளை…

மேலும் படிக்க