கேப்பாப்பிலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து
இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாப்பிலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து; இராணுவத்துடன் பேச்சு நடாத்தி விரைவில் முடிவைத் தெரிவிப்பதாக – ஜனாதிபதி பதில் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத்தொடர்பில், கூடியவிரைவில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, குறித்த கலந்துரையாடலின் பின்னர் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பான முடிவு தம்மால் அறிவிக்கப்படுமெனவும் பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 07.04.2026நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது கேப்பாப்பிலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பில் குறித்த பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்குழுக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில்…
மேலும் படிக்க