சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாப்பிலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாப்பிலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து; இராணுவத்துடன் பேச்சு நடாத்தி விரைவில் முடிவைத் தெரிவிப்பதாக – ஜனாதிபதி பதில் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத்தொடர்பில், கூடியவிரைவில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, குறித்த கலந்துரையாடலின் பின்னர் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பான முடிவு தம்மால் அறிவிக்கப்படுமெனவும் பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 07.04.2026நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது கேப்பாப்பிலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பில் குறித்த பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்குழுக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடக்கு மற்றும் கிழக்கு பொது மக்களின் காணி களை விடுவிப்ப தற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கை ஜனாதிபதி!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார். இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எஞ்சிய காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன், நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போது எழுந்துள்ள சிக்கல்களுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார். மத வழிபாட்டுத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கிளி அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பு

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பு கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். 2026 ஏப்ரல் 07 இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். இச் சந்திப்பின் போது மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை, பொதுமக்கள் நலன், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் அவசர நிலை எதிர்வுகூறல் நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதன் அவசியமும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. இச்சந்திப்பில் மாவட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வளப்பற்றாக் குறை வன்னியின் விளையாட்டுத் துறைக்கு பெருஞ்சவால் – ரவிகரன் எம்.பி

வளப்பற்றாக்குறை வன்னியின் விளையாட்டுத்துறைக்கு பெருஞ்சவால் – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு; ஊக்கமருந்தின் கையாளல், விதிவிலக்கு நிலைகள் தொடர்பான அரசிதழிலுள்ள பிழைகளைத் திருத்துமாறும் வலியுறுத்து வன்னியில் விளையாட்டுத்துறையில் பாரிய வளப்பற்றாக்குறைகள் காணப்படுவதால் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த வளப்பற்றக்குறைகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரைக் கோரியுள்ளார். அத்தோடு ஊக்கமருந்தின் கையாளல், விதிவிலக்கு நிலைகள் தொடர்பான இலங்கை அரசின் 2026.01.16 ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிழைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பிழைகளைத் திருத்தம் செய்யுமாறும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 07.04.2026இன்று இடம்பெற்ற விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாத்தில் பங்கேற்றுக் கருத்துத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்- மருதனார்மடம் பகுதியில் கிணறு ஒன்றில் நபர் ஒருவரது சடலம்

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது. மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் இனங்கானப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் வாள்களுடன் இளைஞன் கைது!

ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞன் ஒருவர் நேற்றைய தினம். திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணப் காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு  காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞனை    இன்று. செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக  காவல்துறை.தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண  காவல்துறை.நிலைய தலைமைப் காவல்துறை. பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டுதலின் கீழ் பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான  காவல்துறை குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சுழற்றியடித்த காற்றால் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்த மீனவர்கள்

புத்தளம் – உடப்பு கிராமத்தில் இன்று அதிகாலை தென்மேல் பருவக்காற்று திடீரென்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். அதிகாலை வழமை போல மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகிய நிலையில் காற்றின் வேகம் காணப்படவே அவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லாது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. இதனால் இயந்திரப் படகுகள், தெப்பங்கள், கரைவலைத் தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து தடைப் பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டு

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை  தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். நெடுந்தீவு – குறிகட்டுவான்  இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் குமுதினி திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையிலும், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் என பயணிகள் சேவையில் இருந்து முற்றாக அரச படகுகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு தீவு மக்களை தவிக்கவிட்டுள்ளனர். தனியார் படகொன்றே தற்போது பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.இதன்காரணமாக வழமையான அதன் மு.ப.11.30 மணி சேவையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் மு.ப.11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு சேவைகள் தொடர்பாக உரிய திட்டமிடல் இன்றி…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர் களை நேரில் சென்று மதிப்பளித்தார் – ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை நேரில் சென்று மதிப்பளித்தார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்துள்ளார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி, ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று வாழ்துவதுடன், மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப்பிரிவில் – 3Aசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான இராஜேயஸ்வரன் யூலியானா, உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான மிராஜ் நிடா பாத்திமா, வணிகப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது

விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகள், எவ்வித மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் நேற்று (02) தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உடல்களைத் தேடி, களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் நேரடி மேற்பார்வையில் கடந்த மார்ச் 30, 2026 அன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையில் தற்செயலாக எலும்புகள் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு பாரிய புதைகுழி இருப்பதாகக் கருதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 01 வரை மூன்று நாட்கள் அகழ்வுப்…

மேலும் படிக்க