அண்மை செய்தி தாயகச் செய்தி 

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேச விடுதலைக்காக தன்னை அற்பணித்துச் சேவையாற்றிய மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 06.03.2026 இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறது. இந்நிகழ்வில்தலைமை அலுவலகம் த.தே.ம.முன்னணி சபாபதி வீதி கொக்குவில் கிழக்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா!

 கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா! அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடலில் இருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவுவதை கிம் மேற்பார்வையிட்டார். மேலும் இந்த சோதனையை புதிய போர்க்கப்பலின் திறன்களின் “முக்கிய” அங்கமாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கல்முனையில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்!

கல்முனையில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்! ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஓரங்கமாக கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி. எம்.பளீல் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, நேற்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ் ஒருங்கிணைப்பில் பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது ‘விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்’-‘அகன்று செல்’ எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஈரானியப் போர் கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப் பேற்றுள்ளது.

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேரின்’ கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப்பேற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “இந்தக் கப்பலை கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வராமல், திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அங்கு தரித்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 208 பணியாளர்களும் முதலில் கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர். ஈரானியக் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” – என்றும்  ஜனாதிபதி திட்டவட்டமாகத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை மீட்பு

திறப்பனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (03) செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரன்கல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணை ஒன்றிலேயே இந்தச் சட்டவிரோத டீசல் சேமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது 10 பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை பொலிஸார் மீட்டதுடன், இது தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காகக் கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோமரன்கல்ல, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (04) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கட்டி முடிக்கப்படாம லுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்க;ரவிகரன்

கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்க; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து. கட்டிமுடிக்கப்படாமலுள்ள பாடசாலைக்கட்டடங்கள் தொடர்பில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை முழுமைப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடுமுழுவதும் 468கட்டிமுடிக்கப்படாத பாடசாலைக்கட்டடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 356பாடசாலைக்கட்டடங்களைக் முழுமைப்படுத்துவதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதும் சில கட்டடங்களை முழுமைப்படுத்துவதில் சில நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதன்போது பதிலளித்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, அந்தச் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்பட்ட பிற்பாடு குறித்த நிர்மாணப்பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவுந்தெரிவித்துள்ளார். அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கான வேறு வகுப்பறைகள் இல்லாதநிலையில், முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

செம்மலை பெரிய குளக்கட்டுகுளம் உடைப்பு கமநல உதவி ஆணையாள ருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி;

செம்மலை பெரியகுளக்கட்டு குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கமநல உதவி ஆணையாளருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி; சீரமைப்பை துரிதப்படுத்தவும் வலியுறுத்து. முல்லைத்தீவு – செம்மலையில் உள்ள பெரியகுளம் உடைப்பெடுத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 27.02.2026அன்று நேரில் அழைத்துச்சென்று காண்பித்துள்ளார். அத்தோடு உடைப்பெடுத்துள்ள குறித்த குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல உதவி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – செம்மலைப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்தத 22.02.2025அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நாடாத்தியிருந்தார். குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பில் முல்லைத்தீவு – செம்மலை கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள பெரியகுளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதாக அப்பகுதி மக்களால்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பெரியவிளாத்தி க்குளம் அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளிக்கு நேரில் சென்ற ரவிகரன் எம்.பி; அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். வவுனியா – ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் பகுதியில் கடந்தவருடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டிருந்தது. இதன்போது புல்மோட்டை வயல்வெளிக்கான அணைக்கட்டு அமைப்பது தொடர்பிலும், வாய்க்காலை சீரமைப்பதுதொடர்பிலும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 13.02.2026அன்று இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைக்குமாறும், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கொழும்பு துறைமுக நகரக் கடற் பரப்பிலிருந்து ஆணின் சடலம்

கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபர் கடந்த 28ம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சிறுபோகத்திலும் நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சிய சாலைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – ரவிகரன்

நெல் சந்தைப்படுத்தல்சபை சிறுபோகத்திலும் தவறிழைக்க முடியாது; சிறுபோக அறுவடைக்கு முன்னரே நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. நெல்சந்தைப்படுத்தல் சபையினர் தமது களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகளை அகற்றாது தேக்கிவைத்திருந்ததன் காரணத்தினால் 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போக காலத்தில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்குரிய சிறுபோக காலத்திலும் நெல் சந்தைப்படுத்தல் சபை அத்தகைய தவறை செய்யக்கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறுபோக அறுவடைக்காலத்திற்கு முன்னரே நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் தேங்கியுள்ள ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரியவகையில் அகற்றப்பட்டு, சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி கொள்வனவுசெய்வதற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார் நிலையில் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு வன்னி மாவட்ட அபிவிருத்தி…

மேலும் படிக்க