சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி.

இயக்குனர் இமயம் பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி. இந்திய அரசு வழங்கிய “பத்மபூஷன்” எனும் விருதை விட என் தமிழீழ மக்களின் விடுதலையே எனக்கு முதன்மையானது என்று கூறி பத்மபூஷன் விருதை உதற எறிந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழீழம் சென்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து உறவாடித் திரும்பியவர் பாரதிராஜா. பாரதிராஜா அவர்கள் மீது அளவற்ற பெருமதிப்பை வைத்திருந்தார் தலைவர் பிரபாகரன். இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழீழ விடுதலை போராட்டம் குறித்த திரைக்கலை படைப்பொன்று உருவாக்க பாரதிராஜா அவர்கள் திட்டமிட்டிருந்தும் அவருடைய அந்த கனவு நிறைவேறாமல் போனது உலகத் தமிழர் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பேரிழப்பாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்கின்றது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க ;ரவிகரன் எம்.பி

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க; அடக்குமுறைக் கருவியான பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்வதற்கு நடவடிககை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கபடவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஸ்குமார் சங்கீத்சன் என்னும் சொல்லிசைப்பாடகர் அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டிலே காலத்திற்கு காலம் இவ்வாறான கலைஞர்களும், படைப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

சங்கீத்ஷனை விடுவிக்கா விட்டால் வடக்கு, கிழக்கு போராட்டங்கள் வெடிக்கும் சிறீதரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்காவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வெடிக்குமென, தமிழரசுக்கட்சி எம்.பி. சிவஞானம் சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மீண்டும் இந்த நாட்டில் பயங்கரமான, துயரமான சம்பவங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் வைத்து கிளிநொச்சி உதயநகர் கிழக்கை சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் என்ற இளம்பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் . நாட்டில் ஒரு பாடல் பாடியதற்காக,ஒரு காலத்தின் செய்தியை கண்ணாடியாக சொல்கின்ற ஒரு கலைஞன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நாட்டில் 1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சிங்கள, தமிழ் இளைஞர்களை மிக மோசமாக பாதித்திருந்தது. இன்று…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

தமிழ் திரையுலகிற்கு மண்வாசனையையும், எதார்த்தத்தையும் கொண்டு வந்து புரட்சி செய்த மாபெரும் கலைஞன், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூன் 10, 2026) அதிகாலை சென்னையில் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும், திரையுலகையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் ஸ்டுடியோக்கள் சார்ந்த நிலையை மாற்றி, கேமராக்களை கிராமத்து மண்ணை நோக்கித் திருப்பியவர். “என் இனிய தமிழ் மக்களே…” என்ற அவரது கம்பீரக் குரலும், ’16 வயதினிலே’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற காலத்தால் அழியாத காவியப் படைப்புகளும் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பாகும். மாபெரும் கலை ஆளுமைக்குத் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 302 மனித எலும்புக்கூடு

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி நேற்று  முன்னெடுக்கப்பட்டது. அகழ்வுகளின் போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்தே, அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 298 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, தற்பொழுது நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் வல்லுநர்களின் நேரடி முன்னிலையில்  அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதன்போது, புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்! சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்! ​ அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. ​”குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்னும் பொருண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ​இக்கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள், “பாடினால் பயங்கரவாதமா? தாயகக் கலைஞனை உடனே விடுவி!”, “தமிழர் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?”, “ஜனநாயகத்தின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலிட்டியில் மக்க ளின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை; ரவிகரன்

மயிலிட்டியில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை; ரவிகரன் எம்.பி பங்கேற்பு யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டிந் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு மக்களால் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

துவாரகா என கையெழுத்திடப்பட்ட. துண்டறிக்கை, வைரல்.!

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் 03.06.2026 உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தொடர்பான அறிவிப்பு அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, தமிழீழ மக்களின் பன்னாட்டு அரசியல், பொருளாதார, சமூக மற்றும் இராசதந்திர தேவைகளை முன்னிறுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) எனும் கட்டமைப்பு, 2009 ஆம் ஆண்டு வரை புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டு வந்தது. அதன் பின்னரும் சில நாடுகளில், குறிப்பாக சுவிசைத் தளமாகக் கொண்டு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது தலைமைச் செயலகத்தின் நெறிப்படுத்தலின் கீழ், அமைப்பு சார்ந்த கட்டமைப்புகளும் அரசியல் பணிகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற நேரடியான பெயரின் கீழ் மீளமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டமைப்புகளும் தேசியத் தலைவரின் சீரிய சிந்தனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் செப்பனிடப்பட்டு வருகின்றன.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதிதமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் – ரவிகரன்

வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவு – வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுக்கூட்டம் 03.06.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது, பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதி நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தோம். குறிப்பாக எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விடயத்திலும் அதேபோல தவறிழைப்பதற்கு இடமளிக்கமுடியாது என்பதையும் அதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம். இருப்பினும் வட்டுவாகல்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

கோயம்பேடு கேளிக்கை விடுதி தகராறு; யான்சியைத் தொடர்ந்து சிறுமியும் உயிரிழப்பு

சென்னை – கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது திட்டமிட்டு காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னதாக இந்த கொடூர சம்பவத்தில் ‘யான்சி’ என்ற 18 வயது இலங்கை அகதி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (18) என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். தனது தோழியை நேரில் சந்திப்பதற்காக யான்சி சென்னைக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, அவர்கள் கோயம்பேட்டில் உள்ள ஒரு பிரபல கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்த மற்றொரு தரப்பினருடன்…

மேலும் படிக்க