தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

TIN பெற அவசரம் இல்லை: நீண்ட வரிசை குறித்து யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்பாக, யாழ்ப்பாண அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கமளித்துள்ளார். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக நிலவும் நெரிசலைத் தொடர்ந்து, அரச அதிபர் நேற்று பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து பொதுமக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், TIN இலக்கத்தை ஜூன் 30ஆம் திகதிக்குள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்தக் காலக்கெடுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், TIN பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எந்தவித கட்டணமும் அறவிடுவதில்லை என்றும், இதற்காக பணம் பெறுவதோ அல்லது வழங்குவதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TIN பதிவு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கமைய, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால, கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அத்துடன், ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னரே பேருந்து கட்டண உயர்வின் இறுதி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, எரிபொருள் விலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பேருந்து கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது

வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.  குறித்த கைது நடவடிக்கை வவுனியா லக்சபானா வீதிக்கு நேற்று இடம்பெற்றது. வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த காரில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவினை மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றமுற்றப்பட்ட போது இவ் கைதுசம்பவம் இடம்பெற்றது. இதன் போது கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை பொலிசார் மீட்டுள்ளதுடன், வாகனத்தையும், முச்சக்கவண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்கள் மீண்டும் ஒரு தார்மீக நிலமீட்புப் போராட்டம்

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு தார்மீக நிலமீட்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ​மக்கள் ஏந்தியுள்ள பதாகைகளில் உள்ள முக்கிய கோரிக்கைகள்: ​”வாக்குறுதி என்னாச்சு? காணி விடுவிப்பு எப்போது? “ – தங்களுக்கு வழங்கப்பட்ட காணி விடுவிப்பு தொடர்பான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமை? ​”நீதி எங்கே? நீதி எங்கே? தமிழ் மக்களின் நில உரிமை எங்கே?” – பூர்வீக நிலங்களை இழந்து தவிக்கும் தமிழ் மக்களின் அடிப்படை நில உரிமை மற்றும் நீதிக்கான கோரிக்கை. ​”நாடா? … இராணுவ ஆட்சியா?” – தங்களின் வாழ்விடங்கள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிரான கண்டனம். ​பல வருடங்களாகத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளியில் அதிகரிக்கும் வீதி விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை கோரி கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் அதிகரிக்கும் வீதி விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை கோரி கவனயீர்ப்பு போராட்டம். கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் தொடர்பிலும், கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற அதிபர் திரு. பெருமாள் கணேசன் அவர்களின் மரணம் தொடர்பிலும், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தங்களது கவலைகளையும் கோரிக்கைகளையும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ். முரளிதரன் அவர்களிடம் முன்வைத்தனர். இதன்போது, குறித்த விபத்து தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட மாவட்ட அரசாங்க…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் உலக சுற்றாடல் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும்!

வடக்கு மாகாண விவசாய அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஶ்ரீ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக வவுனியா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் அ.அற்புதராஜா கலந்துகொண்டார்.முன்னதாக வவுனியா நகரசபை வாயிலில் இருந்து விருந்தினர்கள் ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து கலைநிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வடக்கில் முன்மாதிரியாக மாறிய சாரதி, நடத்துநர் – நேர்மைக்கு கௌரவிப்பு

பயணி ஒருவர் தவறிவிட்டுச் சென்ற பெறுமதியான நகை மற்றும் பணத்தை, நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்குப் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினல் பாராட்டுக்களும் கெளரவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. ​ கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், தனது பெறுமதியான நகை மற்றும் பணப்பையைத் தவறுதலாகப் பேருந்திலேயே விட்டுச் சென்றுள்ளார். இதனை அவதானித்த குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரான மகேந்திரன் கோகுலதீபன் மற்றும் L. ஜனார்த்தனன் ஆகியோர், அந்தப் பொருட்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு, உடனடியாக அவரிடம் ஒப்படைத்தனர். ​இவர்களின் இந்த உன்னதமான மனிதாபிமானச் செயற்பாட்டைக் கௌரவிக்கும் வகையில், வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பொறியளாலர் விமலேஸ்வரன் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. ​வடமாகாண பயணிகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

காருக்குள் மருத்துவர் சடலம்; காதலனும் மனைவியும் யாழில் கைது!

கண்டி –  தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதியினர் நேற்று (23) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டதாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதேவேளை கடந்த ஜூன் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், சந்தேகநபர் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பொலிஸாரின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கேப்பாபிலவு பூர்வீக மக்கள் ஆளுநரிடம் அவசர கோரிக்கை;

கேப்பாபுலவு பூர்வீக மக்கள் தங்களின் வாழ்விட உரிமை தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். கடிதத்தில், கடந்த 16 ஆண்டுகளாக தங்களின் பூர்வீக வாழ்விட உரிமையை நீதியான மற்றும் உண்மைத் தரவுகளின் அடிப்படையில் கோரி வருவதாகவும், அதற்கு மாறாக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் அநீதியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி 04.06.2026 அன்று மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசித்து பதில் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அதன்படி 14.06.2026 அன்று பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அன்றைய முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக இருந்தவர் தற்போதைய வட மாகாண ஆளுநராகவும் இருக்கின்றார். மக்களின் உண்மை நிலை, நலன்புரி நிலையங்களிலிருந்து அவர்கள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி சாத்தியமில்லை; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி சாத்தியமில்லை; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு தமிழ்மக்கள் மனிதப் புதைகுழிகளுக்கான நீதியை கோருவதுடன், தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி பேன்றவற்றிற்காகவும் தொடர்ந்து போராடிவருகின்றார்கள் எனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவற்றுக்கு விடையில்லாத வரை நல்லிணக்கம் எப்படி மலரும் எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி என்பது சாத்தியமில்லை எனவுஞ் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு ஒட்டுமொத்த தீவிற்கும் பௌத்த சிங்கள முலாம் பூசுவதாலோ, வரி அறவீடுகளைச் செய்வதாலோ நாடு அபிவிருத்தி அடையாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்தத் தீவின் பல்வகைமையை கண்ணியப்படுத்துவதுடன், இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் திணைக்களங்களை தூய்மைப்படுத்துமாறும், உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 23.06.2026இன்று உரைமாற்றும்போதே…

மேலும் படிக்க