தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பயணிகளை அலைக் கழித்து, கூடுதல் கட்டணமும் (NTC) காரி யாலயத்தில் பயணி கள் முறைப்பாடு

பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று பயணிகளை அலைக்கழித்து, கூடுதல் கட்டணமும் ஈட்டியதாக வவுனியா தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) காரியாலயத்தில் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளனர். பரந்தனில் இருந்து இன்று புறப்பட்ட NP 7487 இலக்கமுடைய இப்பேருந்து கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காலை 09:20 மணி வந்தடைந்து தரித்து நின்றது. அங்கிருந்து காலை 09:30 மணி வவுனியா நோக்கிப் பயணிக்க வேண்டிய பேருந்து, திட்டமிட்டபடி பயணிக்காமல், திடீரென மீண்டும் பரந்தன் நோக்கியே திரும்பிச் சென்றுள்ளது. பரந்தனுக்குச் சென்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து தரித்து நின்று வவுனியாவை வந்தடைந்த போது மணி மதியம் 12:15 ஆகி இருந்தது. கிளிநொச்சியில் இருந்து காலை 09:30 மணிக்கு வவுனியா வந்தடைந்திருக்க வேண்டிய பயணிகள், பேருந்தின் இந்தத் தன்னிச்சையான பின்னோக்கிய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளிநொச்சி மாவட் டத்தில் வீதி விபத்துகளைத் தடுத்தல் விழிப் புணர்வுக் கலந்துரை யாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (30.06.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், அண்மை நாட்களாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். அனைத்து சாரதிகளும் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டிருந்தாலும், வாகனம் செலுத்துவதற்குத் தேவையான பொறுப்புணர்வும் மனநிலையும் எப்போதும் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். எனவே, இளைய சமூகத்தினருக்கு தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் பெறுமதிமிக்க உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார். மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்ப்பாணம் செம்மணியில் 427 தீப்பந்தங்கள் ஏற்றி மக்கள் எழுச்சிப் போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணியில் 427 தீப்பந்தங்கள் ஏற்றி மக்கள் எழுச்சிப் போராட்டம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள அணையா விளக்கு திடல் பகுதியில், மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் “உரிமைப்பந்தம்” என்ற அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த காலங்களில் செம்மணி பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக இந்த விழிப்புணர்வுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில், செம்மணி அணையா விளக்கு தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உலகளவில் பேசப்பட்ட ஒன்றான நிலையில், அங்கு தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுடன், கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகளின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவது நாளாக தொடர் போராட்டம்

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் 28.06.2026இன்று ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த ஐந்தாம் நாள் போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். குறிப்பாக கேப்பாப்பிலவில் 55குடும்பங்களுக்குரிய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4குடும்பங்களுக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளநிலையில், அந்த பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியே காணிகளுக்குரிய மக்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. மேலும் இந்த ஐந்தாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டத்தரணி குமாரசிங்கம் கம்சன், சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திருமதி.மாதுசனா…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கத்தி வெட்டு தாக்குத லுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து ள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 39 வயதுடைய ரகு துஷ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணை தகவலின்படி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் முன்னதாக வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். அப்போது, அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ். போதனா வைத்தியசாலைக்கு ரூ. 300 மில். செலவில் அதிநவீன AI தொழில் நுட்ப கேத் ஆய்வகம்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு ரூ. 300 மில். செலவில் அதிநவீன AI தொழில்நுட்ப கேத் ஆய்வகம் ரூ. 300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட அதிநவீன கேத் ஆய்வகப் பிரிவை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையில் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன இதய ஆய்வகம் (Cath Lab ), சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் பிரசன்னத்தில் நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தால் ரூ. 300 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட இந்த நவீன இதய ஆய்வகம், இதய நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: வீடு ஒன்றில் இருந்து 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றா சீனிப் பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சுரேந்திரன் அவர்களின் ஆலோசனையின் கீழ் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா அவர்களின் வழிப்படுத்தலில் நெளுக்குளம் பொது சுகாதார பரிசோதகர் ம.அன்ரன் தலைமையில் பூவரசன்குளம் பொது சுகாதார பரிசோதகர் டிலுக்சன், கூமாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் பவிந்திரன், சாஸ்திரி கூழாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் துவாரகன் ஆகியோர் இணைந்து பொலிசாரின உதவியுடன…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒட்டு சுட்டான் தட்டாமலை இணைப்பு வீதியின் சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

ரவிகரன் எம்.பியின் தொடர் கோரிக்கை; ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் ஒட்டுசுட்டான் தட்டாமலை இணைப்பு வீதியின் தாழ்நிலப்பகுதியின் சீரமைப்புபணிகள் ஆரம்பம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏம்பல் குளத்து நீரால் மூடப்படும் தட்டாமலை, ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதியின் தாழ்வாக உள்ள பகுதியை சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தநிலையில், குறித்த பகுதியை நீர் ஓடும் கட்டுமானங்கள் (பெட்டி மதகுகள்) உடனான உயர்த்தப்பட்ட பாதையாக சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில், இரண்டு கோடியே ஒருஇலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பதுரூபாய் என்னும் ஒப்பந்தத் தொகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுவரும் சீரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒட்டுசுட்டான்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தமிழர் இருப்புக்கு தொடரும் சவால்கள் – அருட்தந்தை மா. சத்திவேல்

செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல், இலங்கையில் ஆயுதப் போரின் பின்னரும் தமிழர் இருப்புக்கான சவால்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (27) வெளியிட்ட ஊடக அறிக்கையில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, 1948 சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் அரச கட்டமைப்பின் ஆதரவுடன் பல தசாப்தங்களாக செயல்பட்டு வருவதாகவும், இதன் பாதிப்புகள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழர்கள் மீது தொடர்ந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கு–கிழக்கு பகுதிகளிலும், மலையகத்திலும் நில ஆக்கிரமிப்பு, குடியேற்ற நடவடிக்கைகள், பௌத்த சின்னங்கள் அமைத்தல் உள்ளிட்ட காரணங்களால் தமிழர் தாயகப் பரப்புகள் குறைக்கப்படுகின்றன என்றும், இதன் மூலம் மக்கள் சுயமாக இடம்பெயர்க்கப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழர் தாயகத்தில் காணிகள் படையினரும் அரச…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி;

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி; 2027இல் புலிபாய்ந்தகலிற்கு 53.5மில்லியன், முல்லை கடற்கரைக்கு 80மில்லியன் நிதி ஒதுக்கப்படுமென பதில் முல்லைத்தீவு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்கென 53.5மில்லியன் ரூபாயும், முல்லைத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்காக 80மில்லியன்ரூபாயும் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன்போது துறைசார் அதிகாரிகளால் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழு அறையில் 25.06.2026இன்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவலகள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம்…

மேலும் படிக்க