அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன்

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன் எம்.பி கோரிக்கை; கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்கிறார் –  அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த கோரிக்கையை உரியவகையில் பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 09.06.2026இன்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும். அன்றைய தினம் பரீட்சைக்கான நேர அட்டவணை பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: இரண்டாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை. முதலாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை.இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவற்றுக்கான விரிவான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளமை…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன்

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து விஜயரத்தினம் சரவணன் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்த வேலைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைத்தவுடன் பாடசாலைகளின் திருத்த வேலைகள் விரைவாக அரம்பிக்கப்படுமெனவும் வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தித்வா புயலினால் முல்லைத்தீவு கல்விவலயத்தில் 32பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகளிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது. அதில் 09பாடசாலைகளின் திருத்த வேலைகள் 2025இல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இந்த ஆண்டில் 15பாடசாலைகள் திருத்த வேலைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தன. அதாவது சிறு திருத்த வேலைகளுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அந்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சொல்லிசை பாடகரை சிறையில்சந்தித்த சிறிதரன்

சொல்லிசை பாடகரை சிறையில்சந்தித்த சிறிதரன் எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார். குறித்த பாடகரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள சிறிதரன் இன்று (08), பாடகரை சிறைச்சாலையில் சந்தித்து , நம்பிக்கையூட்டியுள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன்

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மூன்று மாதத்திற்கு பிற்பாடு காணியை விடுவிக்க இணங்கிய பொலிஸார் முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக  விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து குறித்த காணியை விடுவிப்பதற்கு பொலிசார் மூன்றுமாத காலஅவகாசம் கோரியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள காணியை எப்போது விடுவிக்கப்போகின்றீர்கள். அந்தக்காணி மு.நாகம்மா என்பவருக்குரிய ஒரு தனியார் காணியாகும். குறித்த காணி விடுவிப்புத் தொடர்பாக மாகாணசபைக் காலத்திலும் வலியுறுத்தியிருக்கின்றேன். இருப்பினும் இதுவரை குறித்த காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அந்தக்காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்கள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி. 8 வயது சிறுவன் பலி

பொத்துவில் – பாணம பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதிய வேளையில் பசரச்சேனை பகுதியில் வீதியோரமாக சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஒன்று உந்துருளி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில்  உந்துருளி ஓட்டுநரும் சிறுவனும் படுகாயமடைந்தனர். சம்பவத்தையடுத்து இருவரும் உடனடியாக பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வருடங்களும் 10 மாதங்களும் வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், வீதிகளில் வாகனங்களை இயக்கும் போது வேகக் கட்டுப்பாடு மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

விவசாயிகளி டமிருந்து சிறுபோக நெற் கொள்வனவு மேற்கொள்ளப் படவேண்டும் – ரவிகரன்

விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் சிறுபோக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள சூழலில், தாமதமின்றி துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03.06.2026நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கிவருகின்றது. இந்நிலையில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நெற்கொள்வனவில் தாமதங்கள் ஏற்படுமா? அத்தோடு சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து  கொள்வனவுசெய்து களஞ்சியப்படுத்துவதற்கு  நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் உள்ளதா? இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினர் விளக்கங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இங்குள்ள நெற் களஞ்சியசாலைகளில் நெல் நிரம்பியிருப்பதாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மூதூரில் வீதி புனரமைப்பின்போது – புதைக்கப்பட்ட கைக்குண்டு மீட்பு

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள நெய்தல் நகர் மையவாடி வீதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (04) காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் – நெய்தல் நகர் பகுதியிலுள்ள குறித்த வீதியின் புனரமைப்பு பணி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது போத்தலில் அடைக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இக் கைக்குண்டு தென்பட்டுள்ளது. இதனையடுத்து வீதி புனரமைப்பு வேலை செய்தவர்களால் மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட போத்தலில் மற்றுமொரு கைக்குண்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அவ்விடத்தில் பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற அனுமதியை பெற்றதன் பின்னர் கைக்குண்டுகள் மீட்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

முதியோர் இல்லம் தீக்கிரை; 11 பேர் தீயில் கருகி பலி – மூவர் மாயம்!

களுத்துறை மாவட்டம், ஹொரணை,  அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக இல்லத்தில் இருந்த சிலர் தீயில் கருகியுள்ளனர். அவ்வாறு தீயில் கருகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், மனநலக்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறிப்பிட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைத் தயாரித்துக் கொள்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க