அண்மை செய்தி இலங்கை செய்தி. 

18 வயது கனேடிய யுவதி ரூ. 35 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 352.65 மில்லியன் தெரு மதிப்பிலான போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி ஒருவர் இலங்கைச் சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (NCU) கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார். நேற்று (23) இரவு 10.40 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK 648 எனும் விமானம் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து துபாய் ஊடாக வருகை தந்த குறித்த யுவதியின் 2 பயணப் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதற்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 35.265 கிலோகிராம் ‘ஹஷிஷ்’ (Hashish) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் ரூ. 352.65 மில்லியன்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வடக்கில் முன்மாதிரியாக மாறிய சாரதி, நடத்துநர் – நேர்மைக்கு கௌரவிப்பு

பயணி ஒருவர் தவறிவிட்டுச் சென்ற பெறுமதியான நகை மற்றும் பணத்தை, நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்குப் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினல் பாராட்டுக்களும் கெளரவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. ​ கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், தனது பெறுமதியான நகை மற்றும் பணப்பையைத் தவறுதலாகப் பேருந்திலேயே விட்டுச் சென்றுள்ளார். இதனை அவதானித்த குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரான மகேந்திரன் கோகுலதீபன் மற்றும் L. ஜனார்த்தனன் ஆகியோர், அந்தப் பொருட்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு, உடனடியாக அவரிடம் ஒப்படைத்தனர். ​இவர்களின் இந்த உன்னதமான மனிதாபிமானச் செயற்பாட்டைக் கௌரவிக்கும் வகையில், வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பொறியளாலர் விமலேஸ்வரன் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. ​வடமாகாண பயணிகள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி சாத்தியமில்லை; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி சாத்தியமில்லை; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு தமிழ்மக்கள் மனிதப் புதைகுழிகளுக்கான நீதியை கோருவதுடன், தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி பேன்றவற்றிற்காகவும் தொடர்ந்து போராடிவருகின்றார்கள் எனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவற்றுக்கு விடையில்லாத வரை நல்லிணக்கம் எப்படி மலரும் எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி என்பது சாத்தியமில்லை எனவுஞ் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு ஒட்டுமொத்த தீவிற்கும் பௌத்த சிங்கள முலாம் பூசுவதாலோ, வரி அறவீடுகளைச் செய்வதாலோ நாடு அபிவிருத்தி அடையாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்தத் தீவின் பல்வகைமையை கண்ணியப்படுத்துவதுடன், இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் திணைக்களங்களை தூய்மைப்படுத்துமாறும், உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 23.06.2026இன்று உரைமாற்றும்போதே…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஆசிரியர் பரீட்சையில் அநீதி; பட்டதாரிகள் நாம் தெருவில் – யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்ப்புப் போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே  இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அதனால்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பதவிநிலை சமாதான நீதிவான்களாகச் சத்தியப் பிரமாணம்!

வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள், பதவிநிலை சமாதான நீதிவான்களாக இன்றையதினம் (23) உத்தியோகபூர்வமாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஊர்காவற்றுறை நீதிமன்றக் கட்டடத்தில், ஊர்காவற்றுறை நீதவான் கௌரவ அனீபா ரஜீவ் முன்னிலையில் இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, நீதவான் முன்னிலையில் தத்தமது பதவிகளுக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டு அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டனர். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கான சான்றுப்படுத்தல்கள், அவசர தேவைகள் மற்றும் பிரதேச மட்டத்திலான மக்கள் நலச் சேவைகளை இன்னும் விரிவாகவும், சட்டபூர்வ அதிகாரத்துடனும் முன்னெடுப்பதற்கு இந்த நியமனம் தங்களுக்குப் உறுதுணையாக அமையும் எனச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சபை உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டப் பலன்களை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இக் கொடுப்பனவு 270,025 தகுதியான குடும்பங்களுக்குக் கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கமைய, மொத்தம் 3,287,163,750 ரூபா (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய் தொகை, இன்று உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக அச்சபை மேலும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வவுனியா மாநகர சபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதை களுடன் நுழைந்த உறுப்பினர்கள்

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதைகளுடன் நுழைந்த உறுப்பினர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22.06) இடம்பெற்ற வவுனியா மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடை உத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை நடவடிக்கை மீது விதிக்கப்பட்ட தடைஉத்தரவை நீக்கி உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து எட்டு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் செயற்ப்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சபையின் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சபைக் கூட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு (Evan Papageorgiou) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் இணையவுள்ளனர். இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்யவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

புதுக்குடியிருப்பு குணா கலைக்கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – குணா கலைக்கல்லூரியில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது 20.06.2026இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். இந்நிகழ்வானது விருந்தினர் மற்றும் சாதித்த மாணவர்கள் ஆகியோரது வரவேற்புடன் ஆரம்பமானது. அந்தவகையில் விருந்தினர்களும், சாதனை மாணவர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தவில், நாதஸ்வர இசை முழக்கத்துடன் மலர்தூவி வரவேற்று அழைத்துவரப்பட்டனர். அதனையடுத்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றதுடன், அதனையடுத்து பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். அதனையடுத்து விருந்தினர்களது உரை, மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி பிடிப்பு..கயேந்திர குமாரின் கேள்வி

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி பிடிப்பு..கயேந்திர குமாரின் கேள்வியால் திண்டாடிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் குழப்பம் விளைவித்த என்பிபி ஆதரவாளர்கள். * பொலிஸார் வரவழைப்பு *அனுர அரசின் போலி வக்குறுதிகள் *யுத்தத்துக்கு பின்னரும் காணி பிடிப்பு தொடர்கிறது. *போலி வாக்குறுதிகளை வழங்கும் அனுர அரசு.. கயேந்திரகுமார் காட்டம் யாழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அரச காணியை கடற் படையின் தேவைக்காக யாழ் மாவட்ட செயலக காணி பயன்பாட்டு குழு வழங்கிய விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்வியால் குழப்பநிலை ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதை இவ்வாறான நிலை ஏற்பட்டது. குறித்த விடையம் தொடர்பில் பாராளுமன்ற…

மேலும் படிக்க