அண்மை செய்தி தாயகச் செய்தி 

தந்தை செல்வநாயகத்தின் 128 ஆவது ஜனன தினம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 128 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று (31)மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தது இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர மேயர் க. செல்வராசா (சுப்ரா), உப்பு வெளி பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ், தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் வி. விஜய குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இதேவேளை,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் பிறந்தநாள் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் எதிர் கால அபிவிருத்தி க்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்குமென, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ட்ரூ பெற்றிக்  தெரிவித்தார்.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்  சந்தனஅபயரத்ன  மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக்  ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல், அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தும் வகையில், இந்த சந்திப்பு இடம் பெற்றது.பல்வேறு நெருக்கடியான காலங்களில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் இச்சந்திப்பில்,பாராட்டினார். அத்துடன் நாட்டின் பல அபிவிருத்தித் துறைகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.இலங்கையின் தற்கால அரச சேவை கட்டமைப்பிலுள்ள பழைய முறைகளுக்குப் பதிலாக, அவை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் சீரமைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இதற்கான மனிதவளப் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு முதியவர் சடலம்

யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (31) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதான காசிப்பிள்ளை மதுருபாகன்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த முதியவர் நேற்று (30) சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணி  நேற்று திங்கட்கிழமை (30.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த அகழ்வுப் பணி இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமையும்(31.03.2026) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.அகழ்வு இடம்பெறும் அவ்விடத்தில் இதுவரையில் எதுவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார கட்டணம் அதிகரிப்பு.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது அதன்படி 0 – 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது. மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.…

மேலும் படிக்க