அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை மீட்பு

திறப்பனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (03) செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரன்கல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணை ஒன்றிலேயே இந்தச் சட்டவிரோத டீசல் சேமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது 10 பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை பொலிஸார் மீட்டதுடன், இது தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காகக் கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோமரன்கல்ல, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (04) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கட்டி முடிக்கப்படாம லுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்க;ரவிகரன்

கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்க; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து. கட்டிமுடிக்கப்படாமலுள்ள பாடசாலைக்கட்டடங்கள் தொடர்பில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை முழுமைப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடுமுழுவதும் 468கட்டிமுடிக்கப்படாத பாடசாலைக்கட்டடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 356பாடசாலைக்கட்டடங்களைக் முழுமைப்படுத்துவதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதும் சில கட்டடங்களை முழுமைப்படுத்துவதில் சில நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதன்போது பதிலளித்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, அந்தச் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்பட்ட பிற்பாடு குறித்த நிர்மாணப்பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவுந்தெரிவித்துள்ளார். அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கான வேறு வகுப்பறைகள் இல்லாதநிலையில், முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது  தாமதமோ ஏற்படாது. அமைச்சர் குமார ஜயகொடி

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது  தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக கட்டமைப்பு தொடர்பில் அச்சமூட்டி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவர்  மேலும் உரையாற்றியதாவது,மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையை அரசாங்கம்  என்ற ரீதியில் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் அதனால் ஏற்படும் பாதிப்புக்குள் மற்றும் நெருக்கடி நிலைமையை அரசாங்கம் என்ற ரீதியில்  முகாமைத்துவ செய்ய முடியும். எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ  அல்லது தாமதமோ ஏற்படாது. நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.எரிபொருள் விநியோக கட்டமைப்பு  தொடர்பில்  அச்சமூட்டி மக்களை தவறாக  வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இறக்குமதி செய்யப்படும் மசகு  எண்ணெய் தொகையை சுத்திகரித்து அவற்றை களஞ்சியப்படுத்தி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அடங்கிய இந்த முக்கிய குழுவின் சார்பில், பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். தற்போது முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்புச் சட்டம்’, முந்தைய சட்டத்தை விடவும் பாரிய மனித உரிமை மீறல் கவலைகளைத் தோற்றுவிப்பதாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்க அமைவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமுள்ள காணிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டாலும், அந்தச் செயல்முறை…

மேலும் படிக்க