உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது. இதில் 5,000 பவுண்ட் (சுமார் 2,268 கிலோகிராம்) எடை கொண்ட ‘டீப் பெனெட்ரேட்டர்’ மற்றும் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளதுசில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கப் படைகள் ஈரானின் கடற்கரைப் பகுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள கடினமாக்கப்பட்ட ஈரானிய மிசைல் தளங்களுக்கு பல 5,000 பவுண்ட் டீப் பெனெட்ரேட்டர் முனிஷன்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தின. இந்தத் தளங்களில் உள்ள ஈரானிய ஆண்டி-ஷிப் க்ரூஸ் மிசைல்கள் (கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள்) சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் (அல்லது பெருமளவு…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

இலங்கை க்கு வழங்கப் பட்ட உலங்கு வானூர்தி கள்.இலங்கை க்கு அனுப்பி வைப்பு.

அமெரிக்காவால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக  உலங்கு வானூர்திகள்.தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10  வானூர்திகளும்.மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த வானூர்திகளும்., இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த  வானூர்திகளும்.இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பண மோசடி குற்றங்க ளுக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணை

மன்னாரில் பண மோசடி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக  கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை நேற்று பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணையில் செல்ல மன்னார் நீதவான் உத்தரவிட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஒரு சந்தேக நபரைக் கைது செய்தது. தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், அதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டு ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுள்ள தங்க நகைகள் வாங்கியுள்ளதாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தனியார் பேருந்து சேவைக்கு 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தனியார் பேருந்து சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக வாராந்த அடிப்படையில் 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் (Kilometers) அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த நடைமுறை முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை, தனியார் பேருந்துகள் தமக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) டிப்போக்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அரசின் இந்த முடிவுக்குப் பதில் அளித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, டிப்போக்கள் ஊடாக மாத்திரம் எரிபொருள் வழங்கும் நடைமுறை பாரிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வாரத்திற்கு குறைந்தது 35 லிட்டர் எரிபொருள் தேவைப் படுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள்

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் மேலாண்மை அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைக்க போதுமானதாக இல்லை என்று  முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டங்களைத் தொடங்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த முறையின் கீழ் முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாரத்திற்கு 15 லிட்டர் எரிபொருள் ஒதுக்கப்படுவதாக சாரதிகள் குறிப்பிட்டனர்.ஆனால் வாகனத்தை முதன்மை வருமான ஆதாரமாக நம்பியிருப்பவர்களுக்கு இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். முச்சக்கர வண்டிகள் வழக்கம் போல் இயங்க, சாரதிகள் வாரத்திற்கு குறைந்தது 35 லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.ஒதுக்கீடு திருத்தப்படாவிட்டால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர். இதற்கிடையில், பாடசாலை போக்குவரத்து இயக்குநர்கள் மற்றும் தனியார் பேருந்து…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பாடசாலை மாணவர்களுக்கான உதவித்திட்டம் முன்னெடுப்பு…!

பாடசாலை மாணவர்களுக்கான உதவித்திட்டம் முன்னெடுப்பு…! ஜேர்மன் நாட்டில் வசிக்கும் திரு. சுஜித்குமார் மற்றும் அந்நாட்டின் லேயர் வோக்கோஸ்ற் பகுதியில் வசிக்கும் ஈழத் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த நிதிப் பங்களிப்பில், திரு. நிமலன் பிருந்தாபன் மற்றும் மேனாள் வட மாகாண சபை உறுப்பினர் திரு. பரஞ்சோதி ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. ​கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கிவைக்கப்பட்டது. ​இதன்போது உரையாற்றிய வித்தியாலயத்தின் முதல்வர், “இன்றைய நாள் எமது பாடசாலை வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான நாள். ‘தேவை’ என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அது நிறைவேறப் பல மாதங்கள் ஆகும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றைய தினம் 16 ஆம் திகதி வெப்பச் சுட்டியானது மனித உடலில் உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில், காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது. அதிக வெப்பமான சந்தர்ப்பங்களில் அதிகளவு நீரை அருந்துவது, வயல் வௌிகள் போன்ற இடங்களில் தொழிலில் நீண்ட நேரம் ஈடுபடுதலை தவிர்த்தல், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வௌியில் செல்வதை தவிர்த்தல் சிறுவர்கள் வெயிலில் விளையாடுவதைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமை ப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

வளமான நாடு -அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 7 கிலோமீற்றர் நீளமான காரைநகர் சுற்றுவட்ட வீதியில், ஏற்கனவே 2 கிலோமீற்றர் நீளமான பகுதி புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பணிகளின் ஒரு பகுதியாக 2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேலும் எஞ்சியுள்ள 3 கிலோமீற்றர் வீதி, “டித்வா” மீள்கட்டுமானத் திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, இவ்வாண்டுக்குள் முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.இப்பணிகளின் போது முறையான வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், தாழ்வான பகுதிகளில் வீதியை உயர்த்தி நிலையான முறையில் புனரமைப்பதும் திட்டமிடப்பட்டுள்ளது.நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

போதைப்பொருள் அற்ற தேசம் அதிரடிச் சோதனைகளில் 906 பேர் கைது

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது:- நேற்று ஒரே நாளில் மாத்திரம் 965 சுற்றிவளைப்புச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளுக்கமைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 510 கிராம் ஹெரோயின், 788 கிராம் ஐஸ், 70 கிலோகிராம் 264…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை பொதுவான செய்திகள் 

பிரியான்ஸ்க் ஏவுகணைத் தாக்குதல்: புதிய மோதலின் விளிம்பில் ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றம் பிரியான்ஸ்க் ஏவுகணைத் தாக்குதல்: புதிய மோதலின் விளிம்பில் ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ✦ ரஷ்யா–உக்ரைன் போரின் விரிவடைதலும் மேற்கத்திய நாடுகளின் மறைமுக நேரடி தலையீடும் – ஒரு ஆழமான மூலோபாயப் பகுப்பாய்வு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✦ ஐரோப்பிய போரில் ஒரு புதிய வெடிப்புப் புள்ளி 2026 மார்ச் 10 அன்று ரஷ்யாவின் எல்லை நகரமான Bryansk (பிரியான்ஸ்க்) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யா–உக்ரைன் போர் ஒரு ஆபத்தான புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (United Kingdom) மற்றும் பிரான்ஸ் (France) ஆகிய நாடுகளுக்கிடையில் கடுமையான இராஜதந்திர மோதலை உருவாக்கியுள்ளது.…

மேலும் படிக்க