நள்ளிரவு உத்தி யோகபூர் வமாக வெளியிடப் பட்டுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 176,527 மாணவர்கள், அதாவது 62.64% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை Doenets.lk மற்றும் Results.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் பார்வையிட முடியும். மேலும், இன்று (01.04.2026) முதல், மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி onlineexams.gov.lk இணையதளத்தின் மூலம் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்வி அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பெறுபேறுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக…
மேலும் படிக்க