போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த பிரதி அமைச்சர்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரிப் போராடிய ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த ஊடகப் பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம், இந்த அரசு ஊடகவியலாளர்களுக்கு எப்போதுமே நீதியைப் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்று யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கே. செல்வகுகுமார் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் நேற்று முன்னெடுத்த கவனவீர்ப்புப் போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடன் இணைந்து பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த அரசும் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. புதிய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் விசாரணைகளைத் துரிதப்படுத்தாததைக் கண்டித்தே நாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம். கடந்த காலங்களில் நாம் கோரிக்கைகளை…
மேலும் படிக்க