சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

நந்தக்கடலில் முள்ளி வாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2026இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

புளியங்கூடலில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் 5 ஆம் நாளான இன்று  வேலணை – புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கபட்டது. தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பட்டில் புளியங்கூடல் சந்தியில்  பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் இன்று (16) இரவு 7.00 மணியளவில்   முள்ளிவாய்க்காலின் வலிகளை இறுதிவரை அனுபவித்தவரும் மாவீரரது சகோதரனுமான சண்முகலிங்கம் அகஷ்கரன் அவர்களால் ஈகச்சுடர் ஏற்றபட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. 2009 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் மக்கள் எதிர்கொண்ட பட்டினி மற்றும் மனிதாபிமான அவலங்களும் நினைவுகூரப்பட்டதுடன் திடலில் நாட்டிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீபங்கள் கூடி நின்ற மக்களால் ஏற்றப்பட்டதுடன் அழிப்பின் அடையாள…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

போரதீவில் முள்ளிவாய்க் கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அரிசியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை(15) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அப்பகுதி பொதுமக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினர்.

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

முள்ளிவாய்க்கால் 2009: தியாகத்தின் சாட்சியமும் விடுதலையின் நித்தியக் கனவும்.

முள்ளிவாய்க்கால் 2009: தியாகத்தின் சாட்சியமும் விடுதலையின் நித்தியக் கனவும் யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═════════════════⊰❉⊱ மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள், இலங்கை உள்நாட்டுப் போரின் கடைசி கட்டமாக மட்டுமல்லாமல், உலக அரசியல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட வரலாற்றில் மிகுந்த சர்ச்சையையும் வேதனையையும் ஏற்படுத்திய காலமாகவும் நினைவுகூரப்படுகின்றன. பல தமிழர்களின் நினைவகத்தில், முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இராணுவ மோதலின் முடிவு அல்ல; அது பாதுகாப்பற்ற பொதுமக்கள் சிக்குண்ட மனிதாபிமான பேரழிவின் அடையாளமாக வாழ்கிறது. போரின் இறுதி கட்டத்திற்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல ஆண்டுகளாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக் கூடாது – ரவிகரன் எம்.பி

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அலர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.05.2026நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் கஞ்சி:ஒரு இனத்தின் குறியீடு

முள்ளிவாய்க்கால் கஞ்சி: ஒரு இனத்தின் ஈழத் தமிழர்களின்மன உறுதியையும் பறைசாற்றும் ஒரு குறியீடு முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது வெறும் உணவுப் பண்டம் அல்ல; அது ஈழத் தமிழர்களின் வரலாற்றில் அழியாத வடுக்களையும், அதே சமயம் அவர்களின் மன உறுதியையும் பறைசாற்றும் ஒரு குறியீடு. வரலாற்றுப் பின்னணி 2009-ஆம் ஆண்டு ஈழப்போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, வன்னிப் பெருநிலப்பரப்பில் மக்கள் ஒரு சிறிய பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டனர். அங்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை இலங்கை அரசு தடுத்ததால், கடும் பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பயங்கரமான சூழலில், கிடைத்த சொற்ப அரிசியைக் கொண்டு அதிக நீர் சேர்த்து காய்ச்சப்பட்ட இந்தக் கஞ்சியே பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காத்தது. கஞ்சியின் முக்கியத்துவம் பசியின் அடையாளம்: குண்டுகள் மழைபோல் பொழிந்த வேளையிலும், பதுங்கு குழிகளுக்குள் இருந்த மக்களுக்குக் கிடைத்த ஒரே ஆகாரம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நேற்றையதினம் ஆரம்பமானது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நேற்றையதினம் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பிரிவாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டனர். இதேவேளை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளை சுமந்தவாறு முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும் வடக்கு – கிழக்கு எங்கும் பயணிக்க தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இடம்பெற்றது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

கனடாவில் வரலாறு படைத்த தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாள்!

கனடாவில் வரலாறு படைத்த தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாள்! கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழினப் படுகொலை நினைவகம் (Tamil Genocide Monument) திறக்கப்பட்டு நேற்றுடன் (மே 11, 2026) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி, சிங்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் இந்த நினைவகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் பூர்வீக தாயகமான தமிழீழத்தின் வரைபடம் மற்றும் வடக்கு-கிழக்கின் ஒன்பது மாவட்டங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்களுடன் 4.8 மீட்டர் உயரத்தில் இந்த நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணி: 2021-இல் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்குப் பதிலடியாக, பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) தலைமையிலான மாநகராட்சி இந்த நினைவகத்தை அமைப்பதாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

சுவிற்சர்லாந்து பேர்ன் மாநகரில் “வைரக்குடுவை” நூல் அறிமுக விழா – 2026

சுவிற்சர்லாந்து பேர்ன் மாநகரில் “வைரக்குடுவை” நூல் அறிமுக விழா – 2026 ****************************** யாழ்/உரும்பையூர் து.திலக் (கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து வீரகேசரி வார வெளியீட்டில் வாரந்தோறும் எழுதிய படைப்பாளர் பார்வை “வைரக்குடுவை” தொகுதி 01, ஆளுமைகள் 25 நூல் அறிமுகவிழா கடந்த 09.05.2026 சனிக்கிழமையன்று சுவிற்சர்லாந்து Eropaplatz B1, 3008 Bern எனும் இடத்தில் தாயக அறிவிப்பாளர் ஜனனி கார்த்திகேசு தலைமையில் தமிழர் களறி ஆவணக்காப்பக வெளியீடாக அறிமுகமானது…… இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கினை பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருச்சுனையர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுத சுவிகள் ஆலயம் சார்பாக சோமசுந்தரம் விநாயகமூர்த்தி, ஈழத்தின் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார், நூலாசிரியரின் உறவினர் நாகலிங்கம் மகேஸ்வரன், செங்காளன் மாநிலத்திலிருந்து வருகை தந்த சமூக ஆர்வலர் திரு.வீரகத்தி சிவராசா, ராதா நடனாலய அதிபர் முதுகலைமாணி திருமதி.ஞானசுந்தரி வாசன்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி 21 மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்டநேரம் வெயிலில் இருப்பதால் மக்கள் சோர்வை உணரக்கூடும், அதே சமயம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பதால் வெப்பத் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும். எனவே நிலவும் உயர் வெப்பநிலை…

மேலும் படிக்க