இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

நள்ளிரவு உத்தி யோகபூர் வமாக வெளியிடப் பட்டுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று  (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 176,527 மாணவர்கள், அதாவது 62.64% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை Doenets.lk மற்றும் Results.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் பார்வையிட முடியும். மேலும், இன்று (01.04.2026) முதல், மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி onlineexams.gov.lk இணையதளத்தின் மூலம் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்வி அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பெறுபேறுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடபகுதி கடற் பரப்பு க்களில் அதிகரித் துள்ள இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்.ரவிகரன்

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; கண்காணிப்பு கருவிகள் பழுதடைந்துள்ளனவா எவும் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 31.03.2026நேற்று கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணி  நேற்று திங்கட்கிழமை (30.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த அகழ்வுப் பணி இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமையும்(31.03.2026) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.அகழ்வு இடம்பெறும் அவ்விடத்தில் இதுவரையில் எதுவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்ட விரோத கடற் றொழில் செயற்பாடு களைக் கட்டுப் படுத்த அரசு வக்கற்றிருக் கின்றது; ரவிகரன்

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசு வக்கற்றிருக்கின்றது; கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசுவக்கற்றிருப்பதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார். எனவே இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவில் 30.03.2026இன்று இடம்பெற்ற சட்டவிரோத தடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்துக் கடற்பரப்புக்களையும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் எமது அப்பாவி மீனவர்கள் மிக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையில் வெப்ப நிலை 40 பாகை செல் சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்!

இலங்கையில் 02.04.2026 முதல் 15.04.2026 வரை வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்  என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 02.04.2026 முதல்  15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனியாவுக்கும் நேராகவும், 08.04.2026 அன்று மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி….

மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி…. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கங்கத்தின் பிரதி தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம் சலீமிற்கு நேற்று சனிக்கிழமை (28) காரைதீவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மூன்று தசாப்த காலமாக சிரேஷ்ட ஆலோசகராகவும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்து இன,மத வேறுபாடின்றி வாழ்நாள் முழுவதும் ஊடகத்திற்காக குரல் கொடுத்து மறைந்த ஏ.எல்.எம் சலீமின் தியாகங்களை நினைவு கூர்ந்து இந் நிகழ்வு இடம்பெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் ச.லோகநாதன் தலைமையில் அவரது இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்பமாக அன்னாருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொழிற்சங்க வளர்ச்சிக்காக அமரர் ஏ.எல்.எம் சலீம் யுத்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வவுனியா பிரமனாலங்குளம் மக்களிடமிருந்து அரசியல்வாதிகளுக்கு கண்டன அறிக்கை

வவுனியா – பிரமனாலங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள், சமீபகாலமாக தமிழ் அரசியல்வாதிகள் பொதுத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வரும் இன, பிரதேச மற்றும் மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தும் கருத்துகள் குறித்து வன்மையான கண்டனத்தை இன்றையதினம் (27.03.2026) வெளியிட்டுள்ளனர். நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபங்களுக்காகவும் அதிகாரப் போட்டிகளுக்காகவும் வெறுப்புப் பேச்சுகளை பயன்படுத்துவது சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமையை முன்னிட்டு, பிரமனாலங்குளம் மக்களால் அவசர வேண்டுகோளாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கிய கோரிக்கைகள்: அரசியல்வாதிகள் இன, மொழி மற்றும் பிரதேச அடிப்படையிலான வெறுப்புப் பேச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அரசியல் நாகரிகத்தை பேணி, மக்களின் பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக அணுக வேண்டும். அரசியல் கட்சிகள் தார்மீக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மட்டு. கொலை, சந்தேக நபர்களுக்கு விரைவில் உயரிய தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்…

மட்டு கொலை, கொள்ளைச் சம்பவ சந்தேக நபர்களுக்கு விரைவில் உயரிய தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்… மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதுடன், அத்தண்டனை இவ்வாறான சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துமாறு அமைய வேண்டும் எனக் கோரியும், சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்றைய தினமும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 20ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இவர்களில் பிரதான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மூடப்பட்ட புகை யிரதக் கடவைக ளைத் திறக்க நடவடிக்கை….!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மூடப்பட்ட புகையிரதக் கடவைகளைத் திறக்க நடவடிக்கை….! யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகளையும் சபைக்கு வழங்கியிருந்தார். ​குறிப்பாக, “யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரவுண் வீதி முதலாம் ஒழுங்கை – அன்னசத்திர முதலாம் ஒழுங்கைப் பகுதியில் மூடப்பட்டுள்ள புகையிரதக் கடவையை மீளத் திறப்பதன் மூலம், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து அசௌகரியங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு” முன்வைக்கப்பட்ட முன்மொழிவை அடுத்து, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

மோடி – அநுரவுக்கு இடையிலான பேச்சு எரிபொருளுடன் நாளை வரும் கப்பல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் கப்பல் ஒன்று கிடைக்கவுள்ளது. 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க