தனியார் பேருந்து சேவைக்கு 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தனியார் பேருந்து சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக வாராந்த அடிப்படையில் 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் (Kilometers) அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த நடைமுறை முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை, தனியார் பேருந்துகள் தமக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) டிப்போக்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அரசின் இந்த முடிவுக்குப் பதில் அளித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, டிப்போக்கள் ஊடாக மாத்திரம் எரிபொருள் வழங்கும் நடைமுறை பாரிய…
மேலும் படிக்க