சிறுவர்களி டையேயும் டெங்கு காய்ச்சல் தீவிரம் இலங்கை மருத்துவ சங்கம்
நாட்டில் தற்போது சிறுவர்களிடையேயும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளமையால், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியமாக பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளின் சி. கித்துள்வத்த வலியுறுத்தியுள்ளார். டெங்கு பரவல் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் நேற்று (30) இலங்கை மருத்துவ சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காய்ச்சல் ஏற்பட்டுள்ள காலப்பகுதியில் ஓய்வு மிக அவசியம். பரீட்சை, போட்டி நிகழ்வு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். இதனால் நோய் தீவிரமடையலாம். பொதுவாக காய்ச்சல், தலைவலி, கடுமையான உடல் வலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படக்கூடும். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் தகுதிவாய்ந்த வைத்தியரை நாடி இரத்த…
மேலும் படிக்க