இலங்கை செய்தி. செய்திகள் 

2025 கல்வி சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்.!

ப்ரவரி 17 முதல் தொடங்குகிறது.இம்முறை, 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் கலந்து கொள்கின்றனர் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை நாளை முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறும். பரீட்சை நடைபெறுமுன், பரீட்சார்த்திகள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தங்கள் மத்திய நிலையங்களில் இருப்பது அவசியமாகும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பரீட்சைக்கு தோற்ற மாணவர்கள் இன்று மனதை அமைதியாகவும் சுமூகமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவப் பீடத்தின் பேராசிரியர் விசேஷ மனநல மருத்துவர் மியரு சந்திரதாச பரிந்துரை செய்துள்ளார். மாணவர்கள் தங்கள் படிப்பில் மன அழுத்தமின்றி கவனம் செலுத்துவதன் மூலம் பரீட்சைச் சோதனையில் சிறந்த முடிவை பெறலாம்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்குச் சென்று, குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் இன்று (14) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலக கிளைகளை முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்து வைக்கவும் அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத, இம்முறை  க.பொ.த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய வசதி

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதி

மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதி வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் 15ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியொன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களில் உள்ள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் அடிப்படையிலான கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விசா விநியோக சேவைகள் என்பன வழமை போல் இடம்பெறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் நேற்று (13) காலை முதல் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததன் காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தன. இந்தநிலையில் குறித்த சேவைகளை பெறச் சென்றவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

கிவுல் ஓயா திட்டத்தில் குடியேற்றங்கள் நிறுவப்படாது

வெளிமாவட்டங்களிலிருந்து புதிய குடியேற்றங்களை அமைக்கும் திட்டம் கிவுல் ஓயா திட்டத்தில் இல்லையென்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவரென்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் அரசால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டிலே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது; கிவுல் ஓயாத் திட்டம் 2007ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவிருந்தது.கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்க்ஷ , மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகிய அனைவரும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.துரதிஷ்டவசமாக இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முறையாகக் காணப்படவில்லை. இதனால் இத்திட்டத்தை முன்நகர்த்த முடியாதிருந்தது.கொழும்பிலிருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படு வதாலேயே, தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அச்சங்கள் எழுந்துள்ளன. நீர்பாசனத் திட்டங்களைப் பயன்படுத்தி 1983ஆம் ஆண்டிலிருந்து குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையால், தமிழ் மக்கள் மத்தியில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்

வடக்கு மற்றும் கிழக்கு உலக வங்கியின் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்திக்காக 100 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2026 முதல் 2031 வரை முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் சுற்றுலா, மீன்பிடித் துறை மேம்பாடு மற்றும் தனியார் முதலீடுகளைக் கவருதல் ஊடாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வருமானத்தை அதிகரிக்க 2017 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்!

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், வரி முறையை வலுப்படுத்தவும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025.05.19 இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த புதிய சட்டமூலத்தை விரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடவும், பாராளுமன்ற அங்கீகாரத்தை பெறவும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லை.மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லையென கொழும்பு பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஆகையால் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டியுள்ளதாகவும் அதற்கு சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வலுப்படுத்தப்படுவது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட  விசேட  செய்தியிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “முழுமையான சுதந்திரத்தை அடைய சட்டத்தின் ஆட்சி இன்றியமையாதது.  சட்டத்தை  சமமாகவும் நீதியுடனும் கடைப்பிடிக்கும்  சமூகமே  உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.  நாட்டின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது  பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் இலங்கை பெரிதளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூற முடியாது.  உண்மையான சுதந்திரமென்பது வெறும் அரசியல் சுயாட்சி மட்டுமல்ல. அது நீதியும் சமத்துவமும் பொறுப்புணர்வும் நிலவும் சமூக அமைப்பை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் உத்தியோகபூர்வ முன்மொழிவொன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளித்து வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை தடுப்பது இதன் நோக்கம் அல்லவென்பதுடன், சிறுவர்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இம்முன்மொழிவு கையளிக்கப்பட்டமைக்கான நோக்கமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க இதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதுடன், அதற்கான கால அவகாசம் தொடர்பிலும் தெரிவித்தார். இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஆலோசனை அவசியப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது…

மேலும் படிக்க