சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணவில்லை.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் (வெள்ளிக்கிழமை)   தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமல் போனவர்களை மீட்பதற்காகப் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலிருந்து சுமார் 10 படகுகளும், முனை பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளும் என 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சக மீனவர்கள் இன்று அதிகாலை முதலே கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் புதன்கிழமை (27) கடலுக்குச் சென்ற இவர்களைத் தேடி சக மீனவர்கள் சென்றிருந்த போதிலும், பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், இன்று வானிலை சற்றே சாதகமாக உள்ளதால் தேடுதல் பணி முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு ஜனாதிபதி அனுரா திசநாயக்க.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தற்போது இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீடித்து ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என். எஸ். இந்த நீட்டிப்பு, ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்டு, மே 28, 2026 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு எண் 2490/06 மூலம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் முறையான செயல்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகம் மற்றும் சேவைகளை தடையின்றி பராமரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அந்த வர்த்தமானி அறிவிப்பில் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

மாகாண சபை தேர்தலை நடத்து வதற்கு ஜேவிபிக்கு கொள்கையும், தோல்வியும் தான் காரணம்..டக்ளஸ்

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு பணம் ஒரு பிரச்சனையாக அமையாது கொள்கையும், தோல்வியும் தான் அவர்களை தேர்தலை நடத்துவதற்கு பின்னடிக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;அண்மையில் ஜே வி பி என் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அரசாங்கத்திடம் பணம் இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையாளர் அரசாங்கம் தேர்தலை நடத்துமாறு கேட்டால் அதனை நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது என ஏற்கனவே அறிவித்திருந்தது. இவ்வாறான ஒரு நிலையில் ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மாகாண சபை தேர்தலை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முச்சக்கரவண்டி சாரதியை மயக்கி காட்டுக்குள் வீசிவிட்டு கொள்ளை – மட்ட க்களப்பில் அதிர்ச்சி

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், அதன் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவரிடமிருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயங்கிய நிலையில் ரிதிதென்னை காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த  முச்சக்கரவண்டி சாரதி நேற்று வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். சம்பவதினமான நேற்றுமுன்தினம் (27) பிற்பகல் 3:00 மணியளவில் வீடு சென்று மதிய உணவை உட்கொண்ட அவர், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இரவு 7:00 மணியளவில் இரவு உணவிற்காக இடியாப்பம் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதாகத் தனது உறவினர்களுக்குக் கைபேசி மூலமாகத் தெரியப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், மட்டக்களப்பு நகரின் ஆட்டோ…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மட்டு. தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் பல திடுக்கிடும் தகவல்கள்!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதான சந்தேகநபர் உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்வையிடுவதற்காக தமது தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகள் பதுளையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்றிருந்தனர். இதன்போது அவர்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, விடுதிக்குள் ஏற்பட்ட தீப்பரவலில் 3 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும், 5 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர். ​ இந்த நிலையில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

களுத்துறையில் ; துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு!

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 8.59 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பாலியல் குற்றவாளி களை காப்பாற்றாதே” – நீதி கேட்டு கொந்த ளித்த வடகிழக்கு பெண்கள்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு’ அமைப்பினால் இன்று மட்டக்கப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் “பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக…” பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்”மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம், சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பில்  ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மகா சங்கத்தின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேண விரைவில் புதிய சட்டம்! அநுரகுமார

மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்குத் தேவையான சட்டங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற ‘2570 ஆவது ஸ்ரீ புத்த ஆண்டு அரச வெசாக் விழாவின்’ ஆரம்ப நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மத மறுமலர்ச்சி இன்றியமையாததாகும். உன்னத புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக, நமக்குள்ள பொறுப்புக்களைச் சரியாக இனங்கண்டு கைகோர்ப்பதே இந்த வெசாக் புண்ணிய தினத்தில் நாம் எடுக்கக்கூடிய சிறந்த உறுதிமொழியாகும். நாம் ஆன்மிக ரீதியாக வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதற்கு இணையாகப் பொருளாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் போது ஆன்மிக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றோம்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

உக்ரைன் மீது மரண நிழல்: மாஸ்கோவின் எச்சரிக்கை உலகப் போரின் புதிய கட்ட த்தை அறிவிக்கிறதா?

உக்ரைன் மீது மரண நிழல்: மாஸ்கோவின் எச்சரிக்கை உலகப் போரின் புதிய கட்டத்தை அறிவிக்கிறதா? கீவை காலி செய்ய ரஷ்யா எச்சரிக்கை — ஐரோப்பா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தும் மாபெரும் இராணுவ பதற்றம் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ தாக்குதலை எதிர்நோக்கும் தலைநகர் கீவ் உக்ரைனின் தலைநகரமான கீவ் தற்போது முழுமையான போர் அச்சத்தின் கீழ் நிற்கிறது. சமீபத்திய மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மற்றும் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்யா வெளிப்படையாக அறிவித்துள்ளது. உக்ரைனின் “இராணுவ-தொழில்துறை அமைப்புகள்”, ட்ரோன் உற்பத்தி மையங்கள், கட்டளை தலைமையகங்கள், உளவுத்துறை மையங்கள் மற்றும் “முடிவெடுக்கும் மையங்கள்” மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படும் என மாஸ்கோ அறிவித்துள்ளது. இந்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இலங்கை சிறை யிலுள்ள தமிழக மீனவர்களை விடு விக்க வேண்டும்! மோடியிடம் விஜய் கோரிக்கை

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது. இதன்பின், சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இருவரும் தமிழ்நாடு மற்றும் தேசிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார்…

மேலும் படிக்க