செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் நாவற்குழி பகுதியில் வாகனம் விபத்து இரு இளைஞர்கள் உயிரிழந்து ள்ளனர்.

கிளிநொச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து சம்பவம் நாவற்குழி பகுதியில் நேற்று (14.01.2026) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக டிப்பர் வாகனம் மின்கம்பம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பம், சுவர் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இரு இளைஞர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா தற்காலிகமாக நிறுத்தம்.அமெரிக்க

ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா (Immigrant Visa) வழங்கலை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் என, அமெரிக்க வெளியுறவுத் துறை உள்குறிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விசாக்களை மறுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான நடைமுறைகள் திரையிடல் (screening) மற்றும் சரிபார்ப்பு (vetting) நடைமுறைகளை வெளியுறவுத் துறை மீளாய்வு செய்யும் காலப்பகுதியில் இவ்வாறு வீசாக்களை மறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வீசா இடைநிறுத்தத் திட்டங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் அல்லது இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு பத்து மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது. பிரதான வீதியில் காவல்துறையினர் வீதிச்சோதனை நடத்திய நிலையில், உள்வீதியில் நின்ற போக்குவரத்து காவல்துறையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது போக்குவரத்து காவல்துறையினர் ரோச் லைட் அடித்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட போது அதனை மீறிச் சென்றவர்களை நிறுத்த சென்ற போதே இந்த நிலைமை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், காவல்துறையினர் இளைஞர்களை தலைக்கவசத்தினால் தாக்கியதுடன், அவர்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் தொடர்ந்து தாக்கியுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக , புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது

அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது   திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை ஜனவரி 19 வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 16 ஆம் திகதி குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், இது கரையோர பாதுகாப்பு சட்டங்களுக்கு முரணானது எனவும் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, போதிராஜ விகாரை என தெரிவிக்கப்படும் குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்ற முயன்ற போது, புத்த பிக்குகள் உள்ளிட்ட சிறு குழுவினரால் எதிர்ப்பு எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஈரானின் எச்சரிக்கை “எங்கள் மீது தாக்குதல் நடத்தினால்… பலமுனை மோதலுக்குத் தயாராகும் உலகம்

ஈரானின் எச்சரிக்கை உலகளாவியதாகிறது: “எங்கள் மீது தாக்குதல் நடத்தினால்…” — பலமுனை மோதலுக்குத் தயாராகும் உலகம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ தெருக்களில் வெடித்த போராட்டங்களிலிருந்து உத்திசார் முனைப்புவரை: ஈரானின் எல்லைகளைத் தாண்டிய ஒரு வரலாற்றுச் சிக்கல் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு இன்று எதிர்கொள்கிறது அதன் மிகக் கடுமையான அரசியல்–பாதுகாப்பு நெருக்கடியை. பொருளாதாரச் சரிவால் உள்நாட்டு அமைதியின்மையாகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது அமெரிக்கா, இஸ்ரேல், China, Russia மற்றும் European Union ஆகிய உலகச் சக்திகளை நேரடியாக ஈர்த்துள்ள முழுமையான புவிசார் அரசியல் மோதலாக மாறியுள்ளது. இராணுவ நகர்வுகள், ரகசிய உளவுத்துறை நடவடிக்கைகள், Cyber warfare, வர்த்தக இறுதி எச்சரிக்கைகள், தூதரக முறிவுகள் என நவீனப் போரின் அனைத்துப் பரிமாணங்களும் ஒரே நேரத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. இது, மத்திய கிழக்கில் தொடங்கி உலகளாவிய…

மேலும் படிக்க
உலக செய்திகள் 

போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி மக்களை வலியுறுத்தியுள்ளார்.

மதகுருமார்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் மதகுருமார்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை ஈரானிய அரசாங்கம் கையாண்டு வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகள் விரைவில் வந்து சேரும் என ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த உதவிகள் எத்தகையவை அல்லது அவை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. ஈரானில் கடந்த பல வருடங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியாகக் கருதப்படும் இப்போராட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கள் சர்வதேச ரீதியில் கவனத்தைப் பெற்றுள்ளன. ஈரானில் நிலவிய கடும் விலைவாசி உயர்வு…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஒரேஷ்னிக் • நேட்டோ • குளிர்காலப் போர்

ஒரேஷ்னிக் • நேட்டோ • குளிர்காலப் போர் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ஐநா மோதல்கள் | ஹைப்பர்சோனிக் தடுப்பு | ஐரோப்பாவின் பாதுகாப்பு நெருக்கடி அறிமுகம்: ஒரு ஆபத்தான திருப்புமுனை 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ரஷ்யா–உக்ரைன் மோதலில் மிகவும் கொந்தளிப்பான, ஆபத்தான தருணங்களில் ஒன்றாக 2026 ஜனவரி திகழ்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) அவசரக் கூட்டம், வெறும் இராணுவத் தீவிரப்படுத்தலை மட்டுமல்ல; இராஜதந்திர மொழியின் சரிவு, பரஸ்பர அங்கீகார மறுப்பு, உளவியல் போர், ஹைப்பர்சோனிக் ஏவுகணை மிரட்டல்கள் மற்றும் குளிர்காலத்தை ஆயுதமாக்கும் ஒரு புதிய மூலோபாய மாற்றம் ஆகியவற்றையும் வெளிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஹைப்பர்சோனிக் ஏவுகணைப் பயன்பாடு, உக்ரைனுக்கான நேட்டோவின் துரிதப்படுத்தப்பட்ட ஆயுத விநியோகங்கள், மேலும் ஐரோப்பாவின் இராணுவப் பிளவு மற்றும் பாதுகாப்பின்மை குறித்த ஆழமான அச்சங்கள்—இவை அனைத்தும் இந்த நெருக்கடியின் மையப் புள்ளிகளாக அமைந்துள்ளன.…

மேலும் படிக்க
கட்டுரை மருத்துவ குறிப்பு 

ஒரு சிகரெட் – முழு உடலையும் பாதிக்கும்” ஆரோக்கிய விழிப்புணர்வு குறிப்பு

“ஒரு சிகரெட் – முழு உடலையும் பாதிக்கும்” •───────────────• ஆரோக்கிய விழிப்புணர்வு குறிப்பு பலர் ஒரே ஒரு சிகரெட் தீங்கற்றது என நினைக்கிறார்கள். அது மிகப் பெரிய தவறு. ஒரு சிகரெட்டே சில விநாடிகளில் உங்கள் முழு உடலிலும் தீங்கான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 🧠 மூளை * நிகோட்டின் சில விநாடிகளில் மூளையை அடைந்து அடிமைத்தன்மையை உருவாக்குகிறது. * ஆக்சிஜன் அளவை குறைத்து நினைவாற்றல், கவனத்தை பாதிக்கிறது. * காலப்போக்கில் மூளை ரத்தக் கசிவு (Stroke) அபாயத்தை அதிகரிக்கிறது. ❤️ இதயம் & ரத்த நாளங்கள் * உடனடியாக இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. * ரத்த நாளங்களை சேதப்படுத்தி அவற்றை இறுக்கமாக்குகிறது. * இளம் வயதிலேயே இதய அதிர்ச்சி அபாயத்தை அதிகரிக்கிறது. 🫁 நுரையீரல் * காற்றுப் பாதைகளை எரிச்சலூட்டுகிறது; நுரையீரல் திசுக்களை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அரசியல் நோக்குடன் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் அ.அன்னராசா

அரசியல் நோக்குடன் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் அ.அன்னராசா எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் புதுச்சேரி, இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நெடுந்தீவு மற்றும் அனலைதீவு கடற்பரப்பிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றன. இவ்வாறு அவர்கள் இலங்கை கடற்பரப்பினை அழித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்குமாறு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அநுரகுமார அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு

அநுரகுமார அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு எதிர்வரும் 20/01/2026 ( புதன்கிழமை ) காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவில் எழுவைதீவு J/39 கிராம அலுவலர் பிரிவில் காளவாடியடைப்பு என்ற இடத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 53 பேர்ச்சஸ் அளவுள்ள காணி சிறீலங்கா கடற்படையின் எலரா படையணி முகாம் அமைப்பதற்காக நில அளவைக் காரியாலயத்தினால் சுவீகரிப்படவுள்ளது. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இதே காணியை கடற்படையினருக்காக அபகரிக்க முயன்றபோது எழுவைதீவு மக்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க