இலங்கை செய்தி. செய்திகள் 

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு,!

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் பணியாற்றியுள்ளார்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல்

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உ றுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், மற்றும் யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், யாழ்.பல்கலைழகமாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான மேற்படி கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகள், யானை – மனித மோதல், போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; நெல் உலர்த்திகளின் நிலை தொடர்பில் கேட்டறிந்தார்.

முல்லை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; நெல் உலர்த்திகளின் நிலை தொடர்பில் கேட்டறிந்தார். முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்திகளின் நிலைதொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இச்சந்திப்பானது முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள ஒரு நெல் உலர்த்தியும், பனங்காம்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்தியுமே பயன்பாட்டில் இருப்பதாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள மற்றுமொரு நெல் உலர்த்தியும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் குமுழமுனையிலுள்ள நெல் உலர்த்தியும், துணுக்காய் பலநோக்கு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ உரை இரத்து இனப்படுகொலையே காரணம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்கள் மீது ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- “ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த உரை அல்லது உரையாடல் நிகழ்வுகள் எந்தக் காரணத்துக்காகவும் இரத்துச் செய்யப்படுவதில்லை. அவ்வாறு இரத்துச் செய்வதை கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகவும், தன் புகழுக்கான இழுக்காகவும் அந்த நிறுவனம் கருதுகின்றது. இவ்வாறான நிலையில், நாமல் ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டமை அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதற்கு, நாமலின் குடும்பத்தால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையே காரணம். நாமல் ராஜபக்ஷவின் குடும்பம் தமிழர்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சொல்லொண்ணாத் துயரங்கள் உலகறிந்தவை. அந்தப் பாதகமான…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி;

வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; வீதிச் சீரமைப்புக்கள் குறித்து கலந்துரையாடல் முல்லைத்தீவுமாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 23.02.2026நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வீதிஅபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய சீரின்றிக் காணப்படும் வீதிகளின் சீரமைப்பு மற்றும் வய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

எல் மென்சோ — உலகின் மிக ஆபத்தான கார்டெல் வியூகவாதியின் எழுச்சி, ஆட்சி மற்றும் வீழ்ச்சிஒரு நிழல் பேரரசின் முடிவு

எல் மென்சோ — உலகின் மிக ஆபத்தான கார்டெல் வியூகவாதியின் எழுச்சி, ஆட்சி மற்றும் வீழ்ச்சி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✦ ஒரு நிழல் பேரரசின் முடிவு ‘எல் மென்சோ’ என அறியப்பட்ட நெமேசியோ ரூபன் ஒஸ்குவேரா செர்வாண்டஸ் கொல்லப்பட்ட சம்பவம், 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தபால்பா மலைப்பகுதியில் அமைந்திருந்த ரகசிய கட்டளைத் தளத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர ராணுவ நடவடிக்கையிலேயே அவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சண்டையின் போது கடுமையாக காயமடைந்த அவர், அவசர சிகிச்சைக்காக விமானம் மூலம் மாற்றப்பட்டபோது உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணம் நிகழ்ந்த சில மணிநேரங்களிலேயே வன்முறைச் செயல்கள் வெடித்தது, அவர் இறந்த பின்னரும் அவரது கட்டளை வலையமைப்பு செயல்பாட்டிலேயே இருந்ததை வெளிப்படுத்தியது. ✦ ஒரு கார்டெல் வடிவமைப்பாளரின் பின்னணி எல் மென்சோவின் வாழ்க்கை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்…!

பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்…! கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அண்மையில் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். ​குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். ​இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 34 காற்றாலைகளில், சுமார் 9 காற்றாலைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலும், செழிப்பான தென்னந்தோப்புக் காணிகளிலும் அமைக்கப்படவுள்ளன. இதனால் சுமார் 2,500க்கும் மேற்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள்…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் இறுதிக் கலந்துரையாடல்!

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய  அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி. சி. எஸ். றம்மியா ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரச அதிபர், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான இறுதிக் கலந்துரையாடலாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிற்ற ப்பட்ட சம்பவம் மாணவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக 30 மாணவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி, இது தொடர்பான இறுதி முடிவு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு இம்மாதம் 11ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கோரியிருந்தது.இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது.குறித்த விசாரணை அறிக்கையானது கடந்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.தேசிய புலனாய்வு முகவரியினால் வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து;

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து; வெள்ளியன்று நிலமைகளைப் பார்வையிட நேரில் வருகிறார் – கமநல உதவி ஆணையாளர் முல்லைத்தீவு – செம்மலை பெரியகுளத்தின் கட்டைச் சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், செம்மலை கிழக்கு பகுதியிலுள்ள புளியமுனையில் யானைவேலி அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல உதவி ஆணையாளரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைவிடுத்தது, குறித்த இடங்களுக்கு நேரில் வருகைதந்து பார்வையிடுமாறும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், எதிர்வரும் 27.02.2026 வெள்ளிக்கிழமையன்று குறித்த பகுதிக்கு நேரடியாக வருகைதந்து நிலமைகளைப் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 22.02.2026அன்று செம்மலைப் பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியதுடன்,…

மேலும் படிக்க