அண்மை செய்தி தாயகச் செய்தி 

பெரியவிளாத்தி க்குளம் அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளிக்கு நேரில் சென்ற ரவிகரன் எம்.பி; அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். வவுனியா – ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் பகுதியில் கடந்தவருடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டிருந்தது. இதன்போது புல்மோட்டை வயல்வெளிக்கான அணைக்கட்டு அமைப்பது தொடர்பிலும், வாய்க்காலை சீரமைப்பதுதொடர்பிலும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 13.02.2026அன்று இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைக்குமாறும், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் என ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.அத்துடன், இந்தத் தாக்குதல்களின் காரணமாக இலங்கை பிரஜை ஒருவர் உட்பட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 58 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி வந்த ஈரானிய ட்ரோன்கள் தரையில் விழுந்து வெடித்ததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி 165 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன், அவற்றில் 152 ஏவுகணைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் வானிலேயே அழித்து வெற்றி கண்டுள்ளனர். எஞ்சிய 13 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு மேலதிகமாக,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் நடவடிக்கை

பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிலையங்கள் ஊடாகத் தடையின்றி டீசல் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் உருவாகியுள்ள எரிபொருள் வரிசை தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இத்தருணத்தில் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இப்போதே முறையான…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கொழும்பு துறைமுக நகரக் கடற் பரப்பிலிருந்து ஆணின் சடலம்

கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபர் கடந்த 28ம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

மத்திய கிழக்கு போர்க்களம்: ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்க மோதலின் புவிசார் அரசியல் வெடிப்பு

மத்திய கிழக்கு போர்க்களம்: ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்க மோதலின் புவிசார் அரசியல் வெடிப்பு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✦. நேரடி ஏவுகணை மோதல்: மறைமுகப் போரின் முடிவும், வெளிப்படையான இராணுவத் தாக்குதலின் தொடக்கமும் மத்திய கிழக்கு பல தசாப்தங்களாக நேரடி போருக்கு பதிலாக பிரதிநிதி இயக்கங்கள், உளவுத்துறை ஊடுருவல்கள், பொருளாதாரத் தடைகள், மறைமுகத் தாக்குதல்கள் மற்றும் நிழல் யுத்தங்களின் மூலம் பதற்றத்தைத் தாங்கி வந்தது. ஆனால் இப்போது அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட மோதல் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்துள்ளது. ஈரான் தனது நிலப்பரப்பிலிருந்தே பாலிஸ்டிக் ஏவுகணைகள், தூரப் பாய்ச்சி ஏவுகணைகள் மற்றும் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் முப்பத்தைந்து உயர்திறன்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சிறுபோகத்திலும் நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சிய சாலைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – ரவிகரன்

நெல் சந்தைப்படுத்தல்சபை சிறுபோகத்திலும் தவறிழைக்க முடியாது; சிறுபோக அறுவடைக்கு முன்னரே நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. நெல்சந்தைப்படுத்தல் சபையினர் தமது களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகளை அகற்றாது தேக்கிவைத்திருந்ததன் காரணத்தினால் 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போக காலத்தில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்குரிய சிறுபோக காலத்திலும் நெல் சந்தைப்படுத்தல் சபை அத்தகைய தவறை செய்யக்கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறுபோக அறுவடைக்காலத்திற்கு முன்னரே நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் தேங்கியுள்ள ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரியவகையில் அகற்றப்பட்டு, சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி கொள்வனவுசெய்வதற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார் நிலையில் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு வன்னி மாவட்ட அபிவிருத்தி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இன ஒடுக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு! கவிஞர் காசி ஆனந்தன்

இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போர்க்களத்தில் வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு! கவிஞர் காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி!! சென்னை, பிப். 26   ‘பொதுவாழ்வில் தூய்மையாக வாழ்ந்த பொதுவுடைமையாளரை இழந்தோம். நெஞ்சம் நிமிர்த்தி உரிமை இழந்தோர் விடியலுக்காய் நெருப்பை எரிந்து வெடித்த தீப்பந்தமாய் அணைந்தது. வீறு கொண்ட தலைவராய் வாழ்ந்து ஆண்டுகள் நூறு கண்ட வீரவேங்கை விழி மூடியது. உலக விடுதலையாளர் நல்லகண்ணு ஐயா உயிர் மூச்சை நிறுத்தினார்.’ இவ்வாறு தமிழீழ நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன், நல்லகண்ணு ஐயா மறைவுக்குறித்த தனது இரங்கல் அஞ்சலியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் பதிவு செய்திருப்பதாவது:- நல்லகண்ணு ஐயாவின் முதலானிய ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள்-உழவர் போராட்டங்கள் – உயர் சாதிக்காரர்களின் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சாதி ஒழிப்புப் போராட்டங்கள் – ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

எரிசக்தி, இறையாண்மை மற்றும் தடைகள்: ஐரோப்பாவின் புதிய எண்ணெய் எல்லைப்போர்

எரிசக்தி, இறையாண்மை மற்றும் தடைகள்: ஐரோப்பாவின் புதிய எண்ணெய் எல்லைப்போர் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✦. துருஷ்பா குழாய் வழி: நட்பிலிருந்து நெருக்கடிக்குள் சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட Druzhba pipeline (Friendship Pipeline) இன்று ஐரோப்பிய அரசியல் மோதலின் மையநரம்பாக மாறியுள்ளது. உலகின் நீளமான எண்ணெய் குழாய் வலையமைப்புகளில் ஒன்றான இது, ரஷ்ய கச்சா எண்ணெயை மத்திய ஐரோப்பாவுக்கு — குறிப்பாக ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு — கொண்டு செல்கிறது. ரஷ்யா–உக்ரைன் போர் தீவிரமடைந்த நிலையில், இந்த குழாய் வழி எண்ணெய் ஓட்டம் குறித்த சர்ச்சை, தொழில்நுட்ப பிரச்சினையைத் தாண்டி புவிசார் அரசியல் மோதலாக மாறியுள்ளது. ✦. ஹங்கேரியின் நிலைப்பாடு: இறையாண்மை முன்னுரிமை ஹங்கேரி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரூ. 500 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் கைது

ரூ. 500 மில்லியனுக்கும் (ரூ. 50 கோடி) அதிகமான தெரு மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) பிற்பகல் அஹுங்கல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, 3 வெவ்வேறு சுற்றிவளைப்புகளில், பலபிட்டிய மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 13.032 கி.கி. ஐஸ் மற்றும் 14.112 கி.கி. ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார். இவர்களில் கைது செய்யப்பட்ட 41 வயதான, அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து 9 மி.மீ. பிஸ்டல் வகை கைத்துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும், 3.8 மி.மீ, வகை துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்..கைதான இரு சந்தேகநபர்களும் 41, 45 வயதுடைய பலபிட்டிய, அம்பலாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர்

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மட்டு கல்முனை சாலை வழியே பழுதான டிப்பர் ஒன்றை உழவு இயந்திரம் ஒன்று கட்டி இழுந்துக்கொண்டு சென்ற சமயம் உழவு இயந்திரத்தின் மேல் எதிர்பாராத விதமாக டிப்பர் ஏறியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது விபத்து நடைபெற்ற போது உழவு இயந்திர சாரதி கீழே குதித்து தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல் துறையினர். மேற்க்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க